Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 2 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 3 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 4 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- Movies குழந்தை இருந்தாலும் பரவாயில்லை..மீனாவை திருமணம் செய்ய தயார்.. புயலை கிளப்பிய யூட்யூபர்
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சிறுவனை மகிழ்விக்கபோய் லைசென்ஸை இழந்த ஓட்டுநர்.. என்ன செய்தார் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!!
ஓடும் பேருந்தின் கியரை மாற்றி சிறுவன் விளையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு அனுமதித்த டிரைவரின் தற்போது நிலை என்பதுகுறித்த தகவலை கீழே காணலாம்.
பேருந்து ஓட்டுநர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புணர்வை மறந்து செயல்படும் சம்பவங்கள் அண்மைக் காலங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. முன்பெல்லாம், பயணிகளை விரைவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாக பேருந்துகளை இயக்கியது போன்று, தற்போது தங்களின் தேவைக்காக அருகில் இருப்பவர்களை கியரை மாற்றி பேருந்தை இயக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
அந்தவகையில், முன்னதாக கல்லூரி மாணவிகளை பேருந்தின் கியரை மாற்றச் சொல்லி குதூகலித்த ஓட்டுநரை போக்குவரத்து போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரின் ஓட்டுநர் உரிமத்தை ஆறு மாதத்திற்கு ரத்தும் செய்தனர். இந்த சம்பவத்தின் சூடு அடங்காதநிலையில், கேரள மாநிலத்தில் இதேபோன்றதொரு மற்றுமொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதனால், அம்மாநில போக்குவரத்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்றே கூறலாம்.
ஏனென்றால், இந்த சம்பவத்தில் கேரளவைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஒருவர் சிறுவனை வைத்து ஓடும் பேருந்தின் கியர்களை மாற்றியுள்ளார். அந்த ஓட்டுநரின் பெயர் கேவி சுதீஷ் என தெரியவந்துள்ளது. இந்த குற்றத்திற்காக அவரின் ஓட்டுநர் உரிமம் ஆறு மாதங்களுக்கு தற்காலிமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக மலையாள மனோரமா பத்தரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் பேருந்தின் ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார் கேவி சுதீஷ். இவர் அண்மையில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருந்து திருவல்லா-மல்லபள்ளி சாலையில் பயணித்துள்ளார். அப்போது பேருந்தில் பயணித்த சிறுவனை வைத்து கியரை மாற்றியதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து இதுகுறித்த தகவல் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.
மேலும், இந்த வீடியோ கேரள ஆர்டிஓ அதிகாரிகளின் கண்களிலும் பட்டுள்ளது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கேவி சுதீஷ் சிக்கினார்.
ஓடும் பேருந்தின் கியர்களை சிறுவனை வைத்து மாற்றி சக பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்துக் கொண்ட குற்றத்திற்காக, அவரின் ஓட்டுநர் உரிமைத்தை போக்குவரத்து அதிகாரிகள் ஆறு மாதங்களுக்கு ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த பேருந்தின் ஓட்டுநர் கேவி சுதீஷ், பேருந்தின் கியரை சிறுவன் மாற்றியபோது தாங்கள் பொது சாலையில் இல்லையென்றும், மாறாக ஓர் ஆளறவமற்ற விளையாட்டு மைதானத்திலேயே இவ்வாறு செய்ததாகவும் கூறினார். ஆனால், அதிகாரிகள் நடத்திய சோதனையில் இச்சம்பவம் சாலையிலேயே நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவினிலேயே அவரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஓட்டுநர்கள் இதுபோன்று சக பயணிகளை வைத்து கியரை மாற்ற வைப்பது அல்லது பேருந்தை கட்டுபடுத்த கூறுவது மிகப் பெரிய ஆபத்துகளை விளைவிக்கும். பொது சாலையில் அதிக கவனத்துடன் செல்லும்போதே பெரும் விபத்துகள் ஏற்படுத்துகின்றன. இந்த சூழ்நிலையில், சிறுவர்களை வைத்து கியர்களை மாற்றுவது என்பது நம்மை மட்டுமின்றி சாலையில் பயணிக்கும் மற்ற வாகனங்களுக்கும் பேராபத்தை விளைவிக்கும்.
இதன்காரணமாகவே முறையான பயற்சிக்கு பின்னர் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகின்றது. மேலும், ஓட்டுநர் உரிமத்தைப் பெற 18 வயதை பூர்த்தியடைந்திருந்தால் மட்டுமே முடியும் என போக்குவரத்து சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், கேரளாவில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் நம்மை பெறும் அதிர்ச்சியில் உறைய வைக்கின்றது. சிறிய வாகனங்களைக் கட்டுபடுத்தவே பல முதிர்ந்த வயதுடையவர்கள் திணறும்நிலையில், தான் என்ன செய்கின்றோம் என்பதை உணராத சிறுவனை வைத்து கியரை மாற்றியதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!