Just In
- 59 min ago இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரில்லா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
- 1 hr ago வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
- 2 hrs ago ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!
- 7 hrs ago கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
Don't Miss!
- News லோக்சபா தேர்தல் முடிவுகளில் இழுபறி ஏற்பட்டால் யாருக்கு ஆதரவு? எடப்பாடி பழனிசாமி பரபர திட்டம்!
- Movies சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!
- Education தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!
- Finance ஆதார் கார்டு மோசடி.. சிக்குனா "சிக்கன்" ஆகிடுவீங்க!
- Lifestyle ராம நவமி 2024 ஏன் கொண்டாடப்படுகிறது? இதன் சிறப்பு என்ன தெரியுமா?
- Sports IPL 2024 : ஐபிஎல் தொடரில் எந்த ஆல் - ரவுண்டரும் செய்யாத சாதனையை செய்த சுனில் நரைன்
- Technology மிரட்டிவிட்டாப்ல மோட்டோ.. பட்ஜெட்ல pOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 12GB ரேம்.. QUAD ஷூட்டர்.. எந்த மாடல்?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
ஃபார்முலா-2 கார் பந்தயத்தில் முதல் வெற்றியை பதிவு செய்து இந்திய வீரர் ஜெகன் தருவாலா அசத்தல்!
பஹ்ரைன் நாட்டில் நடந்த ஃபார்முலா-2 பந்தயத்தில் இந்திய வீரர் ஜெகன் தருவாலா வெற்றி பெற்று அசத்தி உள்ளார். ஃபார்முலா-2 போட்டியில் வெற்றிக் கனியை பறித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.
உலகின் முதல் தர கார் பந்தயமாக ஃபார்முலா-1 இருந்து வருகிறது. இதற்கு அடுத்த தரத்திலான பந்தயமாக ஃபார்முலா-1 பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஃபார்முலா-2 பந்தயங்கள் பல்வேறு நாடுகளிலும் நடந்தது.
கடந்த ஜூலை மாதம் ஆஸ்திரியாவின் ஸ்பீல்பெர்க் நகரில் துவங்கிய இந்த பந்தயம் நேற்று பஹ்ரைன் நாட்டில் முடிவடைந்தது. இந்தநிலையில், நேற்று நடந்த இந்த சீசனின் கடைசிப் போட்டியில் இந்திய வீரர் ஜெகன் தருவாலா வெற்றி பெற்று அசத்தி இருக்கிறார்.
போட்டியை இரண்டாவது இடத்தில் இருந்து துவங்கிய ஜெகன் தருவல்லா மிக சாமர்த்தியமாக இறுதியில் வெற்றிக் கனியை பறித்தார். நேற்றைய போட்டியில் டேனியல் டிக்டம், மிக் சூமேக்கர் மற்றும் ஜெகன் தருவாலா இடையே கடும் போட்டி நிலவியது. விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் முதலில் சற்று பின்தங்கி இருந்த ஜெகன் இறுதியில் முனைப்புடன் செயல்பட்டு முதலிடத்தை பிடித்து அசத்தினார்.
இரண்டாவது இடத்தில் வந்த டிக்டமைவிட 3.5 வினாடிகள் முன்னிலை பெற்று போட்டியில் வெற்றி பெற்றார். இறுதிக்கட்டத்தில் கடும் போட்டி நிலவியபோதும் வெற்றிக் கனியை பறித்து அசத்தி இருக்கிறார். கடந்த வாரக் கடைசியில் நடந்த போட்டியில் மூன்றாவது இடம் பிடித்து போடியம் ஏறிய ஜெகன் நேற்றைய போட்டியில் முதல் இடத்தை பிடித்தார்.
மும்பையை சேர்ந்த 22 வயதான தருவாலா ஃபார்முலா-2 போட்டியில் முதல் வெற்றிக் கனியை ருசித்து இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார். புனேயில் உள்ள ராயோ ரேஸிங் அகடமியில் பயிற்சி பெற்ற இவர் கார்லின் அணி சார்பில் ஃபார்முலா-2 போட்டியில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான சீசனில் மிக் சூமேக்கர் அதிக புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை பெற்றார். இந்த ஆண்டு சீசனில் 215 புள்ளிகளுடன் மிக் சூமேக்கர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஃபார்முலா-1 பந்தயங்களில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள தனது தந்தை மேக்கேல் சூமேக்கர் வழியில் வெற்றிப் பயணத்தை துவங்கி இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஃபார்முலா-1 போட்டியிலும் ஹாஸ் அணி சார்பில் களமிறங்க உள்ளார் மிக் சூமேக்கர். அவர் தனது தந்தை வழியில் அதிக வெற்றிகளை குவிப்பார் ரசிகர்கள் அதிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.