Just In
- 30 min ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 3 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 3 hrs ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 4 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- News இந்த கருப்பு வெள்ளை படத்தில் யானை எங்க இருக்குனு 5 செகன்டுல கண்டுபிடியுங்க! ஈஸிதான்! ஆனாலும் கஷ்டம்
- Movies அட்டகாசமாக ஆரம்பித்த எம் டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ்.. செம ட்விஸ்ட்!
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அடுத்த ஆண்டு கனவு நிறைவேற போகிறது... டெஸ்லா இந்தியாவிற்கு வருவதை உறுதி செய்த நிதின் கட்காரி!
டெஸ்லா நிறுவனம் அடுத்த ஆண்டு இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையை தொடங்கவுள்ளது என்ற தகவலை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உறுதி செய்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் ரேஞ்ச் மற்றும் சொகுசு என அனைத்து அம்சங்களிலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கின்றன. இதை விட தொழில்நுட்பத்தில் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களை அடித்து கொள்ள ஆளே இல்லை என்ற நிலை உள்ளது.
சீனா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் டெஸ்லா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வந்தாலும், இந்தியாவில் இன்னும் கால்பதிக்கவில்லை. டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வருகையை இங்குள்ள வாடிக்கையாளர்கள் பலர் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். டெஸ்லா நிறுவனத்தின் பெயர் இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளது.
டெஸ்லா நிறுவனத்திற்கு உலக அளவில் இருக்கும் அந்தஸ்தை இந்திய வாடிக்கையாளர்கள் அறிந்தும் வைத்துள்ளனர். இந்தியா மிகவும் லாபகரமான சந்தை என்பதால், இங்கு எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை தொடங்குவது தொடர்பாக டெஸ்லா நிறுவனத்திற்கு இருக்கும் எண்ணத்தை எலான் மஸ்க்கும் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக டிவிட்டரில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது, இந்தியாவிற்கு வருவது குறித்து எலான் மஸ்க் பேசியுள்ளார். இந்த சூழலில் டெஸ்லா நிறுவனம் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வரவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. டெஸ்லா நிறுவனம் தனது முதல் தயாரிப்பாக மாடல் 3 (Tesla Model 3) காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், இதற்கு வரும் ஜனவரி முதல் முன்பதிவுகள் ஏற்கப்படவுள்ளதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாடிக்கையாளர்களுக்கு கார்கள் டெலிவரி செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியானது. இந்தியாவில் உள்ள டெஸ்லா கார் பிரியர்கள் மத்தியில் இந்த செய்தி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் டெஸ்லா நிறுவனம் 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவிற்கு வரும் என்பதை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தற்போது உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. டெஸ்லா நிறுவனம் ஆரம்பத்தில் கார்களை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இங்கு உற்பத்தி ஆலையை அமைப்பது குறித்து டெஸ்லா நிறுவனம் பரிசீலனை செய்யும்.
டெஸ்லாவின் இந்திய வருகையை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரான நிதின் கட்காரி உறுதி செய்திருப்பது, டெஸ்லா கார் பிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படும் மாடல் 3 காருக்கு, 55 லட்ச ரூபாய் முதல் 60 லட்ச ரூபாய் வரையில் விலை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ஆனால் இந்தியாவில் இன்னும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் பெரிய அளவில் ஏற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுதான் மத்திய மற்றும் மாநில அரசுகள் அந்த பணிகளில் வேகம் காட்ட தொடங்கியுள்ளன. எனவே வரும் காலங்களில் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என நம்பலாம்.
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!