Just In
- 39 min ago 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- 2 hrs ago நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- 3 hrs ago பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- 4 hrs ago ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
Don't Miss!
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- News நாளை லோக்சபா தேர்தல்.. வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Finance தக்காளி எப்போதும் கைவிடாது.. விவசாயத்தில் ஆர்வமா..? இதை கேளுங்க..!!
- Movies அரண்மனை 4 எடுக்க சிறுமிகள்தான் காரணம்.. சுந்தர்.சி சொன்ன ஆச்சரிய தகவல்
- Sports எப்பா சாமி! இப்படி யாக்கர் போட்றாரு? முஸ்தபிசுர் போனாலும் இனி கவலையில்ல.. Gleeson பவுலிங் வீடியோ
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டிரைவரில்லா கார்களை பொதுச் சாலையில் இயக்க வகை செய்யும் புதிய சட்டம்... ஜெர்மனி அரசு அதிரடி!
டிரைவரில்லா கார்களை பொதுச் சாலையில் இயக்குவதற்கு வகை செய்யும் புதிய சட்டம் ஜெர்மனி பாராளுமன்றத்தின் கீழவை பச்சைக் கொட்டி காட்டி இருக்கிறது.
உலக அளவில் ஓட்டுனர் இல்லாமல் தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களை உருவாக்கும் பணிகளில் பல்வேறு வாகன உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. எனினும், இந்த கார்களை பொதுச் சாலையில் இயக்குவதற்கு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், டிரைவரில்லா கார்களில் பாதுகாப்பு கருதி, ஓட்டுனர் கண்காணிப்பில் இயக்கும் வகையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அண்மையில் சீனாவில் முழுமையாக ஓட்டுனர் இல்லா கார்களை குறிப்பிட்ட நகரத்தில் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த சூழலில், தற்போது ஜெர்மனி அரசு டிரைவரில்லா கார்களை பொதுச் சாலைகளில் இயக்குவதற்கு சட்டம் இயற்றி உள்ளது. கடந்த வாரம் இந்த புதிய சட்டம் ஜெர்மனி பாராளுமன்றத்தின் கீழவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்நாட்டு பாராளுமன்றத்தில் இந்த சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, ஓட்டுனர் அமர்ந்து கண்காணிக்கும் அவசியம் துளியும் இல்லாமல் முழுமையான தானியங்கி தொழில்நுட்பத்தில் செல்லும் லெவல்-4 கார்களை பொதுச் சாலைகளில் அனுமதிக்க இந்த சட்டம் வகை செய்யும்.
அதேநேரத்தில், இந்த சட்டத்தின்படி குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இந்த டிரைவரில்லா கார்களை இயக்குவதற்கு அனுமதிக்கப்படும். ஆட்டோபான் மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் இந்த கார்களை இயக்குவதற்கு வழி வகை இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
அதாவது, அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ரோபோ டாக்சி என்று அழைக்கப்படும் டிரைவரில்லா டாக்சி கார்களாக இவை இயக்க அனுமதிக்கப்படும். அதேபோன்று, நிறுவனங்களின் பணியாளர்களுக்கான போக்குவரத்து சேவை மற்றும், டெலிவிரிப் பணிகளுக்கும் இந்த கார்கள் பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ரோபோ டாக்சி கார்களுக்கு விசேஷ காப்பீடு பெற வேண்டும் என்று டாக்சி நிறுவனங்களுக்கு நிபந்தனை வைக்கப்படும். அதேபோன்று, ரிமோட் முறையில் இந்த கார்களை கண்காணித்து இயக்க அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு முதல் ஜெர்மனியில் இந்த ரோபோ டாக்சி எனப்படும் டிரைவரில்லா வாடகை கார்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. பொதுச் சாலைகளில் முதல்முறையாக இந்த சேவையை கொண்டு வரும் நாடாக ஜெர்மனி மாறும் என்று தகவல்கள் கூறுகின்றன.
-
மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
-
உடனே திருப்பி கொண்டு வாங்க! பிரபல நிறுவனம் திடீர் அறிவிப்பு! விலை கம்மினு வாங்கீட்டு புலம்பும் உரிமையாளர்கள்!
-
இந்தியாவுலேயே நல்லா சேல்ஸ் ஆகுற கார் இதெல்லாம்! ஆனா இந்த விஷயம் தெரிஞ்சா யாரும் வாங்க மாட்டாங்க!