Just In
- 3 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 3 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 6 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 6 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
புதிய கார் வாங்க முடிவு செய்திருந்தால் இப்பவே புக் பண்ணீடுங்க... இல்லாட்டி பின்னாடி ரொம்ப வருத்தப்படுவீங்க...
வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து மாருதி சுஸுகி, ஃபோர்டு உள்ளிட்ட நிறுவனங்களுடைய கார்களின் விலை உயரவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஃபோர்டு இந்தியா நிறுவனம் தனது வாகனங்களின் விலையை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் 3 சதவீதம் வரை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று (டிசம்பர் 10ம் தேதி) வெளியிடப்பட்டது. உற்பத்தி செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதனை ஈடுசெய்யும் விதமாக வாகனங்களின் விலையை உயர்த்தவுள்ளதாக ஃபோர்டு இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபோர்டு இந்தியா நிறுவன கார்களின் விலை 1 முதல் 3 சதவீதம் வரை உயரவுள்ளது. அதாவது மாடல்களை பொறுத்து சுமார் 5 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை விலை உயரும். ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நிர்வாக இயக்குனர் வினய் ரெய்னா இந்த தகவலை கூறியுள்ளார்.
உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதன் காரணமாக இந்த நடவடிக்கை அவசியமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் 2020ம் ஆண்டிலேயே ஃபோர்டு இந்தியா கார்களை முன்பதிவு செய்து கொள்பவர்கள் விலை உயர்வில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள். எனவே நடப்பாண்டிலேயே நீங்கள் முன்பதிவு செய்து விட்டால், விலை உயர்வினால் பாதிக்கப்படாமல் தப்பிக்கலாம்.
முன்னதாக இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியும் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்தவுள்ளதாக தெரிவித்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உற்பத்தி செலவு அதிகரிப்பு ஏற்படுத்திய தாக்கம் காரணமாகவே மாருதி சுஸுகி நிறுவனமும் கார்களின் விலையை உயர்த்தவுள்ளது.
என்றாலும் மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விலை எவ்வளவு உயரவுள்ளது? என்ற விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. விலை உயர்வு குறித்த முறையான அறிவிப்பை மாருதி சுஸுகி நிறுவனம் வரும் நாட்களில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது கார்களின் விலை எவ்வளவு சதவீதம் உயரவுள்ளது? என்பதும் அறிவிக்கப்படும்.
மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விலை உயர்வும் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. தற்போதைய நிலையில் ஆல்டோ, செலிரியோ, ஸ்விஃப்ட், இக்னிஸ், டிசையர், பலேனோ, சியாஸ், எர்டிகா, விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்-க்ராஸ் மற்றும் எக்ஸ்எல்-6 என ஏராளமான கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பிரச்னையால் ஏற்பட்ட விற்பனை சரிவில் இருந்து தற்போதுதான் கார் நிறுவனங்கள் மீண்டு வந்துள்ளன. ஊரடங்கு அமலுக்கு வந்த மார்ச் மாதத்திற்கு பின் இந்தியாவில் கார்களின் விற்பனை அதலபாதாளத்திற்கு சென்றது. ஆனால் கடந்த செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்தது.
பண்டிகை காலத்தை பயன்படுத்தி கொண்டு கார் நிறுவனங்கள் சரிவில் இருந்து மீண்டு வந்தன. ஆனால் அதற்குள்ளாக முன்னணி நிறுவனங்களுடைய கார்களின் விலை உயரவிருப்பது வாடிக்கையாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!