Just In
- 4 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 4 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 6 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 6 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பேட்டரிக்கு மின்சாரம் செல்வதில் பிரச்சனை- அதிரடியாக கோனா எலக்ட்ரிக் கார்களை திரும்ப அழைக்கும் ஹூண்டாய்
ஹூண்டாய் தனது கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களை தானாக முன்வந்து இந்திய சந்தையில் திரும்ப அழைப்பதாக அறிவித்துள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாய் மோட்டார்ஸின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 2019 ஏப்ரல் 1 முதல் 2020 அக்டோபர் 31 வரை தயாரிக்கப்பட்ட மொத்தம் 456 கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன.

வாகனத்தின் அதி-மின்னழுத்த மின்கல (பேட்டரி) அமைப்புகளில் ஏற்படும் மின் குறைபாடு இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கைக்கு காரணம் என தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரச்சனையை வாடிக்கையாளர்கள் இலவசமாக சரிசெய்து கொள்ளலாம் எனவும் ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட வாகனங்களின் வாடிக்கையாளர்களை வரிசைபடி ஹூண்டாய் அழைக்கவுள்ளது. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவியின் உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தை எந்தவொரு ஹூண்டாய் மின்சார வாகன விற்பனையாளர்களிடமும் கொண்டுசென்று சிக்கலை தீர்த்துக் கொள்ளலாம்.

இதுகுறித்த ஹூண்டாய் அறிக்கையில், "ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (எச்எம்ஐஎல்) நிறுவனம் அதிக மின்னழுத்த பேட்டரி அமைப்பில் ஏற்படும் மின் குறைப்பாட்டை தீர்க்க சாத்தியமான திறனை ஆராய்வதற்காக 2019 ஏப்ரல் 01 முதல் 2020 அக்டோபர் 31 வரை உற்பத்தி செய்யப்பட்ட கோனா எலக்ட்ரிக் கார்களை ரீகால் செய்கிறது.

மேற்கூறிய காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட மொத்த 456 கோனா கார்களின் உரிமையாளர்களை எச்.எம்.ஐ.எல் தானாக முன்வந்து திரும்ப அழைக்கும். இந்த உரிமையாளர்கள் ஒரு கட்டமாக அறிவிக்கப்பட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் மின்சார வாகன விற்பனையாளர்களிடம் தங்கள் வாகனத்தை ஆய்வுக்கு கொண்டு வரலாம்.

நாடு முழுவதும் வலுவான சேவை மற்றும் ஆதரவு நெட்வொர்க்குடன் எச்.எம்.ஐ.எல் சிறந்த சேவையையும் கவனத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்திய முதல் மற்றும் தற்போதுவரையில் ஒரே எலக்ட்ரிக் காராக கோனா எஸ்யூவி விளங்குகிறது.

சமீபத்தில் மோதல் சோதனையில் முழு 5 நட்சத்திரங்களையும் பெற்று நம்மை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியிருந்த இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.23.75 லட்சமாக உள்ளது. இந்தியாவில் இதன் விற்பனைக்கு எம்ஜி இசட்எஸ் இவி கார் முக்கிய போட்டியாக உள்ளது.

கோனா எலக்ட்ரிக் காரில் 39.2 கிலோவாட்ஸ்.நேரம் லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பின் மூலமாக அதிகப்பட்சமாக 135 பிஎச்பி மற்றும் 394 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

பேட்டரியை 100 சதவீதம் நிரப்பி கொண்டு இந்த காரை அதிகப்பட்சமாக 452 கிமீ தூரம் வரையில் இயக்கலாம். நிலையான ஏசி சார்ஜர் உதவியுடன் இதன் பேட்டரியை முழுவதும் நிரப்ப 6 மணிநேரங்கள் தேவைப்படுகிறது. அதுவே டிசி விரைவான சார்ஜரின் மூலமாக 0-வில் இருந்து 80 சதவீத சார்ஜை வெறும் 57 நிமிடங்களில் நிரப்பி விடலாம்.
இத்தகைய திறன் கொண்ட இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் தான் தற்போது தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக திரும்ப அழைக்கப்பட்டுள்ளது.