Just In
- 9 min ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 54 min ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 1 hr ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 3 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
Don't Miss!
- Movies மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?.. மெகா ஹிட் பார்சலோ
- News வெறும் 15 நிமிடம் தான்.. உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் புதுச்சேரி இளைஞர் பலி.. என்ன நடந்தது?
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் இருந்து வெளியேறுவதாக ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பு!
சர்வதேச அளவில் கார் பந்தய துறையில் இருந்து வெளியேறுவதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் படிக்கலாம்.
ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் செயல்பட்டு வருகிறது. பல்வேறு வகை கார் பந்தயங்களிலும் பல முறை சாம்பியன் பட்டத்தை ஃபோக்ஸ்வேகன் மோட்டார்ஸ்போர்ட்ஸ் பிரிவு பெற்றிருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் மோட்டார்ஸ்போர்ட் பிரிவு இதுவரை 4 முறை ராலி வேர்ல்டு சாம்பியன் பட்டங்களையும், 3 முறை ராலிக்ராஸ் வேர்ல்டு சாம்பியன் பட்டங்களையும், 3 முறை டக்கார் ராலி பந்தயங்களிலும் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது.
இந்த நிலையில், மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையிலிருந்து விலகுவதாக ஃபோக்ஸ்வேகன் குழுமம் திடீரென அறிவித்துள்ளது. இதுவரை மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறைக்கு செய்து வந்த முதலீடுகளை மின்சார கார் தயாரிப்புக்கு மாற்றம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஜெர்மனியிலுள்ள ஹேன்ஓவர் என்ற இடத்தை தலைமையிடமாக கொண்டு ஃபோக்ஸ்வேகன் மோட்டார்ஸ்போர்ட் பிரிவு செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், அதில் பணிபுரிந்த வந்த 169 பணியாளர்கள் வோல்ஸ்பர்க் நகரில் உள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமையிடத்திற்கு மாற்றப்பட உள்ளனர்.
பைக்ஸ் பீக் பந்தயத்தில் அசத்திய ஃபோக்ஸ்வேகன் மோட்டார்ஸ்போர்ட் பிரிவின் ஐ.டி.ஆர் என்ற மின்சார பந்தய கார் மாடலை ஹேன்ஓவர் மோட்டார் பந்தய துறை பணியாளர்கள் மற்றும் பொறியாளர்கள்தான் உருவாக்கினர்.
இந்த நிலையில், ஐ.டி.ஆர் மின்சார பந்தய கார் மாடலின் தொழில்நுட்பங்களை எதிர்காலத்தில் பயன்படுத்துவதற்கான திட்டத்தையும் வகுத்துள்ளது. இந்த பந்தய கார் குறித்த மோட்டார்ஸ்போர்ட் பணியாளர்கள் உருவாக்கிய தொழில்நுட்பங்களை தனது எதிர்கால மின்சார கார்களில் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றும் ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.
அதேபோன்று, ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ ஆர்5 பந்தய கார் உருவாக்கப் பணிகள் இந்த ஆண்டுடன் முடிவுக்கு வர இருக்கிறது. அதேநேரத்தில், போலோ ஜிடிஐ ஆர் மற்றும் கோல்ஃப் ஜிடிஐ டிசிஆர் ஆகிய பந்தய கார்களுக்கான உதிரிபாகங்கள் தொடர்ந்து சப்ளை செய்யப்படும் என்று ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.
மோட்டார்ஸ்போர்ட் துறையிலிருந்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விலகுவது கார் பந்தய ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும், மோட்டார்ஸ்போர்ட் பந்தய துறைக்கான முதலீடுகளை முழுமையாக எலெக்ட்ரிக் கார் தயாரிப்புத் துறைக்கு பயன்படுத்திக் கொள்வதற்கு ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!
-
தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..