Just In
- 11 min ago ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
- 48 min ago சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
- 3 hrs ago ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
- 4 hrs ago ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
Don't Miss!
- Sports 17 வயது சிறுவனின் கனவை உடைத்து எறிந்த ட்ராவிஸ் ஹெட்.. ஈவு இரக்கமே இல்லாமல் அடித்த உலகக்கோப்பை நாயகன்
- Lifestyle வீட்டில் ரொம்ப பழைய பால் இருக்கா? அதை கீழ ஊத்தி வேஸ்ட் பண்ணாதீங்க... அதை வைச்சு இவ்வளவு விஷயம் செய்யலாம்...!
- News உதயசூரியன் சின்னம் வேண்டாம்.. பம்பரம் இல்லை என்றாலும் பிரச்சனையில்லை.. துரை வைகோ உறுதி
- Movies Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
இந்த போட்டியில் வென்றால் கிடைக்கும் பரிசு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் நீங்களும் பங்கேற்பீர்கள்
மிக பிரம்மாண்டமான பரிசு தொகையுடன் கூடிய போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசு தொகை மிக அதிகம் என்பதால், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நீங்கள் ஒரே நாளில் அம்பானி ஆகி விடக்கூடும்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு டெஸ்லா (Tesla) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதிக செயல்திறன் வாய்ந்த எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் டெஸ்லாவிற்கு நிகர் டெஸ்லாதான் என்று சொல்லலாம்.
பொதுவாக எலெக்ட்ரிக் கார்களின் செயல்திறன் குறித்து மிகப்பெரிய அளவில் சந்தேகம் எழுப்பப்படுகிறது. அதாவது எலெக்ட்ரிக் கார்கள் மலை ஏறாது, அதிக எடையை இழுக்காது என்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.
ஆனால் அவை எல்லாவற்றையும் டெஸ்லா நிறுவன எலெக்ட்ரிக் கார்கள் தவிடு பொடியாக்கி வருகின்றன. டெஸ்லா மாடல் எக்ஸ் பி100டி (Tesla Model X P100D) எலெக்ட்ரிக் கார், விமானத்தையே சர்வ சாதாரணமாக இழுத்து செல்லும் செயல்திறன் வாய்ந்தது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இது நிரூபித்தும் காட்டப்பட்டது. 1,30,000 கிலோ எடை கொண்ட போயிங் ரக விமானத்தை, டெஸ்லா மாடல் எக்ஸ் பி100டி கார் கயிறு கட்டி இழுத்து சென்றது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்தில் நடந்த இந்நிகழ்வு ஓர் உலக சாதனையாக கருதப்படுகிறது.
டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களில் பாதுகாப்பு அம்சங்களுக்கும் பஞ்சமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை நிரூபணம் செய்யும் வகையிலான ஒரு நிகழ்வு, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் நடைபெற்றது.
அப்போது வானில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்றில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. சிறிய ரக விமானம்தான் என்பதால், சாலையிலேயே அதனை தரையிறக்கி விட பைலட் உடனடியாக முடிவு செய்தார்.
இதன்படி விமானம் தரையிறங்கும்போது, சாலையில் சென்று கொண்டிருந்த டெஸ்லா மாடல் எக்ஸ் கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. ஆனால் காரின் உள்ளே இருந்தவர்களுக்கு சிறு கீறல் கூட விழவில்லை என்பதுதான் ஆச்சரியத்தின் உச்சகட்டம்.
இந்த சூழலில் சமீப காலமாக கம்ப்யூட்டர் ஹேக்கர்களின் (Computer Hackers) அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இணையதளங்களில் ஊடுருவும் ஹேக்கர்கள், அதில் உள்ள தகவல்களை திருடு விடுகின்றனர். அத்துடன் இணையதளங்களை முடக்கவும் செய்கின்றனர்.
இணையதளங்களில் மட்டும்தான் இந்த பிரச்னை என நினைக்க வேண்டாம். சமீப காலமாக கார் ஹேக்கிங் (Car Hacking) சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. ஹேக் செய்வதன் மூலமாக ஹேக்கர்கள், கார்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுகின்றனர்.
கார்களின் சாப்ட்வேர்கள் குறைபாடுகளுடன் வலுவற்று இருந்தால், ஹேக்கர்கள் மிக எளிதாக ஹேக் செய்து விடுவார்கள். வருங்காலங்களில் கார் ஹேக்கிங் பிரச்னை உலக அளவில் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தங்கள் நிறுவன கார்களுக்கு இந்நிலை ஒருபோதும் ஏற்பட்டு விடக்கூடாது என டெஸ்லா நிறுவனம் விரும்புகிறது. எனவே டெஸ்லா நிறுவன கார்களில் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர்கள் வலுவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 (Model 3) எலெக்ட்ரிக் காரின் சாப்ட்வேரில், பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் இருப்பதை கண்டறிந்தால் பரிசு வழங்கப்படும் என தற்போது அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஹேக்கிங் போட்டியின் பரிசு தொகை 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7.10 கோடி ரூபாய். டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் காரை யாரேனும் ஹேக் செய்து காட்டினால், இந்த பரிசு தொகையை தட்டி செல்லலாம்.
இதுதவிர டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் காரின் சாப்ட்வேரில் தவறு இருப்பதை முதலில் கண்டறியும் நபருக்கு, அதே டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாடல் 3 எலெக்ட்ரிக் காரின் பாதுகாப்பில் எவ்வித குறையும் இருக்காது என டெஸ்லா நிறுவனம் உறுதியாக நம்புகிறது. அதே நேரத்தில் ஒருவேளை யாரேனும் அதனை ஹேக் செய்து காட்டினால், தவறை திருத்தி கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். எனவேதான் இந்த போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குடும்பத்தோட ஜாலியா டூர் போகலாம்! கம்மி ரேட்ல விற்பனைக்கு வரப்போகும் மாருதியின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார்!
-
வட அமெரிக்காவில் தமிழக தயாரிப்பு.. "ஆள போறான் தமிழன் உலகமெல்லாமே" பாட்டுதான் ஞாபகம் வருது!
-
எல்லாரும் ராயல் என்ஃபீல்டை தேடி ஓடி வருவதற்கு காரணம் என்னவா இருக்கும்? கவாஸாகி ரொம்ப போராடுது!!