Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட ஹோண்டா சிட்டி கார்!
ஹோண்டா சிட்டி காரில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
வரும் ஜூலை 1 முதல் கார்களுக்கான புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி, கார்களில் சில அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்படுகிறது. இதற்கு தக்கவாறு பெரும்பாலான நிறுவனங்கள் கார்களில் கூடுதல் பாதுகாப்பு வசதிகளை சேர்த்து வருகின்றன.
அந்த வகையில், ஹோண்டா சிட்டி காரிலும் சில கூடுதல் பாதுகாப்பு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது ஹோண்டா சிட்டி காரின் முன் இருக்கை பயணிக்கான சீட் பெல்ட் ரிமைன்டர் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
தவிரவும், கார் 80 கிமீ வேகத்தை தாண்டி செல்லும்போது பீப் ஒலி எழுப்பி வேக எச்சரிக்கை செய்யும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹோண்டா சிட்டி காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் டியூவல் ஏேர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு வசதியாக அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த கூடுதல் வசதிகள் மூலமாக காரில் பயணிப்போரின் பாதுகாப்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் உள்ள ஹோண்டா சிட்டி கார் 2014ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
2017ம் ஆண்டு புதுப்பொலிவுடன் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. இந்த நிலையில், பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த கார் மேம்படுத்தப்பட்டுள்ளளது. எனினும், அதிக பாதுகாப்பு வசதிகள் நிரம்பிய புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் உருவாக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய மாடலைவிட வடிவத்தில் பெரிய கார் மாடலாகவும், அதிக இடவசதியுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு தரத்திலும் முற்றிலும் புதிய யுக கார் மாடலாக இருக்கும். இந்த காரில் ஏராளமான நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.
கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டாலும் விலையில் எந்த மாறுதல்களும் இல்லை. ரூ.9.68 லட்சம் முதல் ரூ.13.97 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.
மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருந்து வரும் ஹோண்டா சிட்டி கார் மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ, ஸ்கோடா ரேபிட் மற்றும் டொயோட்டா யாரிஸ் ஆகிய மாடல்களுடன் போட்டி போடுகிறது.
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!