Just In
- 23 min ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 1 hr ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 2 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 2 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- News கையிருப்பில் 10 ஆயிரம் தான்.. சொந்தமாக 4 கார்கள், வாகன கடன்.. திருமாவளவனின் சொத்து மதிப்பு எவ்வளவு?
- Movies Actor Suriya: கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் சூர்யா.. அப்போ புறநானூறு படம்?
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்தியா வருகிறது ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ கார்?
புதிய ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்த திட்டங்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஐரோப்பிய நாடுகளில் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் கார் மிகவும் பிரபலமான பிரிமீயம் ஹேட்ச்பேக் ரக மாடலாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் செயல்திறன் மிக்க மாடலாக கோல்ஃப் ஜிடிஐ கார் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. சக்திவாய்ந்த எஞ்சின் மட்டுமின்றி, கூடுதல் சிறப்பம்சங்களை இந்த ஜிடிஐ மாடல் பெற்றிருக்கிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதியில் 8-வது தலைமுறை கோல்ஃப் கார் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் அடிப்படையிலான ஜிடிஐ மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து ஃபோக்ஸ்வேகன் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மத்திய அரசு கொடுத்துள்ள சிறப்பு விலக்கின் அடிப்படையில், முதல் 2,500 கார்களை எந்த மாற்றமும் இல்லாமல் இறக்குமதி செய்து விற்பனை செய்ய முடியம். அதன் அடிப்படையில், ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ கார் மாடலானது இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த காருக்கு அதிக வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும் வாய்ப்பும் இருக்கிறது. இதன்மூலமாக, விலையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 252 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
புதிய ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரில் தோற்றத்தில் பல கூடுதல் சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கும். அத்துடன், சிறப்பான சஸ்பென்ஷன், பெரிய ஏர் இன்டேக் அமைப்பு, திறன்மிக்க பிரேக் சிஸ்டம், இரட்டை சைலென்சர் குழல்கள், ரியர் ஸ்பாய்லர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.
இறக்குமதி செய்து விற்பனை செய்ய வேண்டி இருப்பதால், ரூ.40 லட்சம் விலையில் புதிய ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருக்கிறது.
Source: Autocarindia
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!