Just In
- 1 hr ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 2 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 2 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 7 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இந்தியாவுக்காக ஒரு நல்ல முடிவை எடுத்த டொயோட்டா!
இந்தியாவின் நலன் கருதி ஒரு நல்ல முடிவை டொயோட்டா கார் நிறுவனம் எடுத்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
உலகின் மிகப்பெரிய டாப் -3 கார் நிறுவனங்களில் ஒன்றாக ஜப்பானை சேர்ந்த டொயோட்டா விளங்குகிறது. இந்தியாவிலும் மிக முக்கிய போட்டியாளராக விளங்குகிறது. மேலும், மிகவும் நீடித்த உழைப்பை தரக்கூடிய, நம்பகமான தயாரிப்புகளை வழங்கும் கார் பிராண்டாகவும் இந்தியர்கள் மனதில் முத்திரை பதித்துவிட்டது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் இந்தியர்களின் நலன் கருதி ஒரு முக்கிய முடிவை டொயோட்டா கார் நிறுவனம் எடுத்துள்ளது. அதாவது, இந்தியாவிலேயே ஹைப்ரிட் வகை கார்களை உற்பத்தி செய்ய டொயோட்டா முடிவு செய்துள்ளதாக என்டிடிவி ஆட்டோ தளத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது.
பெட்ரோல், டீசல் கார்களைவிட ஹைப்ரிட் கார்களின் மூலமாக நச்சுப் புகை வெளியேறும் அளவு குறைவதுடன், அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறும் வாய்ப்பை வழங்கும். இதனால், வாகனப் புகையால் மூச்சுத் திணறி வரும் இந்திய நகரங்களில் தனது ஹைப்ரிட் கார்கள் மூலமாக புகை குறைவதற்கான தனது பங்களிப்பாக டொயோட்டா வழங்க வாய்ப்புள்ளது.
அடுத்து, தற்போது ஹைப்ரிட் கார்களை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யும்போது, அதிக அளவில் இறக்குமதி வரி சேர்க்கப்பட்டு ஹைப்ரிட் கார்களின் விலை மிக அதிகமாக நிர்ணயிக்க வேண்டி வருகிறது. ஆனால், இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும்போது மிகச் சரியான விலையில் ஹைப்ரிட் கார்களை இந்தியர்கள் பெற முடியும்.
மேலும், அதிக அளவிலான வாடிக்கையாளர் வட்டத்தை ஹைப்ரிட் கார்களுக்கு உருவாக்கும் முயற்சியில் டொயோட்டா முக்கிய பங்களிப்பை வழங்கும் வாய்ப்பை பெறும். ஹைப்ரிட் கார்களுக்கான சந்தையையும் வலுப்படுத்தலாம்.
எலெக்ட்ரிக் கார்களுக்கான மின்சாரம் 60 முதல் 70 சதவீதம் வரை அனல் மின்சாரம் மூலமாக பெறப்படுவதால், அந்த மின் உற்பத்தி நிலையங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இது எலெக்ட்ரிக் கார்கள் மறைமுகமாக சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், எலெக்ட்ரிக் கார்களைவிட ஹைப்ரிட் கார்கள் சுற்றுச்சூழலுக்கு சிறந்த தீர்வாகவும் கருதப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் வரும் 2022ம் ஆண்டு முதல் ஹைப்ரிட் வகை கார்களை உற்பத்தி செய்வதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது.
டொயோட்டா நிறுவனம் பல்வேறு வகை ஹைப்ரிட் மாடல்களை கைவசம் வைத்துள்ளது. இந்த மாடல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது. மேலும், சுஸுகி நிறுவனத்துடன் இணைந்து ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகளை உற்பத்தி செய்வதற்கும் திட்டமிட்டுள்ளது.
அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டொயோட்டா வெல்ஃபயர் காரில் ஹைப்ரிட் சிஸ்டம்தான் உள்ளது. இந்த மாடலும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும்போது விலை குறையும். அதேபோன்று, டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் காரும் இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யும் வாய்ப்பு உள்ளது.
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?