இந்தியாவில் தயாரான ஃபோர்டு ஃபிகோ: க்ராஷ் டெஸ்டில் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா...?
இந்தியாவில் தயாரான ஃபோர்டு ஃபிகோ செடான் ரக காரின் பாதுகாப்புகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

கார்களின் பாதுகாப்பு மற்றும் உறுதி தன்மைகுறித்து ஆய்வு மேற்கொள்ளும் என்சிஏபி அமைப்பு, அண்மையில் ஃபோர்டு நிறுவனத்தின் புதிய காரான ஃபோர்டு ஃபிகோ காரை மோதல் வினைக்கு உட்படுத்தி ஆய்வு மேற்கொண்டது.

இதில், அந்த கார் தேர்ச்சியடைந்து நான்கு ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. இந்த கார் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டாலும் இந்த கார் லத்தீன அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

தற்போது என்சிஏபி அமைப்பு நான்கு கதவுகள் கொண்ட செடான் ரக ஃபோர்டு ஃபிகோ கார் ஆகும். இதனை குஜராத் மாநிலத்தில் உள்ள சனாந்த் பிளாணட்டில் வைத்து தயாரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த காரை கடந்த வருடம்தான் ஃபோர்டு நிறுவனம், கணிசமாக அப்டேட் செய்தது. அதில், கூடுதலாக பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்தவகையில், புதிதாக ஏபிஎஸ், இஎஸ்சி, ஐசோபிக்ஸ் குழந்தைகள் இருக்கை மற்றும் முன்பக்க இருக்கை பெல்ட் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளது.

இத்துடன், சீட் பெல்ட் ரிமைண்டரும் ஸ்டாண்டர்டு வசதியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுநரின் கூடுதலாக பாதுகாப்பிற்காக கூடுதல் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ஓட்டுநரின் மார்பக பகுதிக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, காரின் ஓட்டுநருக்கு மட்டுமின்றி காரில் பயணிப்பவர்களுக்கும் பாதுகாப்பினை உறுதி செய்கின்ற வகையில் வசதி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இவையனைத்தையும் உறுதி செய்கின்ற வகையில், தற்போது மேற்கொள்ளப்பட்ட மோதல் வினையின் முடிவு வெளிவந்துள்ளது. இந்த முடிவிற்காக என்சிஏபி அமைப்பு, அந்த காரை அனைத்து கோணங்களிலும் வைத்து மோதல் க்ராஷ் டெஸ்ட் செய்தது. அதன் இறுதியிலேயே இத்தகைய முடிவு கிடைத்துள்ளது.

இந்த பரிசோதனையின்போது, 18 வயது மற்றும் மூன்று வயது உடைய மனித உருவத்திலான டம்மிகள் பயன்படுத்தப்பட்டன. அவை, விபத்தின்போது காருக்குள் ஓர் மனிதன் இருந்தால், எந்த அளவில் பின் விளைவுகளைச் சந்திக்குமோ, அந்த அளவிலான பின் விளைவை அந்த டம்மிகள் சந்தித்தன.
ஆனால், ஆச்சரியமளிக்கும் காருக்குள் இருந்த பாதுகாப்பு அம்சத்தின் காரணமாக லேசான சேதங்களை மட்டுமே அவ்விரு டம்மிகள் அடைந்தன.

இருப்பினும், ஃபோர்டு ஃபிகோ உடற்கூடு நிலையற்ற தன்மைக் கொண்டது என்ற மதிப்பைப் பெற்றுள்ளது. அதேசமயம், இந்த முடிவு ஃபோர்டு கா-விற்கு பொருந்தாது என என்சிஏபி தெரிவித்துள்ளது. இது பிரேசிலில் தயாரிக்கப்படுகின்றது.
இந்த கார்களுடன் ஃபோர்டு அஸ்பயர் செடான் ரக காரை ஒப்பிட்டு பார்த்தோமேயானால், இந்த கார் ட்யூவல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி மற்றும் அதிவேக அலர்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுள்ளது. இந்த காரில் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக தயாராகி விற்பனையாகி வருவது குறிப்பிடத்தகுந்தது.

இதேபோன்று, இந்தியாவில் விற்பனையாகும் மற்றுமொரு பாதுகாப்பு நிறைந்த காராக ஃபோர்டு டைட்டானியம் ப்ளஸ் ட்ரிம் மாடல் காட்சியளிக்கின்றது. இந்த காரில் ஆறு ஏர் பேக்குகள் உள்ளன. இத்துடன், இஎஸ்சி, டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








