Just In
- 41 min ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 2 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 7 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 7 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
Don't Miss!
- News உங்க ஐகியூவை டெஸ்ட் பண்ணிடலாம்.. எந்த டேங்கர் லாரி போய்க்கொண்டு இருக்கிறது.. முடிந்தால் கண்டுபிடிங்க
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Sports ஜடேஜா பேட்டிங் முதல் ருதுராஜ் கேப்டன்சி வரை.. சிஎஸ்கே செய்த தவறுகள்.. தோல்விக்கு காரணமான 3 சம்பவம்!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தரமான சம்பவம்... மற்ற மாநிலங்களை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த மம்தா அரசு... என்னனு தெரியுமா?
மற்ற மாநிலங்கள் மூக்கின் மேல் விரல் வைக்கும் வகையில், கொரோனா பிரச்னைக்கு மத்தியிலும், அருமையான நடவடிக்கைகளை மேற்கு வங்க அரசு எடுத்து வருகிறது.
இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே செல்கிறது. அத்துடன் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக அதிகப்படியான தொகை செலவிடப்படுவதால், நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் மின்சார வாகனங்கள் ஒரே மற்றும் நல்ல தீர்வாக பார்க்கப்படுகின்றன.
இதன் காரணமாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மாநில அரசுகளை பொறுத்தவரை கேரளா, கர்நாடகா, தெலங்கானா, டெல்லி மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இந்த விஷயத்தில் முன்னணியில் இருந்து வருகின்றன.
மேற்கு வங்க மாநில அரசை பொறுத்தவரை, மின்சார துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக தற்போது 5 மின்சார கார்களை வாங்கியுள்ளது. இஇஎஸ்எல் நிறுவனத்திடம் இருந்து, 5 ஆண்டுகள் குத்தகைக்கு இந்த 5 மின்சார கார்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக மின்சார வாகனங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் என நம்பப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில், 50 புதிய மின்சார பேருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய மின்சார பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக குளிர் சாதன வசதி செய்யப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
குளிர் சாதன வசதியுடன் கூடிய 50 புதிய மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் முடிவை மேற்கு வங்க போக்குவரத்து கழகம் கடந்த செவ்வாய் கிழமையன்று இறுதி செய்துள்ளதாக தெரிகிறது. இந்த 50 புதிய மின்சார பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வந்தால், கொல்கத்தா நகரில் இயங்கும் மொத்த மின்சார பேருந்துகளின் எண்ணிக்கை 130ஆக உயரும்.
தற்போதைய நிலையில் மேற்கு வங்க போக்குவரத்து கழகம் 80 மின்சார பேருந்துகளை இயக்கி வருகிறது. அவை சிறப்பாக இயங்கி வருவதன் காரணமாக, மேற்கு வங்க போக்குவரத்து கழகத்திற்கு பாராட்டுக்களும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களில் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையை இன்னும் உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
டீசலில் இயங்கும் பேருந்துகளுடன் ஒப்பிடும்போது மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவாகவே இருக்கும். எனவே மேற்கு வங்க போக்குவரத்து கழகத்திற்கு நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அத்துடன் கொல்கத்தா நகரின் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதில் இந்த மின்சார பேருந்துகள் முக்கிய பங்காற்றும்.
இதுபோன்ற காரணங்களால், மற்ற மாநில அரசுகளின் போக்குவரத்து கழகங்களின் கவனமும் மின்சார பேருந்துகளின் மீது திரும்பி வருகிறது. ஆனால் தற்போது கொரோனா பிரச்னை கோர தாண்டவம் ஆடி வருவதால், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பணிகளில் சற்றே பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
இருந்தாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். எனவே வாகன உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ச்சியாக பல்வேறு மின்சார தயாரிப்புகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக மின்சார இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் அறிமுகமாகி வருகின்றன.
மின்சார கார்களை பொறுத்தவரை தற்போதைய நிலையில், டாடா நெக்ஸான், எம்ஜி இஸட்எஸ் மற்றும் ஹூண்டாய் கோனா ஆகிய கார்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், வரும் காலங்களில் மின்சார கார்கள் அதிகளவில் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
வெளிநாட்டுகாரன் எல்லாம் உஷாராகிட்டான் ! இந்த கம்பெனி வண்டியோட ஏற்றுமதி படுத்துக்கிச்சு!
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!