இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் லாரி!! 2021ல் டைம்லர் பிராண்டில் அறிமுகமாகுகிறது
கனரக லாரி மற்றும் பேருந்து தயாரிப்பு நிறுவனமான டைம்லர் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் லாரியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜெர்மனை சேர்ந்த டைம்லர் குறைவான எடை கொண்ட மற்றும் கனரக ட்ரக்குகளையும், பேருந்துகளையும் பாரத்பென்ஸ் மற்றும் ஃபூஸோ பிராண்டின் கீழ் தயாரித்து வருகிறது. அடுத்த வருடத்தில் இந்நிறுவனத்தின் சார்பில் ‘எதிர்கால இயக்கம்' என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று நடக்கவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் டைம்லர் எலக்ட்ரிக் ட்ரக் மாடல் ஒன்றினை காட்சிப்படுத்தவுள்ளது. இதுகுறித்து கடந்த வாரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அளித்த பேட்டியில், "மெர்சிடிஸ் பென்ஸின் நிர்வாக இயக்குநருடன் நான் தொடர்பு கொண்டேன். அவர் ஒரு மின்சார டிரக்கை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர் என்று என்னிடம் கூறினார்" என கூறினார்.

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்துடன் டைம்லர் கூட்டணி வைத்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. டைம்லர் கமர்ஷியல் பிரிவு வாகனங்களில் 3-புள்ளி ஸ்டார் லோகோ பொருத்தப்படுகிறது. எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, மின்சார வாகனங்களுக்கான உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற அரசாங்கம் ஆர்வமாக உள்ளது.

சர்வதேச சந்தையைப் பொறுத்தவரை, டைம்லர் 2021 ஆம் ஆண்டில் ஒரு முழு மின்சார டிரக்கை அறிமுகப்படுத்த உள்ளது. லைட்-டூட்டி ஃபுசோ இ-கேன்டர் டைம்லரின் முதல் அனைத்து மின்சார டிரக் ஆகும். இதன் இரண்டாம் தலைமுறை பதிப்புதான் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இ-கேன்டர் 100 கிமீ டிரைவ் வரம்பைக் கொண்டுள்ளது மற்றும் இந்த ட்ரக்கில் 3,200 கிலோ வரையிலான எடையை சுமக்க முடியும். இந்தியாவில் புதிய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் டைம்லர் முன்னணியில் உள்ளது.

ட்ரக் தயாரிப்பு நிறுவனங்களை பிஎஸ்4-இல் இருந்து பிஎஸ்6-க்கு செல்லுமாறு அரசாங்கம் கேட்டுக்கொள்ளவிட்டாலும்.
பாரத் ஸ்டேஜ்5 (பிஎஸ்5) லாரிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஒரே நிறுவனம் டைம்லர் ஆகும்.

டைம்லர் இந்தியாவில் ஒரு மின்சார டிரக்கை அறிமுகப்படுத்தினால், அது முதல் போக்குவரத்து பயன்களைப் பெறக்கூடும். பல வணிக வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்திய சாலைகளில் முழு மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், எந்தவொரு உற்பத்தியாளரும் இதை லாரிகளுக்குப் பிரதிபலிப்பதில் அதிக அக்கறை காட்டவில்லை.

டாடா மோட்டார்ஸ், வி.இ. கமர்ஷியல் வாகனங்கள், அசோக் லேலண்ட் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா போன்ற உள்நாட்டு வர்த்தக கனரக வாகன நிறுவனங்கள் முழு மின்சார பேருந்துகளை வழங்கியுள்ளன அல்லது வரும் ஆண்டுகளில் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளன.

மற்ற நிறுவனங்களும், சீன நிறுவனங்களான BYD மற்றும் பெய்கி ஃபோட்டான் போன்றவற்றின் ஆதரவோடு, இந்திய போக்குவரத்துக்கு மின்சார பேருந்துகளை வழங்குவதற்கான பெரிய ஆர்டர்களை பெற்றுள்ளன.

2019 ஆம் ஆண்டில் மொத்த விற்பனை 36 சதவிகிதம் குறைந்து, 14,500 யூனிட்டுகளான போதிலும், சென்னையைச் சேர்ந்த டைம்லர் இந்தியா கமர்ஷியல் வாகன நிறுவனம் (டி.ஐ.சி.வி) முதலீடுகளை குறைப்பதாக இல்லை. இந்த ஆண்டு மே மாதத்தில் கூட தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, 2,277 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

இதற்காக ஓரகடம் ஆலையில் கமர்ஷியல் வாகன உற்பத்தியை இந்த நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் சுமார் 400 வேலைகளை உருவாக்கியுள்ளன. மேலும் இதனால் டி.ஐ.சி.வி யின் சில்லறை விற்பனை 15,200 யூனிட்டுகளுக்கும் கீழ் இருந்தன, இது 2018 ஐ விட 29 சதவீதம் குறைவாகும்.


Click it and Unblock the Notifications








