Just In
- 41 min ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 1 hr ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
- 3 hrs ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- 5 hrs ago கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
Don't Miss!
- Technology அடிச்சான் பாரு realme.. இவ்வளவு கம்மி விலையில Realme Narzo 70 Pro 5G போனா? கண்டிப்பா வாங்காம இருக்கமாட்டீங்க..
- News திமுக கூட்டணியில் கொமதேக வேட்பாளர் சூர்யமூர்த்திக்கு பெரிய சிக்கல்.. வேகமாக பரவும் பழைய வீடியோ
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Movies ரெஜிஸ்டர் ஆபிஸில் ஆனந்த்.. கல்யாணத்தை நிறுத்த தீபா செய்ய போவது என்ன?கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
கியா சோல் கார் இந்திய வருகை விபரம் மற்றும் சிறப்பம்சங்கள் விபரம்!
சோல் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு கியா மோட்டார் நிறுவனம் பரிசீலித்து வருகிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு இந்திய மார்க்கெட்டில் களமிறங்கியது. முதல் மாடலாக செல்டோஸ் எஸ்யூவி சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அடுத்து வநத் கார்னிவல் பிரிமீயம் எம்பிவி காரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், அடுத்து சொனெட் காம்பேக்ட் எஸ்யூவியை அறிமுகம் செய்வதற்கு கியா மோட்டார் நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது. சொனெட் எஸ்யூவியும் பெரும் வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!
அடுத்து இந்தியாவிற்கான புதிய கார் மாடல்களை கியா பரிசீலித்து வருகிறது. அதில் டெலூரைடு எஸ்யூவியும் முக்கிய மாடலாக இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, அடுத்து சோல் காரையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு பரிசீலிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக, கார் அண்ட் பைக் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள கியா மோட்டார் இந்தியா அதிகாரி மனோகர் பட்,"ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த சோல் காருக்கு இந்தியர்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருப்பதை தெரிந்து கொண்டோம்.
சோல் காரின் வித்தியாசமான டிசைன் இந்திய ஆட்டோ எக்ஸ்போவிற்கு வந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. எனவே, சோல் அல்லது அதற்கு இணையான கார் மாடலை இந்தியாவில் கொண்டு வருவதற்கு பரிசீலித்து வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கியா சோல் காரின் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள சோல் காரில் இரண்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 147 பிஎச்பி பவரையும், 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 200 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும்.
கியா சோல் கார் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்படும். அதாவது, கியா சொனெட் மற்றும் சோல் ஆகியவை வெவ்வேறு பட்ஜெட் மற்றும் விருப்பத்தை அடிப்படையாக கொண்டு அறிமுகம் செய்யப்படும்.
இதனிடையே, மின்சார கார் மாடலையும் இந்தியாவில் கொண்டு வருவதற்கான திட்டமும் கியா மோட்டார் வசம் உள்ளது. ஆனால், அது சோல் எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்காது. ஏனெனில், விலை நிர்ணயம் அடிப்படையில், அதற்கான வர்த்தக வாய்ப்பு குறைவாக இருப்பதே காரணமாக பார்க்கப்படுகிறது.