Just In
- 1 hr ago
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- 2 hrs ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 4 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 15 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
Don't Miss!
- News
சீனாவின் உகான் லேப்ல இருந்துதான்...கொரோனா வைரஸ் பரவியது...ஆதாரங்களை முன்வைக்கும் அமெரிக்கா!
- Sports
எதிரணி வீரர்களை சீண்டறது கீழ்த்தரமானது.. இதுமூலமா நம்மோட பலவீனம்தான் வெளிப்படும்!
- Movies
திருமணம் செய்வதாக ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை.. பைலட் மீது டிவி நடிகை பரபரப்பு புகார்!
- Finance
நரேந்திர மோடியின் செம அறிவிப்பு.. புதிய தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குட் நியூஸ்... புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் புக்கிங் துவங்கும் தேதி வெளியானது
பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ள புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு புக்கிங் துவங்கும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருந்து வரும் மஹிந்திரா தார் எஸ்யூவி புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய மாடலை உருவத்திலும், தொழில்நுட்பத்திலும் வேற லெவலுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனால், இந்த புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை ஆஃப்ரோடு பிரியர்கள் மட்டுமின்றி, சாதாரண வகை எஸ்யூவி பிரியர்கள், பிரபலங்களையும் கவர்ந்து இழுத்துள்ளது.

இந்த நிலையில், வரும் அக்டோபர் 2ந் தேதி மஹிந்திரா நிறுவனத்தின் 75வது ஆண்டு ஸ்தாபகர் தினம் மற்றும் காந்தி ஜெயந்தி தினத்தன்று, புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விலை அறிவிப்புடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அன்றைய தினமே முன்பதிவும் துவங்கப்பட உள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய டீசர் வீடியோ மூலமாக இது தெரிய வந்துள்ளது.

அடுத்து எல்எக்ஸ் என்ற மாடலானது அதிக வசதிகளுடன் எஸ்யூவி வாங்க திட்டமிட்டிருப்போரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், அதிக வசதிகள் கொண்ட மாடலாக இருக்கும்.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளது. பெட்ரோல் எஞ்சின் 150 பிஎச்பி பவரையும், டீசல் எஞ்சின் 130 பிஎச்பி பவரையும் வழங்கும். இரண்டு மாடல்களிலுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் வழங்கப்பட உள்ளது.

அதேநேரத்தில், ஏஎக்ஸ் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இருக்காது. எனினும், ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ப மெக்கானிக்கல் லாக்கிங் டிஃபரன்ஷியல், இரண்டு ஏர்பேக்குகள், ரோல் கேஜ் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், எம்ஐடி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டயர்கள் எந்த நிலையில் உள்ளது என்பதை காட்டும் வசதி, தண்ணீர் புகாத வசதியுடன் மியூசிக் சிஸ்டம் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

வரும் 2ந் தேதி முன்பதிவு துவங்கப்பட இருக்கும் நிலையில், அடுத்த மாத பிற்பாதியில் டெலிவிரிப் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்ஸ் குர்கா மட்டுமின்றி, சப்-காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களுக்கும் இந்த புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி போட்டியாக இருக்கும்.