Just In
- 22 min ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 5 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 5 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 6 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஃபோர்டு - மஹிந்திரா இடையிலான கூட்டு நிறுவன ஒப்பந்தம் கைவிடப்படுவதாக அறிவிப்பு!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபோர்டு மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் இடையிலான கூட்டு நிறுவனத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் இந்தியாவில் மஹிந்திராவுடன் இணைந்து வர்த்தகத்தை தொடர முடிவு செய்தது. இதற்காக, கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
கார் உருவாக்கத்திற்கான முதலீடுகளை குறைத்து லாபத்தை அதிகரிக்கும் வகையில், இந்த கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டணியின் கீழ் பல்வேறு புதிய கார் மாடல்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதுடன், பரஸ்பரம் தொழில்நுட்பம் மற்றும் கார் உருவாக்கப் பணிகளை பகிரந்து கொள்வதற்கும் திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இரு நிறுவனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான காலக்கெடு நேற்று ( டிசம்பர் 31) முடிவடைந்தது. ஆனால், இரு நிறுவனங்களும் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு விரும்பல்லை. மேலும், கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொள்வதற்கும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், இரு நிறுவனங்களும் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளன. இதனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டணி ஆரம்ப கட்டத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது.
இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தின் வர்த்தகத்தை மஹிந்திரா கட்டுப்படுத்தும் வகையில் இந்த கூட்டணி அமைய இருந்தது. மேலும், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி அடிப்படையில் புதிய மிட்சைஸ் எஸ்யூவி ஃபோர்டு பிராண்டில் அறிமுகம் செய்யப்படுவதற்கான திட்டமும் இருந்தது. இதற்கான கார் உருவாக்கப் பணிகளும் நடந்து வந்தன.
மேலும், மஹிந்திராவின் எஞ்சின்களை ஃபோர்டு கார்களில் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த கூட்டணி எதிர்பாராதவிதமாக முடிவுக்கு வந்துவிட்டது.
கொரோனா பிரச்னையால் எழுந்துள்ள பொருளாதார சவால்களை கருத்தில்கொண்டு, இந்த கூட்டணி நிறுவனத்தை அமைப்பதற்கான முயற்சிகளை கைவிடுவதாக ஃபோர்டு கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டபோது இருந்த சூழல் தற்போது இல்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனாவிற்கு பின்னர் நஷ்டத்தை ஏற்படுத்தும் பிரிவுகளை மஹிந்திரா மூடி வருகிறது. மேலும், தன் கட்டுப்பாட்டில் உள்ள தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் நிறுவனத்தில் உள்ள தனது பங்குகளை விற்பனை செய்வதற்கும் தீவிர முயற்சிகளில் மஹிந்திரா ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ஃபோர்டு இந்தியா நிறுவனத்துடனான கூட்டணி செயல்பாடுகளையும் பொருளாதார நிலை கருதி மஹிந்திரா கைவிட்டுள்ளது.
-
கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க