Just In
- 2 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 4 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 5 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 5 hrs ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இனி நிறைய பேர் வாங்குவாங்க... மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்ற சூப்பர் பிளான்... என்னனு தெரியுமா?
மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னையால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நகரமாக தலைநகர் டெல்லி உள்ளது. இதற்கு பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களே மிகவும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றன. தேசிய அளவில் சராசரியாக 1,000 மக்களுக்கு 8 கார்கள் மட்டுமே உள்ளன. ஆனால் டெல்லியிலோ இந்த எண்ணிக்கை 85 ஆக உள்ளது.
எனவே காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக ஆளும் ஆம் ஆத்மி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்களுக்கு 1.50 லட்ச ரூபாய் மானியமாக வழங்கப்படும் என டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சில மாதங்களுக்கு முன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், டெல்லியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த ஒரு ஆண்டிற்குள் டெல்லியில் மிகப்பெரிய எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைக்க டெல்லி மாநகராட்சி நிர்வாகங்கள் தற்போது முடிவு செய்துள்ளன.
ஒவ்வொரு 3 கிலோ மீட்டருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க டெல்லி மாநகராட்சி நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''குறைந்தபட்சம் ஒவ்வொரு 3 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷனையாவது அமைப்பதுதான் எங்களது இலக்கு. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மக்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்'' என்றனர்.
சார்ஜிங் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு 75 இடங்களை தெற்கு டெல்லி மாநகராட்சி கண்டறிந்துள்ளது. அதே சமயம் வடக்கு மாநகராட்சி சார்பில் 127 சார்ஜிங் ஸ்டேஷன்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் கிழக்கு மாநகராட்சி சார்பில், சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க 93 இடங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''டெல்லியில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களின் அடர்த்தி அதிகமாக உள்ளது. இது காற்று மாசுபாட்டிற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. எனவே பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் பேருந்துகளுக்கு மாறினால், காற்று மாசுபாடு கணிசமாக குறையும்.
எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதற்கு மக்கள் விரும்பவே செய்கின்றனர். ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்கள் போதிய அளவில் இல்லாததுதான் அவர்களின் கவலையாக உள்ளது. எனவே வரும் ஆண்டுகளில், பெட்ரோல் பங்க்குகளை போல், டெல்லியில் சார்ஜிங் ஸ்டேஷன்களையும் அதிக எண்ணிக்கையில் அமைக்கவுள்ளோம்'' என்றனர்.
இதற்கிடையே தெற்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகம், அதிகாரிகள் பயன்பாட்டிற்கு ஏற்கனவே எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல், டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் கார்களை இயக்குவதற்கு குறைந்த செலவே ஆகும் என்பதால், இதன் மூலம் போக்குவரத்து செலவு குறைந்துள்ளது. அத்துடன் சுற்றுச்சூழலுக்கும் நன்மையாக அமைந்துள்ளது.
டெல்லியை போல், இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசும் மானியம் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்குவதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் தற்போது தீவிரமாக உள்ளன. மத்திய அரசை பொறுத்தவரை ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்குகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் காற்று மாசுபாடு பிரச்னைக்கு மட்டுமின்றி, கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு பிரச்னைக்கும் முடிவு கட்ட முடியும். மத்திய, மாநில அரசுகள் வழங்கி வரும் ஆதரவு காரணமாக தற்போது இந்திய சந்தையில் ஏராளமான எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகமாக தொடங்கியுள்ளன.
Note: Images used are for representational purpose only.
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
-
35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!
-
மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?