Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 2 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 4 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் இருந்து வெளியேறுவதாக ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பு!
சர்வதேச அளவில் கார் பந்தய துறையில் இருந்து வெளியேறுவதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் படிக்கலாம்.

ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் செயல்பட்டு வருகிறது. பல்வேறு வகை கார் பந்தயங்களிலும் பல முறை சாம்பியன் பட்டத்தை ஃபோக்ஸ்வேகன் மோட்டார்ஸ்போர்ட்ஸ் பிரிவு பெற்றிருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் மோட்டார்ஸ்போர்ட் பிரிவு இதுவரை 4 முறை ராலி வேர்ல்டு சாம்பியன் பட்டங்களையும், 3 முறை ராலிக்ராஸ் வேர்ல்டு சாம்பியன் பட்டங்களையும், 3 முறை டக்கார் ராலி பந்தயங்களிலும் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது.

இந்த நிலையில், மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையிலிருந்து விலகுவதாக ஃபோக்ஸ்வேகன் குழுமம் திடீரென அறிவித்துள்ளது. இதுவரை மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறைக்கு செய்து வந்த முதலீடுகளை மின்சார கார் தயாரிப்புக்கு மாற்றம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஜெர்மனியிலுள்ள ஹேன்ஓவர் என்ற இடத்தை தலைமையிடமாக கொண்டு ஃபோக்ஸ்வேகன் மோட்டார்ஸ்போர்ட் பிரிவு செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், அதில் பணிபுரிந்த வந்த 169 பணியாளர்கள் வோல்ஸ்பர்க் நகரில் உள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமையிடத்திற்கு மாற்றப்பட உள்ளனர்.

பைக்ஸ் பீக் பந்தயத்தில் அசத்திய ஃபோக்ஸ்வேகன் மோட்டார்ஸ்போர்ட் பிரிவின் ஐ.டி.ஆர் என்ற மின்சார பந்தய கார் மாடலை ஹேன்ஓவர் மோட்டார் பந்தய துறை பணியாளர்கள் மற்றும் பொறியாளர்கள்தான் உருவாக்கினர்.

இந்த நிலையில், ஐ.டி.ஆர் மின்சார பந்தய கார் மாடலின் தொழில்நுட்பங்களை எதிர்காலத்தில் பயன்படுத்துவதற்கான திட்டத்தையும் வகுத்துள்ளது. இந்த பந்தய கார் குறித்த மோட்டார்ஸ்போர்ட் பணியாளர்கள் உருவாக்கிய தொழில்நுட்பங்களை தனது எதிர்கால மின்சார கார்களில் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றும் ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

அதேபோன்று, ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ ஆர்5 பந்தய கார் உருவாக்கப் பணிகள் இந்த ஆண்டுடன் முடிவுக்கு வர இருக்கிறது. அதேநேரத்தில், போலோ ஜிடிஐ ஆர் மற்றும் கோல்ஃப் ஜிடிஐ டிசிஆர் ஆகிய பந்தய கார்களுக்கான உதிரிபாகங்கள் தொடர்ந்து சப்ளை செய்யப்படும் என்று ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

மோட்டார்ஸ்போர்ட் துறையிலிருந்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விலகுவது கார் பந்தய ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும், மோட்டார்ஸ்போர்ட் பந்தய துறைக்கான முதலீடுகளை முழுமையாக எலெக்ட்ரிக் கார் தயாரிப்புத் துறைக்கு பயன்படுத்திக் கொள்வதற்கு ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.