Just In
- 26 min ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 30 min ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 1 hr ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 3 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
பொலிரோ காரை இலவசமா தர்றோம்... இந்த காரை கொடுத்துடுங்க! தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கோரிக்கை!
கை விடப்பட்ட வாகன உதிரி பாகங்களை கொண்டு மினி காரை ஓர் நபர் உருவாக்கியிருக்கின்றார். இந்த காரை தங்களுக்கு ஒப்படைத்தால் புத்தம் புதிய மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero) காரை வழங்க இருப்பதாக ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்திருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் நபர் கை விடப்பட்ட பழைய உலோகங்களைக் கொண்டு சிறிய நான்கு சக்கர வாகனத்தை உருவாக்கியிருக்கின்றார். இந்த தனித்துவமான படைப்பு நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்திருக்கின்றது. நெட்டிசன்களை மட்டுமில்லைங்க இணையத்தில் மிகவும் ஆக்டிவாக தென்படும் நபரான பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் இதனை வெகுவாகப் பாராட்டி இருக்கின்றார்.
வழக்கமான நெட்டிசன்களைப் போலவே இணையத்தில் மிகவும் துடிப்பாக இருக்கும் நபர்களில் ஒருவராக ஆனந்த் மஹிந்திரா இருக்கின்றார். இவர் கண்களில் படும் புதுமைகளுக்கு எப்போதும் பாராட்டு உண்டு. அந்தவகையிலேயே, கை விடப்பட்ட வாகன கழிவுகளால் உருவாக்கப்பட்ட நான்கு சக்கர வாகனம் பற்றிய வீடியோ அவரது கண்களில் பட்டிருக்கின்றது.
அந்த வீடியோவை உடனடியாக பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, அதனை உருவாக்கிய நபருக்கு பெரும் பாராட்டுக்களை தெரிவித்தார். யுட்யூப் சேனல் ஒன்று வெளியிட்டிருக்கும் தகவலின்படி காரை உருவாக்கியவரின் பெயர் தத்தேத்ரயா லோஹர் என்பது தெரிய வந்திருக்கின்றது. பெரியளவில் படித்திராத இந்த நபர் தனது மகனின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் விதமாக இக்காரை வடிவமைத்திருக்கின்றார்.
இதுவே தற்போது இணையத்தில் பலரின் பாராட்டை அவருக்கு பெற்றுக் கொடுக்க காரணமாக அமைந்திருக்கின்றது. இந்த வீடியோவை தனது சொந்த டுவிட்டர் கணக்கில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, "இந்த படைப்பு எந்த விதிமுறைகளையும் பின்பற்றி உருவாக்கப்படவில்லை. அதேநேரத்தில் இதனை படைத்தவரின் புத்தி கூர்மை மற்றும் திறன்களைப் பாராட்டுவதை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன்" என்றார்.
தொடர்ந்து, மினி காரில் பயன்படுத்தப்பட்டிருப்பது மஹிந்திராவின் ஜீப் வாகனத்தை குறிக்கும் வகையில் இருப்பதையும் அவர் அவரது பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆகையால், இதனை பலர் மினி ஜீப் என்றே குறிப்பிட தொடங்கியிருக்கின்றனர். இந்த வாகனம் குறித்த வீடியோ ஒட்டுமொத்தமாகவே 45 செகண்டுகள் மட்டுமே காட்சியைக் கொண்டிருக்கின்றது.
அவ்வீடியோவில் வாகனம் எப்படி இயங்குகின்றது என்பதை தத்தேத்ரயா லோஹர் செயல்முறை செய்து காண்பிக்கின்றார். இந்த வாகனத்தின் உருவாக்கம் வெறும் கை விடப்பட்ட பொருட்களால் மட்டுமே உருவாக்கப்படவில்லை. சில பொருட்களை அவர் பணம் கொடுத்து பெற்று, அவ்வாகனத்தை உருவாக்கியிருக்கின்றார்.
அந்தவகையில், மினி ஜீப்பின் உருவாக்கத்திற்காக அவர் ரூ. 60 ஆயிரம் வரை செலவு செய்திருக்கின்றார். இதனை அதே வீடியோவில் அவர் தெரிவித்திருக்கின்றார். மினி காரில் கிக்-ஸ்டார்ட் செய்யும் வசதிக் கொண்ட மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் இருசக்கர வாகனத்துடையது என கூறப்படுகின்றது.
ஆனால், அது எந்த பைக் மாடலுடையது என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை. அதேநேரத்தில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, ஆனந்த் மஹிந்திரா செய்த டுவீட் 14 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்ஸ்களையும், 1300 மறு ட்வீட்டுகளையும் பெற்றிருக்கின்றது.
ஆனந்த் மஹிந்திரா மினி ஜீப்பினை உருவாக்கியவரை வெறும் பாராட்டியதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அவருக்கு சிறப்பு சன்மானம் ஒன்றையும் அறிவித்திருக்கின்றார். அதாவது, தனது நிறுவனத்தின் பிரபல தயாரிப்புகளில் ஒன்றான பொலிரோ காரை தத்தேத்ரயா லோஹருக்கு பரிசாக வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றார்.
ஆனால், இதற்கு ஒரே ஒரு கன்டிஷனை அவர் போட்டிருக்கின்றார். தத்தேத்ரயா உருவாக்கிய மினி ஜீப்பினை தங்களிடம் எக்ஸ்சேஞ்ஜ் செய்தால் பொலிரோ கார் வழங்கப்படும் என அவர் தெரிவித்திருக்கின்றார். மேலும், அந்த மினி ஜீப்பினை மஹிந்திரா ரிசர்ச் வேல்லியில் அரிய வாகனங்களில் ஒன்றாக காட்சிப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
இது தத்தேத்ரயா லோஹரின் தயாரிப்பிற்கு மேலும் பல மடங்கு புகழை சேர்க்கும். அதேவேலையில், இந்த வாகனத்தை தத்தேத்ரயா லோஹரால் தொடர்ச்சியாக பயன்படுத்த முடியாது. இது ஓர் மாற்றியமைக்கப்பட்ட வாகனம் என்பதனால், அதனை சட்டப்படி சாலையில் இயக்குவது குற்றமாகும். ஆகையால், இதனை சாலையில் அதிகாரிகள் கண்டால் அதன் மீது நடவடிக்கைப் பாயலாம். இதற்கு முன்னரே இக்காரை எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ளுமாறு ஆனந்த் மஹிந்திரா கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
-
உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!
-
ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!