Just In
- 1 hr ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 1 hr ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- 2 hrs ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 3 hrs ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
Don't Miss!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Lifestyle கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டொயோட்டா ஆலைக்கு மாறும் மாருதி பிரெஸ்ஸா உற்பத்தி!
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் உற்பத்தியை டொயோட்டா நிறுவனம் முழுமையாக ஏற்க இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மாருதி சுஸுகி நிறுவனமும், டொயோட்டா நிறுவனமும் கூட்டணி அமைத்து செயல்பட இருப்பது தெரிந்ததே. முதல் மாடலாக மாருதி பலேனோ கார் டொயோட்டா பிராண்டில் க்ளான்ஸா என்ற பெயரில் வர இருக்கிறது.
அண்மையில் டெயோட்டா க்ளான்ஸா காரின் உற்பத்தி குஜராத்தில் உள்ள சுஸுகி நிறுவனத்தின் கார் ஆலையில் துவங்கியதுடன், டீலர்களுக்கு அனுப்பும் பணியும் துவங்கிவிட்டது. எனினும், டொயோட்டா க்ளான்ஸா காரின் உற்பத்தி விரைவில் பெங்களூர் அருகே உள்ள டொயோட்டா ஆலைக்கு மாற்றப்பட இருக்கிறது.
இந்த நிலையில், அடுத்ததாக மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியானது டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் உற்பத்தியை டொயோட்டா நிறுவனமே முழுமையாக ஏற்க இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
அதாவது, மாருதி மற்றும் டொயோட்டா ஆகிய இரண்டு பிராண்டுகளுக்கான விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிகளும் பெங்களூர் டொயோட்டா கார் ஆலையிலேயே உற்பத்தி செய்யப்பட இருப்பதாக கார்அண்ட்பைக் தள செய்தி தெரிவிக்கிறது.
டொயோட்டா கார் ஆலையானது ஆண்டுக்கு 2.10 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஆனால், தற்போது உற்பத்தி திறனைவிட மிக குறைவாகவே இருந்து வருகிறது. எனவே, இந்த ஆலையின் உற்பத்தி திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள மாருதி சுஸுகி - டொயோட்டா கூட்டணி திட்டமிட்டுள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் கார் ஆலையின் உற்பத்தி திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாருதி சுஸுகி தலைவர் ஆர்.சி.பர்கவா தெரிவித்துள்ளார். இதன்மூலமாக, மாருதியின் சில கார்களின் காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் வாய்ப்பு இருக்கிறது.
மேலும், டொயோட்டா ஆலையின் உற்பத்தி திறனையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்வதுடன் கூடுதல் வேலைவாய்ப்பை வழங்கும் வாய்ப்பும் உள்ளது. இதனால், இரு நிறுவனங்களுக்கும் வர்த்தக ரீதியில் அதிக பயன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Source: Carandbike
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!