Just In
- 5 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 5 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 6 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 10 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
புதிய தலைமுறை மஹிந்திரா தார், எக்ஸ்யூவி500 எஸ்யூவிகள் எப்போது அறிமுகம்?
கொரோனா பாதிப்பு காரணமாக, தடங்கலான புதிய தலைமுறை மஹிந்திரா தார் மற்றும் எக்ஸ்யூவி500 எஸ்யூவிகள் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளன என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
எஸ்யூவி தயாரிப்பில் ஸ்பெஷலிஸ்ட்டாக விளங்கும் மஹிந்திரா வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் தனது பிரபல மாடல்களை முற்றிலும் புதிய தலைமுறைக்கு கொண்டு செல்ல இருக்கிறது. அதன்படி, தார் மற்றும் எக்ஸ்யூவி500 ஆகியவை புதிய தலைமுறை மாடல்களாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
வாடிக்கையாளர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி உள்ள இந்த மாடல்களின் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எக்கனாமிக் டைம்ஸ் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி வீஜே நக்ரா," புதிய தலைமுறை தார், எக்ஸ்யூவி500 மாடல்கள் அறிமுகம் குறித்த புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில்,"கொரோனாவுக்கு முந்தைய நிலைமையை ஒப்பிட்டுபோது, தற்போது 40 சதவீதம் அளவுக்கு வாடிக்கையாளர்கள் ஷோரூம்களுக்கு வருகை தருகின்றனர். 75 சதவீதம் அளவுக்கு விசாரணைகளும் வருகின்றன. அதாவது, நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாகவே வாடிக்கையாளர்களின் வரவும், விசாரணைகளும் அதிகரித்து வருகின்றன.
அதேநேரத்தில், எங்களது வாகன உற்பத்திக்கான உதிரிபாகங்களை பெறுவதில் தொடர்ந்து சில தடங்கல்கள் உள்ளன. எங்களது உற்பத்தி சீரடைவதற்கு 30 முதல் 45 நாட்கள் பிடிக்கும். அதுவும், எந்த லாக்டவுனும் போடவில்லை என்றால் மட்டுமே இது சாத்தியம்.
ஊரக பகுதிகளில்தான் எங்களுக்கு 50 சதவீதம் அளவுக்கு விற்பனை உள்ளது. கொரோனா லாக்டவுன் தளர்வுகளுக்கு பிறகு ஊரகப் பகுதிகளில் எங்களது கார் விற்பனை அதிகரித்து வருகிறது.
சீனாவிலிருந்து சில முக்கிய உதிரிபாகங்களை இறக்குமதி செய்து வருகிறோம். அதனை இந்தியாவிலிருந்து பெறுவதற்கு திட்டமிட்டுள்ளோம். அதாவது, 100 சதவீத இந்தியாவில் உற்பத்தியாகும் உதிரிபாகங்களுடன் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.
கார் உற்பத்தியில் எழுந்துள்ள நடைமுறை சிக்கல்களால் எங்களது புதிய வாகனங்களின் அறிமுகங்கள் தள்ளிப் போகும். புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 மற்றும் தார் எஸ்யூவிகள் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு மற்றும் நான்காவது காலாண்டில் அறிமுகம் செய்வதற்கான திட்டம் உள்ளது," என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பண்டிகை கால துவக்கத்திற்கு முன்னதாகவே எதிர்பார்க்கப்பட்ட இந்த மாடல்களின் அறிமுகம் சில மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனினும், அடுத்த சில மாதங்களில் நிலைமை சீராகும்போது இந்த புதிய மாடல்களை களமிறக்குவது உசிதம் என்று மஹிந்திரா கருதுகிறது.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா