Just In
- 7 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 8 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 9 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 10 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- News
அமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொரோனா தடுப்பு மருந்தை கொண்டு செல்ல நவீன கன்டெய்னர் டிரக்: பாரத்பென்ஸ் அறிமுகம்!
கொரோனா தடுப்பு மருந்தை கொண்டு செல்வதற்காக நவீன கட்டமைப்பு கொண்ட கன்டெய்னர் டிரக் மாடலை பாரத் பென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் முதல்கட்டப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த நிலையில், முதல்கட்டமாக பெரு நகரங்களில் இந்த தடுப்பு மருந்து வினியோகிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
எனினும், கொரோனா தடுப்பு மருந்து குறிப்பிட்ட வெப்ப நிலையில், மிகவும் பாதுகாப்பாக கொண்டு சென்று சேர்ப்பது என்பது மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும், சுகாதாரத் துறைக்கும் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.
கொரோனா தடுப்பு மருந்தை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு குளிர்சாதன வசதி கொண்ட விசேஷ கன்டெய்னர் வாகனங்கள் தேவைப்படுகின்றன. இதனை கருத்தில்கொண்டு பாரத் பென்ஸ் நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்து கொண்டு செல்வதற்கான விசேஷ கன்டெய்னர் டிரக் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
பாரத்பென்ஸ் பி சேஃப் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த கன்டெய்னர் டிரக் முழுவதும் பல்வேறு விசேஷ கட்டமைப்பு வசதிகளை பெற்றுள்ளது. கன்டெய்னர் டிரக் தயாரிப்பில் பிரலமான மதர்சன் நிறுவனத்துடன் இணைந்து இந்த டிரக்கை பாரத்பென்ஸ் உருவாக்கி வருகிறது.
இந்த டிரக்கின் பின்புறத்திற்கான குளிர்சாதன வசதியுடன் கூடிய விசேஷ கன்டெய்னரை 96 மணிநேரத்தில் உருவாக்கி கொடுத்துவிட முடியும் என்று மதர்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய கன்டெய்னர் வாகனத்திற்காக பாரத்பென்ஸ் நிறுவனத்தின் 2823ஆர் டிரக் சேஸீயில் பயன்படுத்தப்படுகிறது. இந்த சேஸீயில் கட்டமைக்கப்படும் டிரக்குகள் மிகவும் பாதுகாப்பான, நம்பகமான போக்குவரத்தை வழங்கும்.
மேலும், பாரத்பென்ஸ் நிறுவனத்தின் டிரக் கனெக்ட் என்ற கனெக்டெட் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், டிரக் எந்த இடத்தில் இருக்கிறது என்பதையும், உள்ளே உள்ள சரக்கு டெலிவிரி கொடுக்கப்படும் விபரங்களையும் நிகழ்நேர முறையில் தெரிந்து கொள்ள முடியும்.
இந்த டிரக்குகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்காக பாரத்பென்ஸ் மறும் மதர்சன் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன. மேலும், கொரோனா தடுப்பு மருந்து திட்டம் முடிவுக்கு வந்தாலும்கூட இந்த டிரக்குகளை பழங்கள், கடல் உணவு உள்ளிட்ட பிற போக்குவரத்திற்காகவும் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.