Just In
- 2 hrs ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 3 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 5 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 10 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
Don't Miss!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்..!!
- News சூப்பரான சான்சை விட்டுடாதீங்க.. முக்கிய ராசிக்கு அடிக்க போகும் பம்பர் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்கள்
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Movies இப்படி செய்வீங்கணு நினைக்கல..கல்யாணமே பண்ணியிருக்க மாட்டானே.. மேடையில் ஓபனா பேசிய ரெடின் கிங்ஸ்லி!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
"பெட்ரோல், டீசல் வாகனங்களை தூக்கிபோடுங்க"... எரிபொருள் விலையுர்வுக்கு அதிரடி கருத்து தெரிவித்த பிஹார் சிஎம்!!
பெட்ரோல், டீசல் விலையுயர்வு மிக கடுமையாக உயர்ந்திருப்பதைச் சுட்டிக் காட்டி எரிபொருள் வாகனங்களைப் பயன்பாட்டில் இருந்து தூக்கிப்போடுங்க என பிஹார் மாநில முதலமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ. 100 என்ற சென்சுரியைத் தொட்டிருக்கின்றன. இந்த இமாலய விலையுயர்வைக் கண்டித்து மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து, தங்களின் பங்காக நெட்டிசன்கள் சிலரும் மீம்ஸ் மற்றும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது விலையுயர்வைக் காரணம் காட்டி பாஜக முன் வைத்த போராட்டங்கள்குறித்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், பிஹார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ் குமார், "பெட்ரோல் மற்றும் டீசல் விலையுயர்வில் இருந்து தப்பிக்க எரிபொருளால் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதைக் கைவிடுமாறு" கூறியிருக்கின்றார். மேலும், "இந்த வாகனங்களுக்கு பதிலாக மின் வாகனங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருமாறும்" அவர் அறிவுறுத்தியிருக்கின்றார்.
பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடுமளவிற்கு உயர்ந்து வருவதை ஒப்புக் கொண்ட அவர், இதில் இருந்த தப்பிக்க "மின் வாகன பயன்பாட்டிற்கு மாறுவதே சிறந்தது" என தெரிவித்தார். தொடர்ந்து, மின் வாகனங்கள் சுற்றுச் சூழலுக்கு உகந்தது என்ற கருத்தையும் அவர் முன் வைத்தார்.
மக்களுக்கு கருத்து தெரிவிப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம், கடந்த காலங்களில் மின் வாகனத்தைப் பயன்படுத்தி ஓர் முன்னுதாரணமாகவும் அவர் இருந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அப்போது அவர் டாடா நிறுவனத்தின் டிகோர் இவி எனும் மின்சார காரை பயன்படுத்தினார்.
டாடா மோட்டார்ஸ் இந்த மின்சார காரை பிரத்யேகமாக வர்த்தக வாகன துறைக்கு மட்டுமே விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அதேசமயம், தனி நபர் பயன்பாட்டிற்கான மின் வாகனமாக டாடா நெக்ஸான் ரகத்திலான மின்சார காரை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.
இதுவே நாட்டின் மலிவு விலை மின்சார காராகும். இதனை எக்ஸ்எம், எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட்+ லக்ஸ் ஆகிய தேர்வுகளில் நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது. இந்த எலக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை ரூ.13.99 லட்சம் ஆகும். இதன் அதிகபட்ச விலை ரூ.16.25 லட்சம் ஆகும்.
மேற்கூறிய அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த விலையிலேயே இந்தியாவில் டாடா நெக்ஸான் மின்சார கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இந்த காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 312 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!