Just In
- 1 hr ago 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- 2 hrs ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 3 hrs ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 3 hrs ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
Don't Miss!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- News மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்கு அளிக்கலாம்.. எப்படி?
- Movies Prithviraj: ரஜினியை வைத்து தில்லுமுல்லு மாதிரி படம் இயக்கனும்.. பிரித்விராஜ் ஆசையை பாருங்க!
- Technology தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
இந்தியா வருகிறது ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ கார்?
புதிய ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்த திட்டங்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஐரோப்பிய நாடுகளில் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் கார் மிகவும் பிரபலமான பிரிமீயம் ஹேட்ச்பேக் ரக மாடலாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் செயல்திறன் மிக்க மாடலாக கோல்ஃப் ஜிடிஐ கார் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. சக்திவாய்ந்த எஞ்சின் மட்டுமின்றி, கூடுதல் சிறப்பம்சங்களை இந்த ஜிடிஐ மாடல் பெற்றிருக்கிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதியில் 8-வது தலைமுறை கோல்ஃப் கார் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் அடிப்படையிலான ஜிடிஐ மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து ஃபோக்ஸ்வேகன் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மத்திய அரசு கொடுத்துள்ள சிறப்பு விலக்கின் அடிப்படையில், முதல் 2,500 கார்களை எந்த மாற்றமும் இல்லாமல் இறக்குமதி செய்து விற்பனை செய்ய முடியம். அதன் அடிப்படையில், ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ கார் மாடலானது இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த காருக்கு அதிக வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும் வாய்ப்பும் இருக்கிறது. இதன்மூலமாக, விலையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 252 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
புதிய ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரில் தோற்றத்தில் பல கூடுதல் சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கும். அத்துடன், சிறப்பான சஸ்பென்ஷன், பெரிய ஏர் இன்டேக் அமைப்பு, திறன்மிக்க பிரேக் சிஸ்டம், இரட்டை சைலென்சர் குழல்கள், ரியர் ஸ்பாய்லர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.
இறக்குமதி செய்து விற்பனை செய்ய வேண்டி இருப்பதால், ரூ.40 லட்சம் விலையில் புதிய ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருக்கிறது.
Source: Autocarindia
-
சோப்பு டப்பாக்களுக்கு பாடம் நடத்தும் டாடா கார்... விலை இவ்ளோதானா... சண்முகம் வண்டிய ஷோரூமுக்கு விட்றா...
-
ஒன்னு கூடிட்டாங்க! நிஸான்-ஹோண்டா இணைவிற்கு இதுதான் காரணமா! ஜப்பான் பசங்க 2பேரும் ஒன்னு கூடி என்ன பண்ண போறாங்க!
-
இனி தடுக்கி விழுந்தா கூட இவங்க ஷோரும்லதான் விழுகணும்! மாருதி, டாடாக்கு போட்டியா கடை திறக்க போறது அவங்களா!