சிறுவனை மகிழ்விக்கபோய் லைசென்ஸை இழந்த ஓட்டுநர்.. என்ன செய்தார் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!!

ஓடும் பேருந்தின் கியரை மாற்றி சிறுவன் விளையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு அனுமதித்த டிரைவரின் தற்போது நிலை என்பதுகுறித்த தகவலை கீழே காணலாம்.

சிறுவனை மகிழ்விக்கபோய் உரிமத்தை இழந்த ஓட்டுநர்... என்ன செய்தார் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!!

பேருந்து ஓட்டுநர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புணர்வை மறந்து செயல்படும் சம்பவங்கள் அண்மைக் காலங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. முன்பெல்லாம், பயணிகளை விரைவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாக பேருந்துகளை இயக்கியது போன்று, தற்போது தங்களின் தேவைக்காக அருகில் இருப்பவர்களை கியரை மாற்றி பேருந்தை இயக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

சிறுவனை மகிழ்விக்கபோய் உரிமத்தை இழந்த ஓட்டுநர்... என்ன செய்தார் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!!

அந்தவகையில், முன்னதாக கல்லூரி மாணவிகளை பேருந்தின் கியரை மாற்றச் சொல்லி குதூகலித்த ஓட்டுநரை போக்குவரத்து போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரின் ஓட்டுநர் உரிமத்தை ஆறு மாதத்திற்கு ரத்தும் செய்தனர். இந்த சம்பவத்தின் சூடு அடங்காதநிலையில், கேரள மாநிலத்தில் இதேபோன்றதொரு மற்றுமொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதனால், அம்மாநில போக்குவரத்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்றே கூறலாம்.

சிறுவனை மகிழ்விக்கபோய் உரிமத்தை இழந்த ஓட்டுநர்... என்ன செய்தார் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!!

ஏனென்றால், இந்த சம்பவத்தில் கேரளவைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஒருவர் சிறுவனை வைத்து ஓடும் பேருந்தின் கியர்களை மாற்றியுள்ளார். அந்த ஓட்டுநரின் பெயர் கேவி சுதீஷ் என தெரியவந்துள்ளது. இந்த குற்றத்திற்காக அவரின் ஓட்டுநர் உரிமம் ஆறு மாதங்களுக்கு தற்காலிமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக மலையாள மனோரமா பத்தரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சிறுவனை மகிழ்விக்கபோய் உரிமத்தை இழந்த ஓட்டுநர்... என்ன செய்தார் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!!

சுற்றுலாப் பயணிகள் பேருந்தின் ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார் கேவி சுதீஷ். இவர் அண்மையில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருந்து திருவல்லா-மல்லபள்ளி சாலையில் பயணித்துள்ளார். அப்போது பேருந்தில் பயணித்த சிறுவனை வைத்து கியரை மாற்றியதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து இதுகுறித்த தகவல் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

சிறுவனை மகிழ்விக்கபோய் உரிமத்தை இழந்த ஓட்டுநர்... என்ன செய்தார் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!!

மேலும், இந்த வீடியோ கேரள ஆர்டிஓ அதிகாரிகளின் கண்களிலும் பட்டுள்ளது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கேவி சுதீஷ் சிக்கினார்.

ஓடும் பேருந்தின் கியர்களை சிறுவனை வைத்து மாற்றி சக பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்துக் கொண்ட குற்றத்திற்காக, அவரின் ஓட்டுநர் உரிமைத்தை போக்குவரத்து அதிகாரிகள் ஆறு மாதங்களுக்கு ரத்து செய்து உத்தரவிட்டனர்.

சிறுவனை மகிழ்விக்கபோய் உரிமத்தை இழந்த ஓட்டுநர்... என்ன செய்தார் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!!

இதற்கு மறுப்பு தெரிவித்த பேருந்தின் ஓட்டுநர் கேவி சுதீஷ், பேருந்தின் கியரை சிறுவன் மாற்றியபோது தாங்கள் பொது சாலையில் இல்லையென்றும், மாறாக ஓர் ஆளறவமற்ற விளையாட்டு மைதானத்திலேயே இவ்வாறு செய்ததாகவும் கூறினார். ஆனால், அதிகாரிகள் நடத்திய சோதனையில் இச்சம்பவம் சாலையிலேயே நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவினிலேயே அவரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிறுவனை மகிழ்விக்கபோய் உரிமத்தை இழந்த ஓட்டுநர்... என்ன செய்தார் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!!

ஓட்டுநர்கள் இதுபோன்று சக பயணிகளை வைத்து கியரை மாற்ற வைப்பது அல்லது பேருந்தை கட்டுபடுத்த கூறுவது மிகப் பெரிய ஆபத்துகளை விளைவிக்கும். பொது சாலையில் அதிக கவனத்துடன் செல்லும்போதே பெரும் விபத்துகள் ஏற்படுத்துகின்றன. இந்த சூழ்நிலையில், சிறுவர்களை வைத்து கியர்களை மாற்றுவது என்பது நம்மை மட்டுமின்றி சாலையில் பயணிக்கும் மற்ற வாகனங்களுக்கும் பேராபத்தை விளைவிக்கும்.

சிறுவனை மகிழ்விக்கபோய் உரிமத்தை இழந்த ஓட்டுநர்... என்ன செய்தார் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!!

இதன்காரணமாகவே முறையான பயற்சிக்கு பின்னர் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகின்றது. மேலும், ஓட்டுநர் உரிமத்தைப் பெற 18 வயதை பூர்த்தியடைந்திருந்தால் மட்டுமே முடியும் என போக்குவரத்து சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

சிறுவனை மகிழ்விக்கபோய் உரிமத்தை இழந்த ஓட்டுநர்... என்ன செய்தார் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!!

ஆனால், கேரளாவில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் நம்மை பெறும் அதிர்ச்சியில் உறைய வைக்கின்றது. சிறிய வாகனங்களைக் கட்டுபடுத்தவே பல முதிர்ந்த வயதுடையவர்கள் திணறும்நிலையில், தான் என்ன செய்கின்றோம் என்பதை உணராத சிறுவனை வைத்து கியரை மாற்றியதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Monday, December 2, 2019, 11:41 [IST]
English summary
Kerala Bus Driver License Suspended For Six Months: Here Is Why...?
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+