Just In
- 1 hr ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 6 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 6 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 8 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
Don't Miss!
- News ஆஹா.. திடீரென குறைந்த தங்கம் விலை.. இப்போது வாங்கலாமா? இன்னும் குறையுமா? ஆனந்த் சீனிவாசன் பளிச்
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நம்பர்-1 இடத்திற்காக அடுத்து இரண்டு புதிய சொகுசு கார்களை களமிறக்கும் பிஎம்டபிள்யூ!
இந்திய சொகுசு கார் சந்தையில் நம்பர்-1 இடத்தில் நிலைத்து நிற்பதற்காக பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. அதில், இரண்டு முக்கிய மாடல்கள் குறித்த விபரம் வெளியாகி இருக்கிறது.
இந்திய சொகுசு கார் சந்தையில் ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி கார் நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், நடப்பாண்டில் பிஎம்டபிள்யூ நிறுவனம் முன்னிலை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து தக்க வைப்பதற்கான முயற்சிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே, புதிய தலைமுறை 2 சீரிஸ் கிரான் கூபே, 3 சீரிஸ், 7 சீரிஸ், எக்ஸ்5 மற்றும் எக்ஸ்7 கார்களை இந்தியாவில் களமிறக்கியது.
இதையடுத்து, 2021ம் ஆண்டுக்கான புதிய கார் மாடல்கள் அறிமுகம் குறித்த திட்டத்தை பிஎம்டபிள்யூ வகுத்துள்ளது. இந்தியர்களுக்கு புதுவிதமான மாடல்களை கொண்டு வருவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில், கார் அண்ட் பைக் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள பிஎம்டபிள்யூ இந்தியா தலைவர் விக்ரம் பவா கூறுகையில்,"இந்தியாவில் பல புதிய மாடல்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு புதிய 5 சீரிஸ் மற்றும் 6 சீரிஸ் ஜிடி ஆகிய மாடல்களை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு பல ஆச்சர்யங்களும் காத்திருக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு கார்களையும் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யவும் பிஎம்டபிள்யூ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், மிக சரியான விலையில் நிலைநிறுத்த முடியும். இதனிடையே, பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய கார்களில் பெட்ரோல், டீசல் தேர்வுகளில் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது. மினி பிராண்டிலும் புதிய மாடல்களை கொண்டு வரவும் பிஎம்டபிள்யூ முடிவு செய்துள்ளது.
புதிய மாடல்களின் வருகை மற்றும் சந்தை தேவை மனதில் வைத்து சென்னை ஆலையில் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கும், பல புதிய மாடல்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்வதற்கும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய மாடல்கள் மூலமாக இந்திய சொகுசு கார் சந்தையில் மிக வலுவான இடத்தை தக்க வைப்பதற்கு பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டு போலவே, அடுத்த ஆண்டிலும் தனது சந்தைப் பங்களிப்பை தக்க வைப்பதற்கு பல திட்டங்களுடன் காய் நகர்த்தி வருகிறது பிஎம்டபிள்யூ நிறுவனம்.
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே