Just In
- 2 hrs ago
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- 3 hrs ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 5 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 15 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
Don't Miss!
- News
கேரளாவில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீப்பிடித்ததால் பரபரப்பு... பெரும் விபத்து தவிர்ப்பு!
- Sports
வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூரை பாராட்டி ட்வீட்டிய கேப்டன்... மராத்தியில் பாராட்டு
- Finance
40% வரை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி.. அமேசானின் சூப்பர் சலுகைகள்.. கவனிக்க வேண்டிய ஆஃபர் மழை..!
- Movies
திருமணம் செய்வதாக ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை.. பைலட் மீது டிவி நடிகை பரபரப்பு புகார்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்கள்!
மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் மின்சார கார் மார்க்கெட்டில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முன்கூட்டியே இந்த சந்தையில் துண்டை போட்டு இடத்தை பிடித்துவிட வேண்டும் என்பதில் அனைத்து நிறுவனங்களும் தீவிரமாக உள்ளன. அந்த வகையில், இந்திய மின்சார கார் மார்க்கெட்டில் மிக நீண்ட காலமாக இயங்கி வரும் மஹிந்திரா நிறுவனம் தனி நபர் பயன்பாட்டு சந்தைக்கு தகுந்த மாடலை களமிறக்க ஆயத்தமாகி வருகிறது.

அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதம் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவியை களமிறக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தயாரிப்பு நிலைக்கு உகந்த அம்சங்களுடன் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக காடிவாடி தள செய்தி தெரிவிக்கிறது.

தற்போது விற்பனையில் வலுவான நிலையில் உள்ள டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு நேர் எதிராக இந்த புதிய எஸ்யூவி நிலைநிறுத்தப்படும். அதேநேரத்தில், டாடா நெக்ஸான் எஸ்யூவியைவிட கூடுதல் சிறப்பம்சங்களுடன் கொண்டு வருவதற்கு மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் பெட்ரோல், டீசல் மாடல்களில் இருந்து வேறுபடும் வகையில் க்ரில் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. இது எலெக்ட்ரிக் கார் என்பதை பரைசாற்றும் வகையில் நீல வண்ணத்திலான அலங்கார விஷயங்களுடன் தனித்துவமாக இருக்கிறது.

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். ஆனால், இந்த புதிய எஸ்யூவி 370 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். மேலும், இரண்டு விதமான பேட்டரி திறன் கொண்டதாக வர இருப்பதாகவும் தெரிகிறது.

மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார வாகனங்களுக்கான ஸ்கேளபில் மோடுலர் ஆர்க்கிடெக்ச்சர் 350 என்ற பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையின் கீழ் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் காரின் மின் மோட்டார் 204 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் ரூ.14 லட்சம் முதல் ரூ.16 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.