Just In
- 56 min ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 1 hr ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 2 hrs ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 4 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
Don't Miss!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
செல்லப்பிராணிகளுக்காக காரில் மாற்றம் செய்யும் டெஸ்லா!
அமெரிக்காவைச் சேர்ந்த தானியங்கி மின்சார கார் தயாரிப்பு நிறுவனம், தனது கார்களில் புதிதாக 'டாக் மோட்' மற்றும் 'சென்ட்ரி மோட்' எனப்படும் புதிய இரண்டு மோட்களை வரும் வாரத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தை தலைமையமாகக் கொண்டு இயங்கி வரும் டெஸ்லா நிறுவனம் மின்சார தானியங்கி கார்களைத் தயாரித்து வருகிறது. உலகின் அதிநவீன கார்களாக பார்க்கப்படும் இவை முழுக்க முழுக்க மின்சாரத்தால் மட்டுமே இயங்குகின்றது.
ஓட்டுநர் இன்றி தானாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் உலக செல்வந்தர்கள் மத்தியில் இந்த கார் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த காருக்காக அமெரிக்காவில் பல்வேறு சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த கார் இன்றளவும் இந்தியாவில் விற்பனையைத் தொடங்கவில்லை. இதற்கு இந்திய அரசின் சில விதிமுறைகள் தடையாக இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனாலும், டெஸ்லா காரை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
டெஸ்லா இதுவரை மாடல்3, மாடல் எஸ், மாடல் எக்ஸ், ரோட்ஸ்டெர் மற்றும் செமி ஆகிய ஐந்து மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும், விற்பனையை அதிகரிக்கும் விதமாக மாடல்3யின் விலையை அந்த நிறுவனம் சமீபத்தில் குறைத்து அறிவித்தது.
ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்த காரின் வருகையால், மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே பெரும் கலக்கத்தில் உள்ளன. இந்த நிலையில், மாடல்3யின் மீதான விலை குறைப்பு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றே கூறலாம்.
இந்நிலையில், டெஸ்லாவின் வாடிக்கையாளர் ஒருவர் அந்நிறுவனத்தை டேக் செய்து டுவிட்டரில் கேள்வியெழுப்பி பதிவிட்டிருந்தார். அதில், "என்னுடைய சகோதரர் ஒருவரின் கார் கண்ணாடி கடந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை உடைக்கப்பட்டுள்ளது. இதனால் டெஸ்லா கார்களில் 'சென்ட்ரி மோட்' எப்போது கிடைக்கும்" என கேட்டிருந்தார்.
Any update on sentry mode? Brother in law has his window broken into twice in the past two months. pic.twitter.com/w5yVv1dBV5
— Tesla Owners Silicon Valley (@teslaownersSV) February 7, 2019
இதற்கு பதிலளிக்கும் விதமாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் முஸ்க், அவரது டுவிட்டர் பக்கத்தில், டெஸ்லா காரில் செல்லப்பிராணிகளுக்கான 'டாக் மோட்' மற்றும் 'சென்ட்ரி மோட்' ஆகிய இரண்டு மோட்களையும் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பதில் டுவிட் செய்திருந்தார்.
இந்த இரண்டு மோட்களும், காரின் உரிமையாளர்கள் கவனத்திற்காகவும், செக்யூரிட்டிக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.
சென்ட்ரி மோட் என்பது காரின் 360 டிகிரி எக்ஸ்டெர்னல் வியூவைக் காணக்கூடிய வசதியாகவும். இந்த வசதி மூலம் காரின் வெளிப்புறத்தை காண்பதுடன், ரெக்கார்ட் மோட் மூலம் காரின் அருகில் நடைபெறும் செயல்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். இதனால், காரில் திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.
டாக் மோட், செல்லப்பிராணி பிரியர்கள் தங்களது செல்லப்பிராணிகளை வாகனங்களில் வெளியே அழைத்துச் செல்லும்போது, மறதியாக காருக்குள்ளேயே விட்டுவிட்டு செல்ல நேர்ந்தால், இந்த மோடின் மூலம் காருக்கு உள்ளே காலநிலை விலங்குகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும். இதனால், உங்கள் செல்லப்பிராணி அசௌகரியமாக உணர்வது தடுக்கப்படும்.
டெஸ்லாவின் இந்த நடவடிக்கை செல்லப்பிராணி பிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், கூடுதல் செக்யூரிட்டி வசதியை வரும் வாரத்தில் அறிமுகம் செய்ய இருப்பதால், காரின் விற்பனை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!