Just In
- 1 hr ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 1 hr ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 1 hr ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- 5 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
Don't Miss!
- Finance அமெரிக்க நிறுவனத்துடன் டீல்.. எகிறியது ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் பங்கு விலை..!
- News ஜனநாயக பெருவிழா.. அசத்திய ஆளுநர் ரவி! இப்படி எந்த ஆளுநரும் செஞ்சதே இல்லையே? தமிழும் கத்துக்கிட்டாரே!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆயுதபூஜை பண்டிகையில் பென்ஸ் கார்களை வாங்கி குவித்த இந்தியர்கள்! 550 கார்கள் டெலிவிரி செய்யப்பட்டதாம்
இந்த நவராத்திரி மற்றும் தசரா பண்டிக்கை காலத்தில் 550 கார்களை இந்தியாவில் டெலிவிரி செய்துள்ளதாக மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
கடந்த 2019ஆம் ஆண்டை தொடர்ந்து இந்த ஆண்டிலும் இந்த பண்டிக்கை காலத்தில் இத்தகைய இமாலய எண்ணிக்கையிலான கார்களை மெர்சிடிஸ் டெலிவிரி செய்துள்ளது. இந்த 550 கார்களில் பெரும்பாலான கார்கள் டெல்லி என்சிஆர், மும்பை, குஜராத் உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் தான் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக டெல்லி என்சிஆர் பகுதியில் மட்டும் 175 கார்களை அதன் உரிமையாளர்கள் டெலிவிரி எடுத்துள்ளனர். தற்போதைய கொரோனா சூழ்நிலையிலும் இந்த 2020ஆம் ஆண்டின் மூன்றாம் கால்பகுதியில் குறிப்பிடத்தக்க இலாபத்தை ஈட்டியுள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
டெல்லி என்.சி.ஆர், மும்பை மற்றும் குஜராத் போன்ற முக்கிய சந்தைகளில் வலுவான தேவையை கண்டதாக கூறியுள்ள இந்நிறுவனம் இயல்புநிலை திரும்பி வருவதையும், தங்களது கார்களில் சி-கிளாஸ், இ-கிளாஸ் செடான்கள் மற்றும் ஜிஎல்சி, ஜிஎல்இ மற்றும் ஜிஎல்எஸ் எஸ்யூவிகளுக்கு அதிகளவில் தேவை இருப்பதையும் உணர்ந்ததாக தெரிவித்துள்ளது.
இத்தகைய வளர்ச்சி குறித்து மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் சிஇஒ-வுமான மார்டின் ஸ்க்வெங்க் கருத்து தெரிவிக்கையில், இந்த ஆண்டு பண்டிகை காலம் மிகவும் வலுவான பதிவுகளுடன் தொடங்கியுள்ளது, இந்த நேர்மறையான வாடிக்கையாளர் உணர்வை கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த ஈர்க்கக்கூடிய எண்ணிக்கையிலான டெலிவிரிகள் ஒரு நல்ல பண்டிகை காலத்தை உணர்த்துகின்றன. மேலும் ஆடம்பர கார் வாங்குவோர் மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்ட் மற்றும் தயாரிப்புகளின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் உறுதியாக அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என கூறினார்.
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!