Just In
- 4 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 5 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 6 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 7 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஃபார்முலா-2 கார் பந்தயத்தில் முதல் வெற்றியை பதிவு செய்து இந்திய வீரர் ஜெகன் தருவாலா அசத்தல்!
பஹ்ரைன் நாட்டில் நடந்த ஃபார்முலா-2 பந்தயத்தில் இந்திய வீரர் ஜெகன் தருவாலா வெற்றி பெற்று அசத்தி உள்ளார். ஃபார்முலா-2 போட்டியில் வெற்றிக் கனியை பறித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

உலகின் முதல் தர கார் பந்தயமாக ஃபார்முலா-1 இருந்து வருகிறது. இதற்கு அடுத்த தரத்திலான பந்தயமாக ஃபார்முலா-1 பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஃபார்முலா-2 பந்தயங்கள் பல்வேறு நாடுகளிலும் நடந்தது.

கடந்த ஜூலை மாதம் ஆஸ்திரியாவின் ஸ்பீல்பெர்க் நகரில் துவங்கிய இந்த பந்தயம் நேற்று பஹ்ரைன் நாட்டில் முடிவடைந்தது. இந்தநிலையில், நேற்று நடந்த இந்த சீசனின் கடைசிப் போட்டியில் இந்திய வீரர் ஜெகன் தருவாலா வெற்றி பெற்று அசத்தி இருக்கிறார்.

போட்டியை இரண்டாவது இடத்தில் இருந்து துவங்கிய ஜெகன் தருவல்லா மிக சாமர்த்தியமாக இறுதியில் வெற்றிக் கனியை பறித்தார். நேற்றைய போட்டியில் டேனியல் டிக்டம், மிக் சூமேக்கர் மற்றும் ஜெகன் தருவாலா இடையே கடும் போட்டி நிலவியது. விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் முதலில் சற்று பின்தங்கி இருந்த ஜெகன் இறுதியில் முனைப்புடன் செயல்பட்டு முதலிடத்தை பிடித்து அசத்தினார்.

இரண்டாவது இடத்தில் வந்த டிக்டமைவிட 3.5 வினாடிகள் முன்னிலை பெற்று போட்டியில் வெற்றி பெற்றார். இறுதிக்கட்டத்தில் கடும் போட்டி நிலவியபோதும் வெற்றிக் கனியை பறித்து அசத்தி இருக்கிறார். கடந்த வாரக் கடைசியில் நடந்த போட்டியில் மூன்றாவது இடம் பிடித்து போடியம் ஏறிய ஜெகன் நேற்றைய போட்டியில் முதல் இடத்தை பிடித்தார்.

மும்பையை சேர்ந்த 22 வயதான தருவாலா ஃபார்முலா-2 போட்டியில் முதல் வெற்றிக் கனியை ருசித்து இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார். புனேயில் உள்ள ராயோ ரேஸிங் அகடமியில் பயிற்சி பெற்ற இவர் கார்லின் அணி சார்பில் ஃபார்முலா-2 போட்டியில் பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான சீசனில் மிக் சூமேக்கர் அதிக புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை பெற்றார். இந்த ஆண்டு சீசனில் 215 புள்ளிகளுடன் மிக் சூமேக்கர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஃபார்முலா-1 பந்தயங்களில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள தனது தந்தை மேக்கேல் சூமேக்கர் வழியில் வெற்றிப் பயணத்தை துவங்கி இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஃபார்முலா-1 போட்டியிலும் ஹாஸ் அணி சார்பில் களமிறங்க உள்ளார் மிக் சூமேக்கர். அவர் தனது தந்தை வழியில் அதிக வெற்றிகளை குவிப்பார் ரசிகர்கள் அதிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.