Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 7 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 8 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மோதல் பரிசோதனையில் மண்ணை கவ்விய சீன தயாரிப்பு... நல்ல வேல நம்ம ஆளுங்க தப்பிச்சிட்டாங்க...
சீன தயாரிப்பு ஒன்று மோதல் பரிசோதனையில் மண்ணைக் கவ்வியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஃபோர்டு நிறுவனத்தின் ரேஞ்ஜர் பிக்-அப் டிரக்கிற்கு போட்டியளிக்கும் வகையில் சீன நிறுவனம் கிரேட் வால் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்திய வாகனம் ஸ்டீட் 5. இந்த பிக்-அப் டிரக் தென் ஆப்பிரிக்கா போன்று குறிப்பிட்ட சில நாடுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரையே குளோபல் என்சிஏபி அமைப்பு சமீபத்தில் மோதல் பரிசோதனைக்கு உட்படுத்தியது.

இந்த பரிசோதனையில் ஸ்டீட் 5 பிக்-அப் டிரக் பூஜ்ஜியம் ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. இதற்கு, ஸ்டீட் 5 பிக்-அப் டிரக் பாதுகாப்பிற்கு சற்றும் உகந்த கார் அல்ல என்பதே பொருள் ஆகும். நட்சத்திரங்களின் அடிப்படையில் பாதுகாப்பிற்கான ரேட்டிங்கை குளோபல் என்சிஏபி அமைப்பு வழங்கும். அந்தவகையில், அதிகபட்சமாக 5 நட்சத்திரங்கள் வரை அது வழங்கும்.

ஆனால், கிரேட் வால் மோட்டார்ஸின் ஸ்டீட் 5 கார் ஒரு நட்சத்திரங்களைக் கூட பெறவில்லை. ஐந்திற்கு பூஜ்ஜியம் ஸ்டாரையே அது பெற்றிருக்கின்றது. இது தென்னாப்பிரிக்க மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏனெனில், குளோபல் என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்டிற்கு உட்படுத்தியது தென்னாப்பிரிக்காவிற்கு ஸ்பெக் மாடல் ஆகும்.

கிராஷ் டெஸ்டின்போது மணிக்கு 64 கிமீ எனும் வேகத்தில் இக்கார் இயக்கப்பட்டிருக்கின்றது. பொதுவாக, இந்த வேகத்தில்தான் குளோபல் என்சிஏபி தனது விபத்து பரிசோதனையை மேற்கொள்வது வழக்கம். இதனடிப்படையிலேயே ஸ்டீட் 5 பிக்-அப் டிரக்கும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் பெரியவர்களின் பாதுகாப்பில் பூஜ்ஜியம் புள்ளிகளை மட்டுமே பெற்றது.

இந்த ஆய்வு 17 புள்ளிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இந்த மிக தாழ்ந்த புள்ளிகளுக்கு பிக்-அப் டிரக்கில் ஏபிஎஸ் மற்றும் ஏர் பேக் போன்ற பாதுகாப்பு அம்சங்களைப் பெறாததே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதனால், இந்த மலிவு விலை பிக்-அப் டிரக் மோதல் சோதனையில் மண்ணைக் கவ்வியிருக்கின்றது.

சீட் பெல்ட் அணிந்தவாறு அமர்த்தப்பட்டிருந்த போதிலும் மோதலின்போது டம்மிகள் கடுமையாக சேதத்தைச் சந்தித்தன. இதனை அடிப்படையாகக் கொண்டே தற்போது தர மதிப்பீடு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, டம்மிகளின் தலை பகுதி நேரடியாக ஸ்டியரிங் வீலில் மோதி பெருத்த சேதத்தைப் பெற்றிருக்கின்றது.

இதுமட்டுமின்றி, டம்மிகளின் மார்பக பகுதி மற்றும் கால் பகுதி ஆகியவையும் மிக கடுமையான சேதத்தைச் சந்தித்திருக்கின்றது. இவற்றின் அடிப்படையிலேயே இக்கார் துளியளவும் பாதுகாப்பான பயணத்திற்கு வாகனம் அல்ல என்பது தெரியவந்துள்ளது.

கிரேட் வால் மோட்டார்ஸ் இந்த பிக்-அப் டிரக்கை 13,000 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் விற்பனைச் செய்து வருகின்றது. இது இந்திய மதிப்பில் 9,56 லட்ச ரூபாய் (தோராய மதிப்பு) ஆகும். பன்முக வேரியண்டுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், இந்த வாகனத்தின் எஸ்எக்ஸ் வேரியண்டில் பாதுகாப்பு அம்சங்களாக இரு ஏர் பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

இம்மாதிரியான சூழ்நிலையிலும் ஜிடபிள்யூஎம் ஸ்டீட் 5 பிக்-அப் டிரக் ஒரு ஸ்டார் ரேட்டிங்கைக் கூட பாதுகாப்பு விஷயத்தில் பெறவில்லை. இது இந்த பிக்-அப் டிரக்கின் கட்டுமானத்தின்மீது சந்தேகத்தை எழுப்பும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் நடப்பாண்டு கால் தடம் பதிக்க இருந்தது.
ஆனால், சீனாவிற்கு எதிரான இந்தியாவில் நிகழ்வதால் இதன் விஜயத்தில் தற்போது இழுபறி நீடித்து வருகின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் இந்த நிறுவனத்தின் வருகை சந்தேகம்தான் என்ற நிலை உருவாகியிருக்கின்றது. கடந்த காலங்களில் சீன நாட்டு ராணுவனத்தின் மேற்கொண்ட அத்துமீறல் மற்றும் சில கசப்பான செயல்களின் காரணமாக இந்த நிலை காணப்படுகின்றது.