Just In
- 20 min ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 2 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 2 hrs ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 2 hrs ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Movies Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஆஹா இது என்ன புது சோதனை... டீசல் தார் எஸ்யூவி கார்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா... எதற்காக? இதோ முழு விபரம்
குறிப்பிட்ட கால கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட டீசல் எஞ்ஜின் கார்களில் பழுதான பாகத்தைப் பயன்படுத்திய காரணத்தினால் மஹிந்திரா நிறுவனம் டீசல் எஞ்ஜின் கொண்ட தார் கார்களை திருப்பி அழைத்துள்ளது. இதுகுறித்த மேலும் விபரங்களை இப்பதிவில் காணலாம்.
மஹிந்திரா நிறுவனத்தின் மிக சமீபத்திய அறிமுகங்களில் ஒன்று தார் எஸ்யூவி ரக கார். இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே நிறுவனம் தார் காரை கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
எதிர்பார்ப்பு நிலவி வந்ததைப் போலவே தற்போது இக்காருக்கான விற்பனையும் ஏகபோமாக கிடைத்து வருகின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், விற்பனையில் நிறுவனத்தை தூக்கிப்பிடிக்கும் அளவிற்கு மிக சிறப்பான விற்பனையை இக்கார் பெற்று வருகிறது.
இந்த நிலையில் மிக சமீபத்திய அறிமுகமான இக்காரில் கோளாறான பாகம் ஒன்றை பயன்படுத்தியமைக்காக சுமார் 1,577 யூனிட் கார்களை திரும்பி வருமாறு மஹிந்திரா நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. அழைக்கப்பட்டிருக்கும் அனைத்து யூனிட்டுகளுமே டீசல் எஞ்ஜின் கொண்ட தார் வேரியண்டாகும். ஆகையால், பெட்ரோல் தார் வாகன உரிமையாளர்கள் இந்த அழைப்பைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என கூறப்படுகின்றது.
பழுதான கேம் ஷாஃப்ட்டினை பயன்படுத்திய காரணத்திற்காகவே தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பின் அடிப்படையில் பழுதான பாகம் நீக்கப்பட்டு, நல்ல இயங்கும் திறன் கொண்ட பாகம் மீண்டும் பொருத்தப்பட இருக்கின்றது. இதற்காகவே இந்த அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 7ம் தேதி தொடங்கி டிசம்பர் 25 வரை உற்பத்தி செய்யப்பட்ட தார் கார்களிலேயே கோளாறான பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அந்தவகையில், குறிப்பிட்ட நாட்களுக்குள் தயாரிக்கப்பட்டு, தற்போது விற்பனையும் செய்யப்பட்டிருக்கும் கார்களையே நிறுவனம் அழைத்திருக்கின்றது.
இதுகுறித்து டீசல் எஞ்ஜின் தார் கார் உரிமையாளர்களை செல்போன் அழைப்பு, மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் ஆகியவற்றின் வாயிலாக நிறுவனம் அழைப்பு விடுத்து வருகின்றது. பாதிப்புக்குள்ளான கேம் ஷாஃப்டைக் கொண்ட எந்தவொரு வாகனமும் இதுவரை எந்த பிரச்னையையும் உருவாக்கவில்லை என மஹிந்திரா கூறுகின்றது.
இதற்கு முன்னதாகவே நடவடிக்கை எடுக்கும் விதமாக பழுதான பாகத்துடன் விற்பனைச் செய்யப்பட்ட டீசல் தார் கார்களை நிறுவனம் அழைத்திருக்கின்றது. மஹிந்திராவின் இந்த வருமுன் காக்கும் நடவடிக்கை அதன் உரிமையாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தார் எஸ்யூவி கார் 2.2 லிட்டர் டீசல் எஞ்ஜினில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது அதிகபட்சமாக 132 எச்பி மற்றும் 300 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது.
தொடர்ந்து, 2.0 லிட்டர் டர்போசார்ஜட், டைரக்ட்-இன்ஜெக்சன் எம்ஸ்டாலியன் பெட்ரோல் எஞ்ஜினில் தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த வேரியண்ட் அதிகபட்சமாக 152 எச்பி மற்றும் 300 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது. இதுதவிர கூடுதல் எஞ்ஜின் தேர்வுகளையும் தார் காரில் மஹிந்திரா வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.
ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை மஹிந்திரா தரப்பில் இருந்து வெளியாகவில்லை. ரூ. 12,10,338 என்ற ஆரம்ப விலையில் இருந்து இக்கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையாகும். அதேசமயம், இக்காரின் உச்சபட்ச விலை ரூ. 14,15,339 ஆக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!