பொங்கலுக்கு குடும்பத்தோட சந்தோஷமா காரில் சொந்த ஊர் போகணுமா? - எத மறந்தாலும், இத மறந்துடாதீங்க!
தமிழர்களின் பாரம்பரியத்தை பரைசாற்றும் பெரும் திருவிழாவாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை வேகமாக நெருங்கி வருகிறது. தீபாவளி போன்ற இதர பண்டிகைகளை தவற விட்டாலும், பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பது இயல்பான விஷயம். சொந்த, பந்தங்களுடன் ஒரே இடத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதில் உள்ள அலாதியான மகிழ்ச்சி, வார்த்தைகளால் விவரிக்க முடியாத விஷயம்.

சென்னை, பெங்களூர், திருப்பூர் என அனைத்து பெரு நகரங்களில் பணிபுரிபவர்களில் பலர் பொங்கல் பண்டிகை கொண்டாட, சொந்த ஊருக்கு காரில் செல்வதற்கு ஆயத்தமாகி வரும் வேளை இது. இந்த தருணத்தில் ஒரு முக்கிய விஷயத்தை நினைவில் கொள்வது அவசியமாகிறது.

பொங்கல் பண்டிகைக்கு காரில் சொந்த ஊருக்கு செல்வதற்கு அனைத்தையும் தயார் படுத்தும் இவ்வேளையில், இந்த விஷயத்தையும் கார் உரிமையாளர்கள் முன்கூட்டியே செய்வது அவசியம். அதற்காகவே இந்த செய்தி.

பொங்கல் பண்டிகைக்கு காரில் சொந்த ஊருக்கு செல்வதற்கு அனைத்தையும் தயார் படுத்தும் இவ்வேளையில், இந்த விஷயத்தையும் கார் உரிமையாளர்கள் முன்கூட்டியே செய்வது அவசியம். அதற்காகவே இந்த செய்தி.

அதாவது, வரும் ஜனவரி 1 முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் எனப்படும் மின்னணு அட்டை மூலமாக நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்தும் முறை கட்டாயமாக்கப்பட உள்ளது. எனவே, பொங்கலுக்கு காரில் செல்வதற்கு முன்பாக ஃபாஸ்டேக் இருப்பதை உறுதி செய்யுங்கள்.

இல்லையென்றால், இன்றே முன்பதிவு செய்து பெற்றுவிடுங்கள். அப்போதுதான் பொங்கலுக்கு முன்னதாக உங்கள் காருக்கான ஃபாஸ்டேக் அட்டை கிடைத்து பொருத்துவதற்கு ஏதுவாக இருக்கும். கடைசி நேரத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கருதுவதையும் விட்டுவிடுங்கள். தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

ஜனவரி முதல் ஃபாஸ்டேக் இல்லாமல் சுங்கச் சாவடிகளை கடப்பது இயலாத காரியமாக மாற இருக்கிறது. அப்படியே, கட்டணம் செலுத்தி செல்ல அனுமதிக்கப்பட்டாலும், பல்வேறு சிக்கல்கள், நேர விரயம் ஏற்படுவது உறுதியான விஷயம்.

இந்த சிக்கல்களை தவிர்த்து, பொங்கல் பண்டிகைக்கு நிம்மதியாக சொந்த ஊருக்கு சென்று திரும்புவதற்கு ஃபாஸ்டேக் உங்களது காரில் இருப்பது கட்டாயம். இதுவரை ஃபாஸ்டேக் வாங்காதவர்கள் இன்றே புக்கிங் செய்து ஃபாஸ்டேக் அட்டையை பெற்றுவிடுவதுதான் ஒரே சிறந்த வழி.

மேலும், ஃபாஸ்டேக் வந்த உடனே, குறிப்பிட்ட வழிகாட்டு முறைகளுடன் காரின் விண்ட்ஷீல்டு எனப்படும் முன்புற கண்ணாடியில் சரியான இடத்தில் பொருத்திவிடுங்கள். இதன்மூலமாக, சுங்கச் சாவடிகளில் தங்கு தடையில்லாமல் பயணிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

மேலும், பயணத்தை துவங்குவதற்கு முன்னர் உங்களது ஃபாஸ்டேக் அட்டை இணைக்கப்பட்டு இருக்கும் வாலட் அல்லது வங்கிக் கணக்கில் பயண வழித்தடத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கான போதிய தொகை இருப்பதையும் உறுதி செய்துவிட்டு, காரை கிளப்புங்கள்.


Click it and Unblock the Notifications








