Just In
- 26 min ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 59 min ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 1 hr ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 3 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
Don't Miss!
- Movies மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- News மன்னிப்பு விளம்பரம் பெருசா இருக்கா? இல்லை லென்ஸில் தான் தேடணுமா? பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்ல... இந்த காரை வச்சிருக்கவங்க கொஞ்சம் பத்திரமா இருந்துக்கோங்க... வீடியோ!
பிரபல நிறுவனத்தின் காரொன்று பாதுகாப்பு திறன் பற்றிய ஆய்வில் மிகக் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
இந்தியாவில் வைத்து தயாரிக்கப்பட்ட வாகனங்களை ஃபிரெஞ்சு நிறுவனமான ரெனால்ட் உலக நாடுகள் சிலவற்றிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. அந்தவகையில், ஆப்பிரிக்கா நாட்டின் சந்தைக்கான க்விட் கார்களை இந்தியாவில் இருந்தே ரெனால்ட் ஏற்றுமதி செய்கின்றது.
இந்தியாவில் வைத்து ஆப்பிரிக்காவிற்காக தயாரிக்கப்பட்ட இந்த க்விட் காரே மோதல் பரிசோதனையில் தற்போது மண்ணைக் கவ்வியிருக்கின்றது. குளோபல் என்சிஏபி வெளியிட்டிருக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.
சந்தைக்கு விற்பனைக்கு வரும் புதுமுக கார்களை மோதல் பரிசோதனைக்கு உட்படுத்தி அதுகுறித்த தகவல்களை குளோபல் என்சிஏபி வெளியிட்டு வருகின்றது. அந்தவகையில், ரெனால்ட் க்விட் காரின் க்ராஷ் டெஸ்ட் பற்றிய தகவலை இது வெளியிட்டிருக்கின்றது.
தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, பெரியவர்களின் பாதுகாப்பில் இரு நட்சத்திரங்களையும், குழந்தைகளின் பாதுகாப்பில் இரு நட்சத்திரங்களையும் ரெனால்ட் க்விட் கார் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, பெரியவர்களின் பாதுகாப்பில் 17க்கு 7.78 புள்ளிகளையும், குழந்தைகளின் பாதுகாப்பில் 49க்கு 19.68 புள்ளிகளை மட்டுமே இக்கார் பெற்றிருக்கின்றது.
இந்த குறைந்த புள்ளிகளின் காரணத்தினாலயே குளோபல் என்சிஏபி இக்காருக்கு இரண்டு நட்சத்திரங்களை மட்டுமே வழங்கியிருக்கின்றது. இதே கார் கடந்த 2016ம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட மோதல் பரிசோதனையில் பூஜ்ஜியம் ஸ்டார்களை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிலையில் தற்போதைய இரண்டு நட்சத்திரங்கள் வரவேற்பளிக்கும் வகையில் இருக்கின்றது. இருப்பினும், இது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கக் கூடிய ரேட்டிங் என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், இது ஆப்பிரிக்க சந்தைக்கான மாடல் என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஆப்பிரிக்கா நாட்டிற்காக தயாராகும் க்விட் கார்களில் பாதுகாப்பு வசதிக்காக இரு ஏர் பேக் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குறிப்பிட்ட மேலும் சில அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அனைத்து இருக்கைகளுக்கும் மும்முனை சீட் பெல்ட் வழங்கப்படாதது, குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை கொடுக்கப்படாதது உள்ளிட்ட காரணங்களினாலயே க்விட் கார் இரு நட்சத்திரங்களைப் பெற்றிருக்கின்றது.
மேலும், விபத்து போன்ற கசப்பான நேரங்களில் முன் பக்க பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு வசதி இல்லாததும் கண்டறியப்பட்டுள்ளது. அதிலும், டிரைவரின் மார்பகம், தொடை மற்றும் கனுக்கால் ஆகிய பகுதிகளுக்கு மிகவும் ஆபத்தான சூழல் நிலவுவதாக தற்போதைய பரிசோதனையின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று, ஓட்டுநரின் சக பயணியின் வல தொடைப் பகுதி மற்றும் மார்பக பகுதிக்கு லேசான காயங்கள் ஏற்படக்கூடிய சூழல் நிலவுகின்றது. இதேபோன்ற காரணங்களினாலயே இக்காரின் பாதுகாப்பு தரம் தற்போது கேள்விக் குறியாக மாறியுள்ளது. ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் இதுவும் ஒன்று குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் ஆப்பிரிக்காவிற்கான காராக இருந்தாலும் மிகக் குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருப்பது அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.