Just In
- 13 min ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- 1 hr ago தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- 4 hrs ago இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- 6 hrs ago இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
Don't Miss!
- Technology அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. இரண்டு டிஸ்பிளே.. புதிய Nokia போன் ரெடி.. எந்த மாடல்?
- Finance டெஸ்லா-வை சீண்டும் சியோமி.. கடுப்பான எலான் மஸ்க்..!!
- News நான் ஆர்மி ஆபிசர் சார்..வீடு வாடகைக்கு விடுபவர்களே உஷார்! புது டெக்னிக்கில் ஆட்டைய போடும் கும்பல்!
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Movies Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மாருதி, டொயோட்டா, ஃபோர்டு வழியில் ஃபோக்ஸ்வேகன்... இனி சர்வீஸ் மேன்கள் வீடு தேடி வருவார்கள்...!
பிரபல வாகன உற்பத்தி நிறுவனங்களான மாருதி, டொயோட்டா, ஃபோர்டு ஆகிய நிறுவனங்களின் வழியில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் இணைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவின் பிரபல வாகன உற்பத்தி நிறுவனங்களான மாருதி, டொயோட்டா, ஃபோர்டு உள்ளிட்ட நிறுவனங்கள் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் விதமாக வீடு தேடி வந்து சர்வீஸ் செய்யும் சேவையை அண்மையில் தொடங்கி வைத்தன.
தற்போது, இந்நிறுவனங்களின் வரிசையில் பிரபல ஜெர்மன் நாட்டு வாகன உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வேகனும் இணைந்துள்ளது.
நாட்டின் மிக முக்கியமான வாகன விற்பனையாளர்களில் ஒருவராக திகழ்ந்துவரும் ஃபோக்ஸ்வேகன், அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் விதமாக இந்த 'டூர் ஸ்டெப் சர்வீஸ்' திட்டத்தை அறிவித்திருக்கின்றது.
அந்தவகையில், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல்களான போலோ, ஏமியோ, வென்ட்டோ மற்றும் டிகுவன் உள்ளிட்ட மாடல்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு திட்டத்தின்மூலம் ஃபோக்ஸ்வேகன் சேவையை வழங்க உள்ளது.
ஆகையால், இனி மேற்கூறிய ஃபோக்ஸ்வேகன் மாடல் கார்களைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் இனி சர்வீஸ் நிலையங்களைத் தேடி சென்று நேரத்தை வீணடிக்கும் சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகனின் இந்த சேவை, சர்வீஸ் செய்ய வேண்டிய கார்களை பிக்-அப் செய்து சர்வீஸ் செய்த பின்னர் டிராப் செய்யும் சேவையல்ல. குறிப்பிட்ட கார்களை சர்வீஸ் செய்வதற்கான அனைத்து உபகரணங்களையும் அடக்கிய மினி சர்வீஸ் சென்டர் ரகத்திலான வாகனத்தின் மூலம் செய்யப்படும் ஓர் சேவையாகும்.
இந்த சிறப்பான சேவையை நாட்டின் மிக முக்கியமான 45 நகரங்களில் தொடங்கியிருப்பதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சேவையைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் சர்வீஸ் மையம் அமைந்திருக்கும் இடத்திலிருந்து 25 கிலோ மீட்டருக்கு உள்ளாக இருக்க வேண்டுமென்ற நிபந்தனையையும் அது முன் வைத்துள்ளது.
இந்த சேவையில் குறிப்பாக பிரேக் டவுண் மற்றும் சாதாரண சர்வீஸ் போன்ற ஒரு சில சேவைகளை மட்டுமே ஃபோக்ஸ்வேகன் வழங்க இருக்கின்றது.
ஒருவேலை, மிக அதிகமான வேலை காருக்கு தேவைப்படுமானால், அந்த கார் அருகில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு கொண்டுவருமாறு அதன் உரிமையாளருக்கு அறிவுறுத்தப்படுகின்றது.
பொதுவாக, இதுபோன்று வீடு தேடி வந்து சர்வீஸ் செய்யும் சேவை, அந்த சென்டர்களை அணுக முடியாமல் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால், வெகுதொலைவில் இருப்பவர்களால் அவ்வளவு எளிதில் வந்து காரை சர்வீஸ் கொடுத்துவிட்டு, மீண்டும் சில நாட்கள் காத்திருந்து காரை எடுத்துச் செல்வது மிக கடினமானதாக இருக்கும்.
இதன்காரணமாகவே, பலர் தங்களின் வாகனங்களை சரிவர சர்வீஸ் விடுவதற்கு தவறிவிடுகின்றனர். ஆகையால், இதுபோன்ற சேவையை சர்வீஸ் மையத்தை அணுக முடியாத வாடிக்கையாளர்களை மையப்படுத்தி கொண்டு வந்தால் நல்ல வரவேற்பைப் பெறுவதுடன், மக்களிடையே நற்பெயரைப் பெறவும் உதவும்.
அதுமட்டுமின்றி, இதுபோன்று நடமாடும் சர்வீஸ் மையங்களை அதிகப்படுத்துவதனால் தேவையற்ற இடங்கலில் சர்வீஸ் நிலையங்களை திறக்கும் நிலையும் தவிர்க்கப்படும்.
இதன்மூலம், வாடிக்கையாளர்கள் தங்களின் நேரம் மற்றும் சென்றுவருவதற்கா செய்யப்படும் செலவீணங்கள் உள்ளிட்டவை தவிர்க்கப்படும்.
மேலும், குறிப்பிட்ட திட்டமிடலின்படி, ஒரே பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அப்பாயின்மெண்ட் கொடுத்து வாகன உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டால் ஒவ்வொரு முறையும் ஒரே பகுதிக்குச் சென்றுவரக்கூடிய அலைக் கழிப்பும் தவிர்க்கப்படும்.