Just In
- 1 hr ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 1 hr ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 1 hr ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 2 hrs ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- News கொக்கரிக்கிறார் சிவக்குமார்.. பேசாமலிருக்கிறார் ஸ்டாலின்.. காங்கிரஸ் வந்தாலே பிரச்சனை.. யார் பாருங்க
- Sports தோனியால் 2 - 3 ஓவர்கள் தான் விளையாட முடியும்.. ஏன் தெரியுமா? காரணத்தை சொன்ன பயிற்சியாளர் பிளெமிங்!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- Movies Blue sattai Maaran: தற்போதைக்கு திருந்திய.. விஜய் ஆண்டனி கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
இந்த முன்னணி நிறுவனத்தின் கார்கள் விலை இவ்வளவு உயரப்போகுதா? எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க...
இந்தியாவில் ரெனால்ட் நிறுவன கார்களின் விலை அதிரடியாக உயரவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது வாகனங்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக இன்று (டிசம்பர் 18ம் தேதி) அறிவித்துள்ளது. ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் அனைத்து கார்களின் விலையும் 28 ஆயிரம் ரூபாய் வரை உயரவுள்ளது. வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
கார் மாடல்கள் மற்றும் வேரியண்ட்களை பொறுத்து இந்த விலை உயர்வு மாறுபடும். உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால், கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரெனால்ட் நிறுவனம் தற்போதைய நிலையில் க்விட், ட்ரைபர் மற்றும் டஸ்டர் ஆகிய கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
இதில், க்விட் மற்றும் ட்ரைபர் ஆகிய இரண்டு கார்களும்தான் ரெனால்ட் நிறுவனத்திற்கு ஓரளவு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை மாதந்தோறும் ஈட்டி தந்து கொண்டுள்ளன. ஆனால் ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை சமீப காலமாக குறைவாக உள்ளது. இதனை ஈடுகட்டும் வகையில் புதிய தயாரிப்புகளை ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
இதில், ரெனால்ட் கிகர்தான் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஆகும். இந்திய சந்தையில் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் இந்த செக்மெண்ட்டில் பல்வேறு புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன.
கடந்த ஒரு சில மாத கால அளவில் மட்டும் கியா சொனெட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் நிஸான் மேக்னைட் என மூன்று புதிய கார்கள் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில் ரெனால்ட் நிறுவனமும் கிகர் காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
ரெனால்ட் கிகர் காம்பேக்ட் எஸ்யூவி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தை ஒட்டி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பேஸ் வேரியண்ட்டின் விலை 6 லட்ச ரூபாய் என்ற அளவிலும், டாப் வேரியண்ட்டின் விலை 10 லட்ச ரூபாய் என்ற அளவிலும் நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே ரெனால்ட் நிறுவனம் மட்டுமின்றி இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, ஃபோர்டு இந்தியா, மஹிந்திரா, எம்ஜி மோட்டார், கியா உள்ளிட்ட நிறுவனங்களும், உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக வரும் ஜனவரி மாதம் முதல் கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளன.
இதுதவிர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் ஜனவரி முதல் விலை உயர்வை அறிவித்துள்ளது. கொரோனா பிரச்னையால் ஏற்பட்ட சரிவில் இருந்து, பண்டிகை காலம் காரணமாக தற்போதுதான் வாகன நிறுவனங்கள் மீண்டுள்ளன. அதற்குள்ளாக அமலுக்கு வரவுள்ள இந்த விலை உயர்வு காரணமாக வாகன விற்பனை சரியுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!