Just In
- 1 hr ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 1 hr ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 3 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 4 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- Sports எத்தனை விக்கெட் போனாலும் சரி.. கதறவிட்ட குஜராத் டைட்டன்ஸ்.. கதிகலங்கிப் போன டெல்லி கேபிடல்ஸ்
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்திய சொகுசு வாகன சந்தையை கதற விட தயாராகும் பிரபல நிறுவனம்... ஒட்டுமொத்தமாக 4 புதிய கார்களை திட்டம்!!
இந்தியாவின் சொகுசு வாகன சந்தையை மெர்சலாக்குகின்ற வகையில் புதிதாக நான்கு கார்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. எந்த ஆண்டிற்கு அவை விற்பனைக்கு வரும் என்பதைக் கீழே காணலாம்.
பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்திய லக்சூரி வாகனச் சந்தையை அதகளப்படுத்தும் வகையில் ஒட்டுமொத்தமாக நான்கு புதிய சொகுசு கார்களைக் களமிறக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் 2022ம் ஆண்டிற்குள் அனைத்து வாகனங்களையும் அது களமிறக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல ஜீப் வாகன உற்பத்தி நிறுவனமே இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது. இது, ஜீப் காம்பஸ் மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை முதல் மாடலாக இந்தியாவில் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.
கூடுதல் இருக்கை வசதிகளுடன் இக்கார் எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, மூன்று இருக்கை வரிசைகளுடன் புதிய காம்பஸ் களமிறங்க உள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்ததாக விராங்க்ளர் மற்றும் கிராண்ட் செரோக்கி ஆகிய மாடல்களையும் உள்ளூர் தொழிற்சாலையான ரஞ்ஜன்கவோன் ஆலையில் வைத்து அசெம்பிள் செய்து விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.
இந்த புதிய நடவடிக்கைக்காக சுமார் 180 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முதலீட்டைச் செய்ய ஜீப் திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஹைதராபாத்தில் புதிய டிஜிட்டல் தொழிற்சாலையை உருவாக்க மேலும் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய ஜீப் திட்டமிட்டு வருகின்றது. இங்கு வைத்தே புதிய கார்களை உற்பத்தி செய்து விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது ஜீப்.
தொடர்ந்து எச்6 என்ற குறிப்பெயருடன் புதிய பெரிய எஸ்யூவி ரக காரையும் ஜீப் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த புதிய மாடலையும் காம்பஸ் மாடலைத் தழுவியே ஜீப் உருவாக்கி வருகின்றது. ஸ்டைலில் வேண்டுமானலும் இக்கார் காம்பஸ் காரைப் போன்று காட்சியளிக்கலாம், ஆனால், காம்பஸ் காரைக் காாட்டிலும் பிரமாண்ட வசதிகளுடன் புதிய எச்6 விற்பனைக்கு களமிறங்க இருக்கின்றது.
அதிக இடவசதி மற்றும் சொகுசு வசதிகளை விரும்பும் இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கிலேயே இக்காரை நாட்டில் களமிறக்க ஜீப் திட்டமிட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி கூடுதல் எஞ்ஜின் திறனை இக்கார் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதுப்பிக்கப்பட்ட ஜீப் காம்பஸ் கார் வருகின்ற 7ம் தேதி விற்பனைக்கு வரவிருக்கின்றது. மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இக்காரில் 10.1 இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (யுகன்னெக்ட்5 வசதிக் கொண்டது). பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், மறுசீரமைப்பு செய்யப்பட்ட இருக்கை மற்றும் ட்யூவல் டோன் கேபின் ஆகிய புதிய அம்சங்களுடன் இக்கார் அறிமுகமாக இருக்கின்றது.
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!