Just In
- 15 min ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 40 min ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 4 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 5 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
Don't Miss!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- News கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பொங்கலுக்கு புது ஸ்கோடா கார் வாங்கப் போறீங்களா? முதல்ல இதப் படிங்க!
வரும் ஜனவரி 1 முதல் புதிய கார்களின் விலை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கார் மாடலுக்கு தக்கவாறு விலையை உயர்த்துவதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் கார் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கி இருக்கிறது. இந்தியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், வர்த்தகத்தில் புதிய யுக்திகளுடன் செயலாற்றி வருகிறது. மேலும், புதிய எஸ்யூவி மாடல்களை கொண்டு வருவதிலும் ஆர்வம் காட்டி வருகிறது.
அந்த நிறுவனத்தின் ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 மாடலுக்கும், கரோக் எஸ்யூவிக்கும் இந்தியர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், உற்சாகமடைந்துள்ள ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் பல புதிய மாடல்களை கொண்டு வருவதிலும் ஆர்வம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், கார் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வு, பண பரிமாற்று விகிதத்தில் உள்ள ஏற்ற இறக்கத்தை மனதில் வைத்து கார்களின் விலையை உயர்த்துவது குறித்து ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
தனது கார் விற்பனையில் பாதிப்பு வராத வகையில் இந்த விலை உயர்வை நிர்ணயிக்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. வரும் ஜனவரி 1 முதல் புதிய கார்களின் விலையை 2.5 சதவீதம் வரை உயர்த்தலாம் என்று அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கார் மாடலுக்கு தக்கவாறு இந்த விலை உயர்வு இருக்கும்.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் ரேபிட், ஆக்டேவியா ஆர்எஸ்245, சூப்பர்ப் மற்றும் கரோக் எஸ்யூவி வகை மாடல்களை இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், அனைத்து கார்களின் விலையும் உயர்த்தப்பட உள்ளது.
இதனிடையே, வருஷ கடைசியில் இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட கார்களுக்கு சிறப்புத் தள்ளுபடி சலுகைகளையும் ஸ்கோடா ஆட்டோ வழங்குகிறது. ஸ்கோடா ரேபிட் காருக்கு ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.50,000 வரை அப்கிரேட் ஆஃபர் என்ற சேமிப்புச் சலுகையையும், 6 ஆண்டுகளுக்கான வாரண்டி திட்டத்தையும் வழங்குகிறது.
டீலர்களுக்கு டீலர் ஆஃபரில் வேறுபாடு இருக்கலாம். எனவே, ஸ்கோடா கார்களுக்கான ஆஃபர் தொடர்பான அனைத்து விபரங்களையும் அருகிலுள்ள ஸ்கோடா டீலர் மூலமாக முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
வரும் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரியில் கார் முன்பதிவு செய்ய காத்திருக்கும் தமிழர்களுக்கு இந்த விலை உயர்வு அறிவிப்பு சற்று ஏமாற்றத்தை தருவதாக உள்ளது. எனினும், வரும் 31ந் தேதிக்குள் காருக்கான இன்வாய்ஸ் போடப்பட்டால் பழைய விலையில் கிடைக்கும். அதேநேரத்தில், இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்களையே டெலிவிரி பெறமுடியும்.
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!