Just In
- 1 hr ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 2 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 4 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 9 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
Don't Miss!
- News திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்.. 2 பேர் பலி.. ஹை டென்ஷன்
- Movies ஹன்சிகாவுக்காக பல கோடி செலவு செய்த சிம்பு.. தப்பா பேசவே இல்ல.. சினிமா பிரபலம் சொன்ன அந்த விஷயம்!
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நீண்ட நாட்களாக ஏங்க வைத்த 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் உரிமையாளர்களின் கை சேர தொடங்கியது... முழு விபரம்!!
வெகு நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருந்த 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் அதன் உரிமையாளர்களின் கை வசம் சேர தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
டொயோட்டா நிறுவனம் அண்மையில் அதன் புகழ்வாய்ந்த ஃபார்ச்சூனர் காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இக்காரின் அறிமுகம் இம்மாதத்தின் தொடக்கத்தில் அரங்கேறியது.
இந்த நிலையில், புதுப்பிக்கப்பட்ட ஃபார்ச்சூனர் காரை புக்கிங் செய்தோருக்கு அக்காரை டெலிவரி கொடுக்கும் பணியையும் டொயோட்டா தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த காடிவாடி வெளியிட்டிருக்கும் புகைப்படம் மற்றும் தகவல்களையுமே இப்போது இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.
டொயோட்டா நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட ஃபார்ச்சூனர் காருடன் சேர்த்து புதிய 'லெஜன்டர்' எனும் தேர்வினையும் அறிமுகப்படுத்தியது. இதனை ஃபார்ச்சூனர் மாடலின் டாப்-வேரியண்டாக அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
வழக்கமான ஃபார்ச்சூனர் காரைக் காட்டிலும் லெஜன்டர் எனும் பெயரில் வந்திருக்கும் இக்கார் கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் அணிகலன்களுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், ஃபார்ச்சூனர் லெஜன்டர் காரின் உட்பகுதி மற்றும் வெளிப்புறப் பகுதி பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சியளிக்கின்றது.
இக்காரின் ஆரம்பநிலை மாடலின் விலை ரூ. 29.98 லட்சம் ஆகும். அதேசமயம், இதன் உச்சப்பட்ட விலை ரூ. 37.58 லட்சமாக இருக்கின்றது. இந்த புதிய வெர்ஷன் ஃபார்ச்சூனர் கார்களை டொயோட்டா நிறுவனம் அதந் எம்ஜிஎஃப் தயாரிப்பு ஆலையில் வைத்தே உற்பத்தி செய்து வருகின்றது. இந்த ஆலை குர்காவுன் பகுதியில் இயங்கி வருகின்றது.
இங்கிருந்தே நாட்டின் அனைத்து பகுதிகளிலும் செயல்பட்டு வரும் விற்பனையாளர்கள் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு டெலிவரி கொடுக்கப்பட்டு வருகின்றது. டொயோட்டா நிறுவனம் இக்காரை இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.
ஒன்று 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்விலும், மற்றொன்று 2.8 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் என்ற இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் இக்கார் வழங்கப்படுகின்றன.
மேலும், 4-சக்கர ட்ரைவ் தேர்வும் புதுப்பிக்கப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனரில் வழங்கப்படுகிறது. இதில் டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அதிகபட்சமாக 203 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வசதியில் காட்சியளிக்கின்றது.
இது முந்தைய மாடல் ஃபார்ச்சூனர் காரைக் காட்டிலும் அதிக திறன் ஆகும். திறனில் மட்டுமின்றி சிறப்பம்சங்களிலும் இக்கார் சூப்பரானதாக காட்சியளிக்கின்றது. இக்காரில் மறுசீரமைக்கப்பட்ட முகப்புற மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது எல்இடி தரத்திலானதாகும்.
இதேபோன்று புதுப்பிக்கப்பட்ட ஸ்டைலில் எல்இடி டிஆர்எல் மின் விளக்கு, கிரில், பம்பர் (முன் மற்றும் பின் பக்கத்தில்), புதிய டெயில் மின் விளக்கு உள்ளிட்டவைச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி 8 இன்சிலான தொடுதிரை இணைப்பு கார் டெக் வசதியுடன் பொருத்தப்பட்டிருக்கின்றது.
இது ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மென்பொருள் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே பல்வேறு சிறப்பு வசதிகளை இந்த அம்சங்களின் மூலம் பெற முடியும். குறிப்பாக ஜியோ ஃபென்சிங், ரியல் டைம் டிராக்கிங் ஆகியவற்றை பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
-
வெளிநாட்டுகாரன் எல்லாம் உஷாராகிட்டான் ! இந்த கம்பெனி வண்டியோட ஏற்றுமதி படுத்துக்கிச்சு!
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே