Just In
- 47 min ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 5 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 5 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 6 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சாக்லேட்டை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் மஹிந்திரா... இதுக்கு பின்னாடி கசப்பான தகவல் ஒன்னு இருக்கு!!
மஹிந்திரா நிறுவனம் தார் காரை புக் செய்த வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு சாக்லேட் பாக்ஸை அனுப்பி வைத்து வருகின்றது. இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.
எதிர்பார்த்திராத அளவிற்கு மஹிந்திரா தார் காரின் விற்பனை நடைபெற்று வருகின்றது. இக்காரை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மஹிந்திரா நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. முன்பெப்போதும் இல்லாத வகையில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் இதனை அறிமுகப்படுத்தியிருக்கின்றது.
அதாவது, பழைய தலைமுறை தார் காரைக் காட்டிலும் தற்போதைய புதிய தலைமுறை தார் பெரிய உருவம், அதிக திறன் வாய்ந்தது மற்றும் கூடுதல் சொகுசு வசதிகளுடன் கட்டமைப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் இக்காருக்கு இந்தியாவில் அமோகமான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
இதுமட்டுமின்றி நம்ப முடியாத குறைந்த விலையில் இக்கார் விற்பனைக்குக் களமிறக்கியதும் இந்த அமோகமான வரவேற்பு காரணமாக அமைந்திருக்கின்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் தற்போது தார் காருக்கு கிடைத்து வரவேற்பு மஹிந்திரா நிறுவனத்திற்கே நம்ப முடியாத வகையில் அமைந்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையால் இக்காருக்கான காத்திருப்பு காலம் நீடித்த வண்ணம் இருக்கின்றது.
குறிப்பிட்ட சில வேரியண்டுகளுக்கு எக்கசக்க புக்கிங் கிடைத்திருப்பதால் அவற்றிற்கான காத்திருப்பு காலம் 7 மாதங்களாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மஹிந்திரா தார் காரை புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு மஹிந்திரா நிறுவனம் வலையுயர்ந்த ஃபெர்ரெரோ ரோச்சர் சாக்லெட்டுகளை அனுப்பி வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Image Courtesy: Satish Bojan
இந்த சாக்லெட்டுகளுடன் கூடவே ஓர் கடிதத்தையும் மஹிந்திரா நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. முதலில் சாக்லெட்டைக் கண்டு ஆச்சரிமுற்ற தார் உரிமையாளர்கள் (புக்கிங் செய்துவிட்டு காருக்காக காத்திருப்பவர்கள்) பின்னர் கடிதத்தைப் பார்த்ததும் ஷாக்காகிவிட்டனர். ஆமாங்க, காத்திருப்பு காலம் அதிகரித்திருப்பதை இந்த கடிதத்தின் வாயிலாகவே மஹிந்திரா தெரிவித்து வருகின்றது.
Image Courtesy: Adityendra Solan
இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர்களைக் கூல் படுத்தும் விதமாக அந்த கடிதத்துடன் சாக்லெட்டையும் மஹிந்திரா அனுப்பி வைத்துள்ளது. ஷேன் உம்மர் எனும் நபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் வாயிலாகவே மஹிந்திரா நிறுவனத்தின் தனித்துவமான முயற்சி பற்றிய தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
அந்த கடிதத்தில் காத்திருப்பு காலம் அதிகரித்ததற்கான காரணம் மற்றும் இதுவரை எவ்வளவு புக்கிங்கை தார் பெற்றிருக்கின்றது என்ற பல்வேறு தகவல்களை மஹிந்திரா வழங்கியுள்ளது. தொடர்ந்து பண்டிகைக் கால வாழ்த்து மற்றும் பாதுகாப்புடன் இருங்கள் எனவும் அது கூறியிருக்கின்றது. இந்த கடிதத்தின்படி, தற்போது வரை மஹிந்திரா தார் காருக்கு 21,000 முன் பதிவுகள் கிடைத்திருப்பது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.
மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே இக்காரின் டெலிவரி பணியைத் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தகுந்தது. அண்மையில் முதல் 500 யூனிட்டுகள் டெலிவரிக்காக வெளியேற்றப்பட்டது. ஆனால், இக்காரை புக்கிங் செய்தவர்கள் இன்னும் பலர் இருக்கின்றனர். இவர்களுக்கான காத்திருப்பு காலத்திற்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாகவே கடிதம் மற்றும் இனிப்புகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
அதேசமயம், புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு தார் காரை விரைவில் டெலிவரி கொடுக்க வேண்டும் என்பதற்காக உற்பத்தி திறனை அதிகரிக்கச் செய்யும் பணியில் மஹிந்திரா ஈடுபட்டு வருகின்றது. தற்போது இதன் உற்பத்தி திறன் மாதம் ஒன்றிற்கு 2,000 என கூறப்படுகின்றது. இதனை 3 ஆயிரமாக உயர்த்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. வருகின்ற ஜனவரி மாதத்திற்குள் இந்த உற்பத்தி திறனில் தார் தயாரிக்கப்படும் என தெரிகின்றது.