Just In
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 1 hr ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 1 hr ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
- 2 hrs ago
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
Don't Miss!
- News
150 ஆடுகள், 300 கோழிகள், 2500 கிலோ பிரியாணி அரிசி.. கலகலக்கும் முனியாண்டி திருவிழா.. பின்னணி என்ன?
- Movies
ஜாமீன் கிடைச்சு 2 நாளாச்சு.. 140 நாளுக்குப் பிறகு சிறையில் இருந்து வர காத்திருக்கும் ராகிணி திவேதி!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Education
8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிஎஸ்6 மஹிந்திரா டியூவி300 புனேவில் சோதனை ஓட்டம்... விரைவில் விற்பனைக்கு வருகிறது...
மராஸ்ஸோ மற்றும் எக்ஸ்யூவி500 மாடல்களின் பிஎஸ்6 வெர்சன்களுடன் மஹிந்திரா நிறுவனம் டியூவி300 மாடலையும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த பிஎஸ்6 மாடல் தற்போது சோதனை ஓட்டத்தின் போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டில் இருந்து அதன் தயாரிப்புகளை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருவது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஏனெனில் இந்நிறுவனத்தின் புதிய பிஎஸ்6 மாடல்களான மராஸ்ஸோ மற்றும் எக்ஸ்யூவி500 மாடல்கள் கடந்த பல மாதங்களாக தொடர் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றை தொடர்ந்து டியூவி300 மாடலும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டு சோதனைகளில் உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது மீண்டும் இந்த கார் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த ஸ்பை படங்களை மோட்டார்பீம் செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

இருப்பினும் புனேக்கு அருகே நடத்தப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலம் காரின் முன் பக்கத்தை மட்டும் தான் காண முடிகிறது. இதன்மூலம் பார்க்கும்போது இந்த சோதனை காரின் முன்பக்கத்தில் உள்ள பம்பர், ஹெட்லைட்கள், மூடுபனி விளக்குகளுக்கான குழி, ரேடியேட்டர் க்ரில் உள்ளிட்டவை முந்தைய தலைமுறை காரில் இருந்து சற்று திருத்தியமைக்கபட்டுள்ளதை அறிய முடிகிறது.

பிஎஸ்6 டியூவி300-ன் இதற்கு முந்தைய சோதனை ஸ்பை படங்கள் கூடுதலாக சில விபரங்களையும் வெளிப்படுத்தி இருந்தன. அதாவது அவற்றின் மூலமாக காரின் பின்பக்க பம்பர், டெயில்லேம்ப்கள் மற்றும் ஸ்பேர் வீல் கவர் உள்ளிட்டவையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதை அறிந்திருந்தோம்.

இவற்றுடன் புதிய டிசைனில் அலாய் சக்கரங்களும் இந்த பிஎஸ்6 மஹிந்திரா வாகனத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதன் உட்புறமும் புதிய உள்ளமைவு உடன் அப்டேட் செய்யப்பட்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை பெற்று வரும் என கூறப்படுகிறது.

டியூவி300 மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை மஹிந்திரா நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த என்ஜின் பிஎஸ்6 தரத்திலும் அதே 101 பிஎச்பி மற்றும் 240 என்எம் டார்க் திறனை தான் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிஎஸ்6 என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுவது உறுதி.

ஏஎம்டி கியர்பாக்ஸ் கூடுதல் தேர்வாக வழங்கப்படுமா என்பதை தற்போதைக்கு உறுதியாக கூற முடியவில்லை. கொரோனா வைரஸ் உலகம் முழுவதில் பரவவில்லை எனில் இந்த பிஎஸ்6 மஹிந்திரா மாடல் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே அறிமுகமாக வேண்டியது. சரி அதெல்லாம் பழைய கதையாயிற்று. தற்போது சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதால் இதன் அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.