செல்டோஸ் மார்க்கெட்டிற்கு குறி... மாருதி - டொயோட்டா கூட்டணியில் உருவாகும் புத்தம் புதிய எஸ்யூவி!

கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா கார்களுக்கு போட்டியாக புதிய மிட்சைஸ் எஸ்யூவியை மாருதி - டொயோட்டா கூட்டணி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மாருதி - டொயோட்டா கூட்டணியில் உருவாகும் புத்தம் புதிய எஸ்யூவி!

இந்திய கார் சந்தையில் மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா கார் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. புதிய கார்களை உருவாக்குவதற்கான முதலீடுகளை வெகுவாக குறைக்கும் வகையில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டது. முதலீட்டை குறைத்து லாபத்தை அதிகரிப்பதற்கும், புதிய மாடல்களை உருவாக்கும் கால அளவை குறைப்பதற்கும் இது வழிவகுத்துள்ளது.

மாருதி - டொயோட்டா கூட்டணியில் உருவாகும் புத்தம் புதிய எஸ்யூவி!

இந்த கூட்டணியில் முதல்கட்டமாக, மாருதி நிறுவனத்தின் பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா கார்களை டொயோட்டா கார் நிறுவனம் ரீபேட்ஜ் செய்து முறையே க்ளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் என்ற பெயர்களில் விற்பனை செய்து வருகிறது.

மாருதி - டொயோட்டா கூட்டணியில் உருவாகும் புத்தம் புதிய எஸ்யூவி!

இந்த நிலையில், அடுத்தக்கட்டமாக புத்தம் புதிய மிட்சைஸ் எஸ்யூவியை மாருதி - டொயோட்டா கூட்டணி உருவாக்கி வருவதாக ஆட்டோகார் இந்தியா தள செய்தி தெரிவிக்கிறது. இதன்படி, டொயோட்டா ஆலையில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.

மாருதி - டொயோட்டா கூட்டணியில் உருவாகும் புத்தம் புதிய எஸ்யூவி!

இந்த நிலையில், விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு பதிலாக புதிய மிட்சைஸ் எஸ்யூவியை உற்பத்தி செய்வதற்கு மாருதி - டொயோட்டா கூட்டணி முடிவு செய்திருப்பதுடன், இதற்கான அரசு அனுமதிக்கும் விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாருதி - டொயோட்டா கூட்டணியில் உருவாகும் புத்தம் புதிய எஸ்யூவி!

பெங்களூர் அருகே பிடதியில் டொயோட்டா நிறுவனம் இரண்டு கார் ஆலைகளில் கார் உற்பத்தி செய்து வருகிறது. முதல் ஆலையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் ஆகிய மாடல்களும், இரண்டாவது ஆலையில் யாரிஸ், கேம்ரி ஹைப்ரிட் ஆகிய மாடல்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மாருதி - டொயோட்டா கூட்டணியில் உருவாகும் புத்தம் புதிய எஸ்யூவி!

இந்த நிலையில், மாருதி - டொயோட்டா கூட்டணியில் உருவாகும் புதிய மிட்சைஸ் எஸ்யூவியானது டொயோட்டாவின் பிடதி கார் ஆலையில் உற்பத்தி செய்வதற்கு முடிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

மாருதி - டொயோட்டா கூட்டணியில் உருவாகும் புத்தம் புதிய எஸ்யூவி!

புதிதாக உருவாக்கப்படும் மிட்சைஸ் எஸ்யூவியானது மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா பிராண்டுகளில் விற்பனைக்கு செல்லும். இந்த புதிய மாடல் டொயோட்டா நிறுவனத்தின் DGNA எனப்படும் கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

மாருதி - டொயோட்டா கூட்டணியில் உருவாகும் புத்தம் புதிய எஸ்யூவி!

இந்த புதிய மாடலில் இடம்பெற இருக்கும் எஞ்சின் குறித்த எந்த தகவலும் இல்லை. ஆனால், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அல்லது டர்போ சார்ஜர் துணையுடன் செயல்படும் பெட்ரோல் எஞ்சின் தேர்வு இடம்பெற வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இந்த புதிய மாடல் குறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் அடுத்த ஆண்டு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

குறிப்பு: மாதிரிக்காக டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, December 4, 2020, 11:40 [IST]
English summary
Toyota and Maruti Suzuki entered a partnership a couple of years ago and since then have introduced two 'rebadged' models in the Indian market. However, reports now suggest that the Toyota-Maruti Suzuki partnership could now be looking at jointly developing a brand new model for the mid-size SUV segment.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+