Just In
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 8 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 9 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
புதிய ஹோண்டா ஜாஸ் கார் குறித்த ஏமாற்றமான தகவல்!
புதிய ஹோண்டா ஜாஸ் வருகை குறித்து இந்தியர்களுக்கு ஏமாற்றத்தை தரும் வகையில் புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் ஹோண்டா ஜாஸ் கார் முக்கிய போட்டியாளராக விளங்குகிறது. அனைத்து விதத்திலும் சிறப்பாக இருந்தாலும், விற்பனையில் மிக சுமாரான எண்ணிக்கையை மட்டும் பதிவு செய்து வருகிறது.
இந்த நிலையில், வடிவமைப்பு மற்றும் வசதிகளில் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட நான்காம் தலைமுறை மாடலாக ஹோண்டா ஜாஸ் கார் அண்மையில் டோக்கியோ மோட்டார் ஷோ மூலமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த கார் இந்தியாவிலும் வரும் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று ஆவலோடு ஹோண்டா பிரியர்கள் காத்திருந்தனர். ஆனால், அவர்களது கணக்கு தப்புக் கணக்காக மாறிவிடும் என்று தெரிகிறது. ஆம். புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான சாத்தியம் மிக குறைவாக இருக்கிறது.
ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வதற்கான அதீத தர கட்டுப்பாட்டு நிர்ணயத்துடன் ஹோண்டா ஜாஸ் கார் உருவாக்கப்படுகிறது. இந்த காரின் ஏ பில்லரின் தடிமன் மிக குறைவாக இருந்தாலும், மிக உறுதிமிக்க தர நிர்ணயித்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது.
இந்த காரை இந்தியாவில் களமிறக்குவதற்கு அதிக முதலீடு தேவைப்படும். அப்படி முதலீடு செய்து விற்பனைக்கு கொண்டு வந்தாலும், விற்பனை அந்தளவு இருக்காது என்று ஹோண்டா கணித்துள்ளது. எனவே, புதிய தலைமுறை ஜாஸ் காரை அறிமுகப்படுத்தி சூடுபட்டுக் கொள்ள வேண்டாம் என்று மிகவும் பாதுகாப்பாக இந்திய வர்த்தகத்தை கொண்டு செல்ல முடிவுசெய்துள்ளது.
எனவே, நான்காம் தலைமுறை ஹோண்டா ஜாஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு ஹோண்டா கார் நிறுவனம் விரும்பவில்லை என்று தெரிகிறது. அதேநேரத்தில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் விரைவில் வர இருப்பதால், அதற்கு தக்க மாடல் அவசியமாகிறது.
எனவே, தற்போது உள்ள ஜாஸ் காரில் பிஎஸ்-6 எஞ்சின் தேர்வுகளுடன் தொடர்ந்து விற்பனை செய்வதற்கு ஹோண்டா கார் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே, புதிய தலைமுறை ஜாஸ் கார் இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு அக்டோபர் 1 முதல் வர இருக்கும் பாதசாரிகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளுக்கு தக்கவாறே இப்போதைய மூன்றாம் தலைமுறை மாடல் வடிவமைக்கப்பட்டுவிட்டது. எனவே, இந்த கார் தொடர்ந்து அடுத்த ஓரிரு ஆண்டுகள் விற்பனையில் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்து ஹோண்டா நிறுவனம் எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.
Source: Autocarindia
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!