Just In
- 17 min ago அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- 1 hr ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 4 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 6 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
Don't Miss!
- Finance அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா.. வாஸ்ட்அப்-க்கு தடை.. என்ன நடக்குது..?!
- News IQவை டெஸ்ட் செய்யலாமா? இந்த படத்தில் குகை மனிதருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனித முகம்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Movies Trisha: 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட திரிஷா!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
இந்தியாவிற்கு பெருமிதம்! பாதுகாப்பான கார்களின் டாப்-10 பட்டியலில் இணைந்த மற்றொரு மஹிந்திரா தயாரிப்பு
இந்தியாவின் பாதுகாப்பான டாப்-10 கார்களின் பட்டியலை, புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி மாற்றியமைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் சோதனைகளில், மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யூவி 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என இருவருக்குமான பாதுகாப்பிலும், மஹிந்திரா தார் எஸ்யூவி 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று, இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளது.
அத்துடன் இந்தியாவின் பாதுகாப்பான டாப்-10 கார்களின் பட்டியலையும், இதன் மூலம் மஹிந்திரா தார் எஸ்யூவி மாற்றியமைத்துள்ளது. 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் உடன் இந்த பட்டியலில், மஹிந்திரா தார் எஸ்யூவி தற்போது 4வது இடத்தில் உள்ளது. எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் மராஸ்ஸோ எம்பிவி ஆகிய கார்களுக்கு பிறகு, இந்தியாவின் பாதுகாப்பான டாப்-10 கார்களின் பட்டியலில் இடம்பிடிக்கும் மூன்றாவது மஹிந்திரா தயாரிப்பு என்ற பெருமையை 2020 தார் எஸ்யூவி பெறுகிறது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!
இதுவே இந்தியாவின் பாதுகாப்பான டாப்-5 கார்கள் என எடுத்து கொண்டால், எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் தார் எஸ்யூவி என மஹிந்திரா நிறுவனம் 2 கார்களை கொண்டுள்ளது. அத்துடன் இந்தியாவின் பாதுகாப்பான ஆஃப்ரோடு கார் எனவும் 2020 மஹிந்திரா தார் எஸ்யூவியை தற்போது அதிகாரப்பூர்வமாக நம்மால் அழைக்க முடியும்.
குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளின் அடிப்படையில், இந்தியாவின் பாதுகாப்பான டாப்-10 கார்களின் பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி முதலிடத்தில் தொடர்கிறது. இரண்டாவது இடத்தில் டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக்கும், மூன்றாவது இடத்தில் டாடா நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவியும் உள்ளன.
நான்காவது இடத்தை தற்போது மஹிந்திரா தார் எஸ்யூவி சொந்தமாக்கி கொண்டுள்ளது. 5வது இடத்தை டாடா நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி பிடித்துள்ளது. டாடா நிறுவனம் முதலில் நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவியை குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளுக்கு அனுப்பியபோது, பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 நட்சத்திரங்களையும் மட்டுமே பெற்றது.
ஆனால் டாடா நிறுவனம் இதில் திருப்தியடையவில்லை. எனவே நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவியின் பாதுகாப்பை இன்னும் மேம்படுத்தி, மீண்டும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளுக்கு அனுப்பியது. இம்முறை டாடா நெக்ஸான் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் முழுமையாக 5 நட்சத்திரங்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 நட்சத்திரங்களையும் பெற்று அசத்தியது.
6வது இடத்தில் டாடா நிறுவனத்தின் டிகோர்/டியாகோ கார்கள் உள்ளன. 7வது இடத்தில் ஃபோக்ஸ்வேகன் போலோவும், 8வது இடத்தில் மஹிந்திரா மராஸ்ஸோவும் உள்ளன. 9வது இடத்தை டொயோட்டா எட்டியோஸ் காரும், 10வது இடத்தை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரும் பிடித்துள்ளன. குளோபல் என்சிஏபி அமைப்பு கடந்த 6 ஆண்டுகளில் (2014-2020) 40க்கும் மேற்பட்ட கார்களை மோதல் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் டாப்-10 கார்களை நாங்கள் வழங்கியுள்ளோம். முழுமையான பட்டியலை நீங்கள் கீழே காணலாம்.
தற்போது டாப்-10 பட்டியலில் புதிதாக இணைந்துள்ள மஹிந்திரா தார் கடந்த அக்டோபர் 2ம் தேதிதான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. பழைய தார் எஸ்யூவியை மஹிந்திரா நிறுவனம் முற்றிலும் மேம்படுத்தி புதிய தலைமுறை மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடலுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே தற்போது இந்த எஸ்யூவியின் காத்திருப்பு காலம் 9 மாதங்களாக நீண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!