Just In
- 3 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 3 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 5 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குளு குளு ஏசி வசதியுடன் 1,250 சிஎன்ஜி பஸ்கள்... டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அடுத்த அதிரடி...
சிஎன்ஜி மூலம் இயங்க கூடிய 1,250 ஏசி பேருந்துகளை டெல்லி போக்குவரத்து கழகம் வாங்கவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து வருகிறது. இதற்கு பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் மிக முக்கியமான காரணமாக உள்ளன. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து விட்டு, அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் சிஎன்ஜி உள்ளிட்ட எரிபொருட்கள் மூலம் இயங்கும் வாகனங்களின் பயன்பாடும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில், சிஎன்ஜி மூலம் இயங்க கூடிய 1,250 பேருந்துகளை டெல்லி போக்குவரத்து கழகம் வாங்கவுள்ளது. இந்த பேருந்துகள் மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானதாக இருக்கும்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான 1,250 தாழ் தள ஏசி சிஎன்ஜி பேருந்துகளை வாங்குவதற்கு, டெல்லி போக்குவரத்து கழகம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் இன்று (நவம்பர் 27ம் தேதி) இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக வலை தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் செயல்படும் டெல்லி மாநில அரசு, பொது போக்குவரத்தை பெரிதாக்கும் பணிகளிலும், காற்று மாசுபாட்டை குறைக்கும் பணிகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. இந்த வரிசையில் மற்றொரு மைல்கல்லாக, பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமான 1,250 தாழ் தள ஏசி சிஎன்ஜி பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு டெல்லி போக்குவரத்து கழக வாரியம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கூறியபடி, டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தொடர்ந்து தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெல்லி மாநில அரசின் மின்சார வாகன கொள்கை, கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இதன்கீழ், எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்களுக்கு அதிகபட்சமாக 1.50 லட்ச ரூபாய் வரை மானியம் வழங்கப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலேயே காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக தலைநகர் டெல்லி உள்ளது. அங்கு காற்றின் தரம் அவ்வப்போது மிகவும் மோசமான நிலைக்கு சென்று விடுகிறது.

எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் விதமாகவும், சுற்றுச்சூழலை பாதிக்காத எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாகவும் இதுபோன்ற நடவடிக்கைகளை டெல்லி மாநில அரசு எடுத்து வருகிறது. டெல்லி மாநில அரசு மட்டுமல்லாது, மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

மத்திய அரசு தன் பங்கிற்கு ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கி வருகிறது. மாநில அரசுகள் தரப்பில், மானியம் வழங்கும் திட்டம் மட்டுமல்லாது, சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு விலக்கு வழங்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.