Just In
- 1 hr ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 3 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 4 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 4 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Movies ’ஹாட் ஸ்பாட்’ விமர்சனம்.. மாப்பிள்ளைக்கு தாலி.. அண்ணன் தங்கை திருமணம்.. இன்னும் இருக்கு!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
உச்சாணி கொம்பில் மஹிந்திரா தார்... உச்சுக் கொட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்!
அசத்தும் அம்சங்களுடன் வந்த புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், இந்த காருக்கான காத்திருப்பு காலம் பல மாதங்கள் நீள்வது தெரிய வந்துள்ளது.
மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு ஆஃப்ரோடு பயன்பாட்டு வாகன சந்தையில் மிகப்பெரிய மார்க்கெட் இருந்து வருகிறது. இந்த நிலையில், காலத்திற்கு தக்க வசதிகள், தொழில்நுட்ப அம்சங்கள், டிசைனுடன் புதிய தலைமுறை மாடலாக மஹிந்திரா தார் மேம்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த புதிய மாடல் கடந்த மாதம் 2ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதற்காகவே காத்திருந்த ஆஃப்ரோடு பிரியர்களும், பிரபலங்களும் போட்டி போட்டு இந்த எஸ்யூவியை புக்கிங் செய்தனர்.
இதனால், இந்த எஸ்யூவிக்கு டிமான்ட் அதிகரித்தது. ஆனால், மஹிந்திரா நிறுவனமே இந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. அதாவது, உற்பத்தி இலக்கை குறைவாக நிர்ணயித்தததால், சிக்கல் எழுந்துள்ளது.
புதிய தலைமுறை தார் எஸ்யூவிக்கு 20,000க்கும் மேற்பட்ட புக்கிங் குவிந்ததால், வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் டெலிவிரி கொடுக்க முடியாத நிலையில், தவித்து வருகிறது மஹிந்திரா. இதனிடையே, கார் அண்ட் பைக் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கோ, புதிய தார் எஸ்யூவிக்கு அடுத்த ஆண்டு மே மாதம் வரை முன்பதிவு முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இது புதிய தார் கனவில் மிதந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு குண்டை தூக்கிப் போட்டுள்ளது. இன்னும் 7 முதல் 8 மாதங்கள் வரை புதிய தார் எஸ்யூவியை டெலிவிரிப் பெறும் நிலை உள்ளதால், வாடிக்கையாளர் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், மஹிந்திரா தார் எஸ்யூவியை விரைவாக டெலிவிரி கொடுக்கும் வகையில், உற்பத்தியை அதிகரிக்க இரவு பகலாக வேலை செய்து வருவதாக மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். எனவே, வரும் மாதங்களில் புதிய தார் எஸ்யூவியின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, காத்திருப்பு காலம் குறைவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.
புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் டிசைன் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. பழைய மாடலைவிட உருவத்தில் பெரிய மாடலாக மாறி இருப்பதும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்துள்ளது. புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் உள்ளன.
இதில், 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலானது 130 பிஎச்பி பவரையும் 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். அனைத்து வேரியணட்டுகளிலும் ஷிஃப் ஆன் ஃப்ளை என்ற இயங்கும்போதே 4 வீல் டிரைவ் சிஸ்டத்திற்கு மாற்றும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மெக்கானிக்கல் லாக்கிங் டிபரன்ஷியல் தொழில்நுட்பமும் உள்ளது.
புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.
புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் டியூவல் ஏர்பேக்குகள், ரோல் ஓவர் மிட்டிகேஷன் கன்ட்ரோல் தொழில்நுட்பம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் உள்ளன. குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் 4 நட்சத்திர அந்தஸ்தை பெற்று புதிய தார் எஸ்யூவி அசத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?