Just In
- 3 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 3 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 4 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 5 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்தியாவில் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை விற்க வால்வோ முடிவு
வால்வோ கார் நிறுவனம் இந்தியாவில் பிளக் இன் ஹைபிரிட் மற்ம் எலெக்ட்ரிக் கார்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது, டீசல் கார்களை கைவிடுவதன் காரணமாக விற்பனையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இந்த முயற்
வால்வோ கார் நிறுவனம் இந்தியாவில் பிளக் இன் ஹைபிரிட் மற்ம் எலெக்ட்ரிக் கார்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது, டீசல் கார்களை கைவிடுவதன் காரணமாக விற்பனையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இந்த முயற்சியை அந்நிறுவனம் செய்துள்ளது. இதற்காக அந்நிறுவனம் சில புதிய மாடல் கார்களையும் விற்பனைக்கு கொண்டு வரவிருக்கிறது.
ஸ்விடிஷ் சொகுசு கார் நிறுவனமான வால்வோ கார் நிறுவனம் தற்போது இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் கார்களுக்கு பதிலாக இந்தியாவில் பிளக் இன் ஹைபிரிட் முற்றம் எலெக்ட்ரிக் தொழிற்நுட்பத்திலான கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளன.
ஆட்டோமொபைல் துறையின் தற்போது பிஎஸ்6 புகை உமிழ்வு கட்டுப்பாடு அடுத்தாண்டு நடைமுறைக்கு வரவுள்ளதிற்காக தயாராகி வருகின்றனர். பிஎஸ் 6 கட்டுபாட்டுடன் டீசல்கள் கார்களை தயாரிப்பது மிகவும் சிரமமான காரியம்.
டீசலில் இருந்து வெளியேறு புகையை கட்டுப்படுத்த பல வகைகளில் செலவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யப்படும் செலவுகளால் காரின் விலை அதிகமாகும். இதனால் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பில் இனி டீசல் இன்ஜின்களை பொருத்த போவதில்லை என முடிவு செய்துள்ளனர்.
அவ்வாறாக முடிவு செய்த நிறுவனம் தான் வால்வோ நிறுவனமும் இந்நிறுவனத்தின் கார்களுக்கு இந்தியாவில் ஒரளவிற்கு மவுசு உள்ளது. தற்போது டீசல் கார்களை அந்நிறுவனங்கள் நிறுத்தவுள்ளதால் தற்போது இருக்கும் ஒரே ஆப்ஷன் பெட்ரோல் தான்.
ஆனால் மக்கள் மத்தியில் டீசல் கார்களுக்கு இருக்கும் மவுசு பெட்ரோல் கார்களுக்கு கிடையாது. தற்போது இந்திய பெட்ரோலிய மார்கெட்டில் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே விலையில் விற்பனையானாலும் மக்கள் மத்தியில் பெட்ரோலை விட டீசல் தான் குறைந்த விலை எரிபொருள் என்ற எண்ணம் எழுந்துள்ளது.
இதனால் அந்நிறுவனத்தின் விற்பனை பாதிக்கப்படும் என அந்நிறுவனம் கருதியது. இதை சமாளிக்க தங்கள் நிறுவனத்தின் பிளக் இன் ஹைபிரிட் மற்றம் எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் களமிறக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து அந்நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில் :" தற்போது நாங்கள் முழுவதும் எலெக்ட்ரிக் கார்களில் கவனத்தை செலுத்த முடிவு செய்துள்ளோம். தற்போது இன்டர்னல் கம்பஷன் இன்ஜினில் நாங்கள் முதலீடு செய்வதை நிறுத்தி விட்டு நேரடியாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கவுள்ளோம்.
இந்தியாவிலேயே அசம்பிள் செய்யப்பட்ட முதல் ஹைபிரிட் காரை இன்னும் 18 மாதங்களிலும் எலெக்ட்ரிக் கார்களை 12 மாதங்களிலும், அறிமுகப்படுத்தவுள்ளோம். அதற்குள் இந்தியாவில் மக்கள் மத்தில் இந்த வகையான வாகனங்கள குறித்த போதிய அளவிற்கு பிரபலம் ஏற்பட்டு விடும் என நம்புகிறோம் என கூறினார்.
தற்போது வால்வோ காரின் எக்ஸ்சி90 என்ற எஸ்யூவி காரை இந்த நதியாண்டின் கடைசி காலாண்டின் அறிமுகப்படுத்தவுள்ளது. அதே நேரத்தில் இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் வாகனத்தையும் தயாரிப்பதை நிறுத்த போவதில்லை எனவும்.
எக்ஸ்சி 90 எஸ்யூவி வாகனத்தின் பிளக் இன் ஹைபிரிட் மாடலை டாப் மாடலில் அறிமுகமாகவுள்ளது. இந்த கார் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட எஸ்60 என்ற சொகுசு செடன் காருடன் இந்தியாவில் அறிமுகமாவுள்ளது எனவும் கூறப்படுகிறது.
எக்ஸ்சி 40 என்ற கார் தற்போது அறிமுகமாகியுள்ளது. இந்த கார் குறைந்த விலை எஸ்யூவி காராக விற்பனையாகிவருகிறது. இந்த கார் விற்பனையை இந்தாண்டில் 3000 கார்களும், வரும் ஆண்டில் ஆண்டிற்கு 5000 கார்களையும் விற்பனை செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த கார் மக்கள் மத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றால் ஆண்டிற்கு 10,000 கார்கள் வரை கூட விற்பனை செய்ய அந்நிறுவனம் தயாராக உள்ளது.
கடந்தாண்டு வால்வோ நிறுவனம் மொத்தம் 2,029 கார்களை விற்பனை செய்தது. இது கடந்தாண்டைவிட 28 சதவீத வளர்ச்சியாகும். தற்போது அந்நிறுவனம் சில கார்களை அறிமுகப்படுத்தவுள்ளதாலும் தங்கள் விற்பனையை மேலும் அதிகரிக்கவும், இந்தியாவில் மேலும் 5 டீலர்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்தின் டீலர் எண்ணிக்கை 27 ஆக உயரும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம்
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!