ஊரடங்குகளுக்குபிறகு எந்த காரை மக்கள் அதிகளவில் வாங்கியுள்ளனர் தெரியுமா? வழக்கம்போல் ஓங்கிநிற்கும் மாருதியின்கை

ஊரடங்குகளுக்கு மத்தியில் கடந்த 2020 ஜூன் மாதத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதத்திற்கு உள்ளாக அதிகளவில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கார்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஊரடங்குகளுக்குபிறகு எந்த காரை மக்கள் அதிகளவில் வாங்கியுள்ளனர் தெரியுமா? வழக்கம்போல் ஓங்கிநிற்கும் மாருதியின்கை

இந்திய சந்தையில் கார்கள் விற்பனையில் யார் முதலிடத்தில் இருப்பார் என்று உங்கள் எல்லாருக்குமே நன்றாகவே தெரியும், ஆம் மாருதி சுஸுகி தான். இந்நிறுவனத்தின் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் கார் மாடலாக விளங்குகிறது.

ஊரடங்குகளுக்குபிறகு எந்த காரை மக்கள் அதிகளவில் வாங்கியுள்ளனர் தெரியுமா? வழக்கம்போல் ஓங்கிநிற்கும் மாருதியின்கை

அது, நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ள ஜூன்- நவம்பர் மாத விற்பனையிலும் தொடர்ந்துள்ளது. 2005ல் முதன்முதலாக நம் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் இத்தனை வருடங்களில் பல அப்கிரேட்களை பெற்று தற்சமயம் மூன்றாம் தலைமுறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஊரடங்குகளுக்குபிறகு எந்த காரை மக்கள் அதிகளவில் வாங்கியுள்ளனர் தெரியுமா? வழக்கம்போல் ஓங்கிநிற்கும் மாருதியின்கை

ஜடோ டைனாமிக்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள தகவலில் 2020 ஜூன் மாதத்தில் இருந்து 2020 நவம்பர் மாதம் வரையில் ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 15,798 ஸ்விஃப்ட் கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்குகளுக்குபிறகு எந்த காரை மக்கள் அதிகளவில் வாங்கியுள்ளனர் தெரியுமா? வழக்கம்போல் ஓங்கிநிற்கும் மாருதியின்கை

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த ஊரடங்குகளில் சற்று தளர்வுகள் ஜூன் மாதத்தில் இருந்துதான் படிப்படியாக கொண்டுவரப்பட்டன. அத்தகைய சூழலில் ஸ்விஃப்ட் இவ்வாறான சராசரி விற்பனை எண்ணிக்கையை சந்தையில் பதிவு செய்திருப்பது உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கிறது.

ஊரடங்குகளுக்குபிறகு எந்த காரை மக்கள் அதிகளவில் வாங்கியுள்ளனர் தெரியுமா? வழக்கம்போல் ஓங்கிநிற்கும் மாருதியின்கை

ஜடோ வெளியிட்டுள்ள இந்த லிஸ்ட்டில் மொத்தம் 10 கார்களின் பெயர்கள் அவற்றின் சராசரி விற்பனை எண்ணிக்கையுடன் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த 10 கார் மாடல்களில் சுமார் 7 மாடல்கள் மாருதி சுஸுகி நிறுவனத்துடையதாகும்.

ஊரடங்குகளுக்குபிறகு எந்த காரை மக்கள் அதிகளவில் வாங்கியுள்ளனர் தெரியுமா? வழக்கம்போல் ஓங்கிநிற்கும் மாருதியின்கை

அப்படியென்றால் இந்தியாவில் கார்களின் விற்பனையில் இந்த இந்திய- ஜப்பானிய கூட்டணி நிறுவனம் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதை நீங்களே பாருங்கள். மேற்கூறப்பட்டுள்ள இந்த கால இடைவெளியில் (2020 ஜூன் -நவம்பர்) மொத்தம் 14 லட்ச கார்கள் நம் நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்குகளுக்குபிறகு எந்த காரை மக்கள் அதிகளவில் வாங்கியுள்ளனர் தெரியுமா? வழக்கம்போல் ஓங்கிநிற்கும் மாருதியின்கை

இதில் 40 சதவீதம் ஹேட்ச்பேக் ரக கார்கள் ஆகும். தொடர்ச்சியாக நான்கு மாருதி சுஸுகி தயாரிப்புகளை தொடர்ந்து இந்த வரிசையில் ஐந்தாவது இடத்தில் ஹூண்டாய் மோட்டார்ஸின் க்ரெட்டா எஸ்யூவி கார் 11,480 என்ற சராசரி விற்பனை எண்ணிக்கையுடன் உள்ளது.

ஊரடங்குகளுக்குபிறகு எந்த காரை மக்கள் அதிகளவில் வாங்கியுள்ளனர் தெரியுமா? வழக்கம்போல் ஓங்கிநிற்கும் மாருதியின்கை

அடுத்த ஹூண்டாய் மாடலாக க்ராண்ட் ஐ10 நியோஸ் 9,380 என்ற சராசரி விற்பனை எண்ணிக்கையுடன் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. க்ரெட்டா, க்ராண்ட் ஐ10 நியோஸ் போன்ற தயாரிப்புகளின் மூலமாக விற்பனையில் மாருதி சுஸுகிக்கு அடுத்து தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவில் கோலோச்சி வருகிறது.

ஊரடங்குகளுக்குபிறகு எந்த காரை மக்கள் அதிகளவில் வாங்கியுள்ளனர் தெரியுமா? வழக்கம்போல் ஓங்கிநிற்கும் மாருதியின்கை

இந்த டாப்-10 லிஸ்ட்டில் உள்ள மற்றொரு கார் பிராண்ட் என்று பார்த்தால் கியா மோட்டார்ஸ். 2019ல் செல்டோஸ் எஸ்யூவி காரின் மூலமாக இந்தியாவில் கார் விற்பனையை துவங்கிய இந்நிறுவனத்தின் செல்டோஸ் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நவம்பர் மாதத்திற்கு உள்ளாக ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 8,871 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
top 10 selling models jun - nov 2020
Story first published: Saturday, December 19, 2020, 0:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X