Just In
- 53 min ago ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- 1 hr ago 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- 3 hrs ago நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- 4 hrs ago பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
Don't Miss!
- Movies மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா?.. இயக்குநர் யார் தெரியுமா?.. ஆச்சரிய தகவல்
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- News எம்பிக்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? வீடு முதல் ரயில் பயணம் வரை இலவசம்.. அசரவைக்கும் சலுகைகள்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
5-கதவு மஹிந்திரா தாரின் இந்திய அறிமுகம் எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்!!
5-கதவு மஹிந்திரா தாரின் இந்திய அறிமுகம் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் 2026ஆம் ஆண்டிற்குள் பல புதிய தயாரிப்பு வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில் முதலாவதாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 வரும் அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.
அதற்கு முன்னதாக உலகளவில் இன்னும் சில வாரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய எக்ஸ்யூவி700, தற்போதைய எக்ஸ்யூவி500 மாடலின் அடுத்த தலைமுறையாகும். இதனை தொடர்ந்து புதிய தலைமுறை ஸ்கார்பியோ அடுத்த 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம்.
இவற்றுடன் விற்பனையில் இருக்கும் தார் வாகனத்தின் 5-கதவு வெர்சனையும் விற்பனைக்கு கொண்டுவர மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை தாருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
எந்த அளவிற்கு என்றால், புதிய கட்டமைப்பு மற்றும் 3-கதவு பாடி ஸ்டைலில் உருவாக்கப்பட்ட புதிய தாரை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவு சில குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு சுமார் 1 வருடம் வரையில் உள்ளது.
ஆஃப்-ரோடு பயணங்களை விரும்புவர்களின் முதன்மையான தேர்வாக மஹிந்திரா தார் விளங்குகிறது. ஆனால் இதில் மூன்று கதவுகள் மட்டுமே வழங்கப்படுவதால் தனியாகவோ அல்லது 2,3 நபர்களுடன் இணைந்தோ பயணம் செய்வதற்கு தார் ஏற்றதாக உள்ளது.
ஆனால் குடும்பத்துடன், தேவையான பொருட்களை வைத்து செல்லும் அளவிற்கு இட வசதி 3-கதவு தாரில் இல்லை என்பதே உண்மை. இதனாலேயே கூடுதல் இடவசதியுடன் 5-கதவுகளுடன் தார் வாகனத்தை கொண்டுவர மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதனால் குடும்ப வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என்பது மட்டுமின்றி, வாகனம் வாடிக்கையாளர்களின் செயல்முறைக்கு ஏற்றதாக இருக்கும். 5-கதவு தாரின் இந்திய அறிமுகத்தை 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் எதிர்பார்க்கிறோம்.
தற்போதைய தாருடன் ஒப்பிடுகையில் 5-கதவு தாரின் விலை கிட்டத்தட்ட ரூ.80,000 அளவில் அதிகமாக நிர்ணயிக்கப்படலாம். 3-கதவு தார் வாகனத்திற்கு இந்திய சந்தையில் நேரடி போட்டி மாடல் எதுவும் தற்போதைக்கு இல்லை.
ஆனால் எதிர்காலத்தில் அறிமுகமாகலாம். ஏனெனில் ஜப்பானில் விற்பனையில் உள்ள 3-கதவு ஜிம்னியை இந்திய சந்தைக்கு கொண்டுவர சுஸுகி நிறுவனம் தயாராகி வருகிறது. தோற்றத்தில் 3-கதவு தாரை காட்டிலும் 5-கதவு தார் சற்று நீளமானதாக இருக்கும்.
-
பெங்களூருக்கு போறவங்க ஒரு முறையாவது இந்த பஸ்ஸில் டிராவல் பண்ணி பாருங்க!! மொத்தமும் எலக்ட்ரிக்...
-
ஓலா, உபேர் கட்டணம் தரைமட்டத்துக்கு குறைய போகுது! டிரைவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!
-
குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!