கார் ஏசியால் இப்படியும் நடக்குமா?.. கலங்க வைக்கும் நொய்டா சம்பவம்... யாருக்குமே இப்படி நடக்க கூடாது!

கார் ஏசியால் சோகமான சம்பவம் ஒன்று நொய்டாவில் அரங்கேறியுள்ளது. என்ன நடந்தது இதுபோன்ற சம்பவத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை இந்த பதிவில் காணலாம்.

கார் ஏசியால் இப்படியும் நடக்குமா?.. கலங்க வைக்கும் நொய்டா சம்பவம்... யாருக்குமே இப்படி நடக்க கூடாது!

வெப்பத்தை சமாளிக்க உதவும் மிக முக்கியமான அம்சங்களில் ஏசிக்கே முதல் இடம். எனவேதான் முன்பு உயர் ரக வாகனங்களில் மட்டுமே காணப்பட்டு வந்த ஏசி சிஸ்டம், தற்போது அனைத்து விதமான வாகனங்களிலும் பயன்பாட்டுக்கு கிடைத்து வருகின்றது. இது எந்த அளவிற்கு அதிக உதவியை வழங்குகின்றதோ, அதைவிட பல மடங்கு ஆபத்தானது ஆகும். ஆம், இதனை முறையாக கவனிக்கவில்லை என்றால் பேராபத்தை நொடிப்பொழுதில் ஏற்படுத்துவிடும்.

கார் ஏசியால் இப்படியும் நடக்குமா?.. கலங்க வைக்கும் நொய்டா சம்பவம்... யாருக்குமே இப்படி நடக்க கூடாது!

அந்தவகையில், ஏசியால் நொய்டாவில் அரங்கேறிய கசப்பான சம்பவம் பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். ஆம், காரில் ஏசியை ஆன் செய்தவாறு உறங்கிய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர், அப்போது மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகின்றது.

கார் ஏசியால் இப்படியும் நடக்குமா?.. கலங்க வைக்கும் நொய்டா சம்பவம்... யாருக்குமே இப்படி நடக்க கூடாது!

அளவுக்கு அதிகமாக குடிபோதையில் இருந்த காரணத்தால் காரில் ஏசியை ஆன் செய்துவிட்டு அதிலேயே உறங்கியிருக்கின்றார். அப்போதே இந்த சோகமான சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. நொய்டாவில் உள்ள செக்டார் 49, பரோலா பகுதியில் வசிப்பவர் சுந்தர் பண்டிட். இவரே காருக்குள் தூங்கும்போது பரிதாபமாக உயிரிழந்தவர்.

கார் ஏசியால் இப்படியும் நடக்குமா?.. கலங்க வைக்கும் நொய்டா சம்பவம்... யாருக்குமே இப்படி நடக்க கூடாது!

இவர் அளவுக்கு மிஞ்சி குடித்திருந்த காரணத்தால், போதை தலைக்கு ஏறியிருந்ததாகக் கூறப்படுகின்றது. இதனால், காரை தனது அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங் வளாகத்தில் நிறுத்திய சுந்தர், கசகசவென இருந்ததன் காரணத்தினால் அப்படியே ஏசியையும் ஆன் செய்துவிட்டு இருக்கையில் சாய்ந்துள்ளார். உச்சகட்ட போதை, உறக்கம் ஆகியவற்றால் அயர்ந்து உறங்கியிருக்கின்றார்.

கார் ஏசியால் இப்படியும் நடக்குமா?.. கலங்க வைக்கும் நொய்டா சம்பவம்... யாருக்குமே இப்படி நடக்க கூடாது!

அந்த நேரத்தில் ஏசியில் இருந்து விஷவாயு கசிந்துள்ளது. இதையறியாமல் உறங்கிக் கொண்டிருந்த அவர் அப்படியே மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். சுந்தர், மயங்கிக் கிடப்பதாக எண்ணிய அவரின் சகோதரர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றார். அங்கு சுந்தரைப் பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அதிர்ச்சியான தகவலைக் கூறியிருக்கின்றனர்.

கார் ஏசியால் இப்படியும் நடக்குமா?.. கலங்க வைக்கும் நொய்டா சம்பவம்... யாருக்குமே இப்படி நடக்க கூடாது!

இதனால் சுந்தர் பண்டிட்டின் ஒட்டுமொத்த குடும்பமே சோகத்தில் உறைந்துள்ளது. இதுகுறித்த எந்தவொரு வழக்கையும் அவரது குடும்பத்தார் காவல்நிலையத்தில் வழங்கவில்லை என கூறப்படுகின்றது. ஆனால், தகவல் அறிந்து வந்த போலீஸார் சம்பவம்குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

கார் ஏசியால் இப்படியும் நடக்குமா?.. கலங்க வைக்கும் நொய்டா சம்பவம்... யாருக்குமே இப்படி நடக்க கூடாது!

நொய்டாவில் அரங்கேறிய இந்த சம்பவத்தால், காருக்குல் ஏசி போட்டால் ஆபத்தா?, என்ற கேள்வி பலரின் மத்தியில் எழும்பியுள்ளது. இதனைப் போக்கும் விதமாக இந்த தகவலை தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

கார் ஏசியால் இப்படியும் நடக்குமா?.. கலங்க வைக்கும் நொய்டா சம்பவம்... யாருக்குமே இப்படி நடக்க கூடாது!

காருக்குள் நிலவும் அதிகப்படியான வெப்பத்தைப் போக்கி குளிர்ச்சியான சூழலை உருவாக்குவதில் ஏசியின் பங்கு இன்றியமையாதது. எனவேதான், பலர் காருக்குள் ஏறியவுடனேயே ஏசியை ஆன் செய்துவிடுகின்றனர். ஆனால், அவ்வாறு செய்வதும் மிகவும் ஆபத்தானது ஆகும். சிறிது நேரம் காரின் அனைத்து ஜன்னல் கதவுகளையும் திறந்து வைத்து, ஒரு சில நிமிடங்களுக்கு பின்னர் ஏசியை ஆன் செய்வது சிறந்தது.

கார் ஏசியால் இப்படியும் நடக்குமா?.. கலங்க வைக்கும் நொய்டா சம்பவம்... யாருக்குமே இப்படி நடக்க கூடாது!

குறிப்பாக, நீண்ட நாட்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் கார் மற்றும் காரின் ஏசியை ஒரு சர்வீஸ் விட்ட பின்னர் பயன்படுத்துவது மிக சிறந்தது. பயன்படுத்தப்படாமல் இருந்த காரணத்தால் ஏசியில் இருக்கும் வாயுக்கள் வேதிவினை மாற்றமடைய பல வாய்ப்புகள் இருக்கின்றன. எனவேதான் சிறிது நேரம் காரின் அனைத்து கதவுகளையும் திறந்து வைத்து சில நிமிடங்கள் எஞ்ஜினை ரன் செய்த பின்னர் பயணத்தைத் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

கார் ஏசியால் இப்படியும் நடக்குமா?.. கலங்க வைக்கும் நொய்டா சம்பவம்... யாருக்குமே இப்படி நடக்க கூடாது!

மேலும், ஒரே இடத்தில் நீண்ட நேரமாக காரை நிறுத்திவிட்டு, எஞ்ஜின் மற்றும் ஏசியை ஆன் செய்து வைப்பதும் மிகுந்த ஆபத்தானதாகும். ஏனெனில், ஏசி வெளிப்புறத்தில் இருக்கும் காற்றை உருஞ்சியே உட்புறத்தை வெண்டிலேட் செய்யும். அம்மாதிரியான நேரத்தில் எஞ்ஜினில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடை (CO) வாயுவை ஏசி உறிஞ்சி காருக்குள் வெளிப்படுத்தலாம்.

கார் ஏசியால் இப்படியும் நடக்குமா?.. கலங்க வைக்கும் நொய்டா சம்பவம்... யாருக்குமே இப்படி நடக்க கூடாது!

இந்த வாயு மனித உயிருக்கு மிகவும் ஆபத்தானது. முதலில் மயக்கம், பின்னர் உயிரையே பறித்துவிடும். இந்த மாதிரியான செயலினாலயே நொய்டாவைச் சேர்ந்த சுந்தர் பண்டிட் இறந்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. எனவேதான், ஒரே இடத்தில் காரை நிறுத்திவிட்டு எஞ்ஜினை ஆன் செய்து, ஏசியைப் பயன்படுத்த வேண்டாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கார் ஏசியால் இப்படியும் நடக்குமா?.. கலங்க வைக்கும் நொய்டா சம்பவம்... யாருக்குமே இப்படி நடக்க கூடாது!

இந்த விஷ வாயு முதலில் காருக்குள் நுழையும்போது மூச்சுக் கோளாறு, மங்களான பார்வை, தலை வலி, வாந்தி மயக்கம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும். இதன் பின்னரே மரணத்தைத் தழுவ செய்யும். அம்மாதிரியான நேரத்தில் முழுமையான போதையில், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததும் பண்டிட்டின் இறப்பிற்கு காரணமாக இருக்கும் என யூகிக்கப்படுகின்றது.

கார் ஏசியால் இப்படியும் நடக்குமா?.. கலங்க வைக்கும் நொய்டா சம்பவம்... யாருக்குமே இப்படி நடக்க கூடாது!

அவர் அந்த நேரத்தில் தூங்காமல் இருந்திருந்தால் நிச்சயம் தப்பித்து இருக்க முடியும். ஏசியில் ஏற்படும் மின் கசிவும் இந்த மாதிரியான சூழ்நிலைகளை ஏற்படுத்தும். ஆகையால், நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருக்கும் ஏசியையோ செலவு பார்க்காமல் சர்வீஸ் செய்துவிடுவது சிறந்தது. மேலும். குறிப்பிட்ட சில மாதங்களுக்கு ஒரு முறை ஏசியை சர்வீஸ் செய்வதன் மூலமாகவும் இதுமாதிரியான கசப்பான அனுபவங்களை தவிர்க்க முடியும்.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 14, 2020, 7:30 [IST]
English summary
Car AC Results In Demise Of Man In Noida: Detailed Analysis. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+