Just In
- 1 hr ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 2 hrs ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 3 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 4 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- News விவசாயிகளுக்கு நல்ல சேதி.. பயிர்க்கடன் தேவை? "அடங்கல்" இருக்கா? கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் மாற்றம்
- Movies அட செம சிம்ப்பிளா இருக்காங்களே.. மகன்களுடன் நயன்தாரா செஞ்ச செயலை பாருங்க
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பெங்களூரில் இருந்து காரில் சொந்த ஊருக்கு போறீங்களா? - 'இ-பாஸ்' பெறுவதற்கான வழிமுறைகள்!
கொரோனா பரவல் இரண்டாம் அலை மிக மோசமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் கொரோனா மிக வேகமாக பரவி வருவதால், கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் தமிழர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு இ-பாஸ் பெற்று செல்வது அவசியமாகி இருக்கிறது.
புதுச்சேரி தவிர்த்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வருவோருக்கு நாளை (ஏப்.26) முதல் இந்த இ-பாஸ் கட்டாயமாக்கப்படுகிறது. எனவே, சொந்த ஊருக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் முதலில் இ-பாஸ் விண்ணப்பித்து அனுமதி பெற்ற பின்னரே தங்களது பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்வது அவசியம்.
கடந்த ஆண்டு போலவே தற்போதும் இ-பாஸ் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வர இருக்கிறது. இ-பாஸ் பெறுவதற்கு தமிழக அரசின் https://eregister.tnega.org/#/user/pass என்ற இணையதளப் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
முதலாவதாக உங்களது மொபைல்போன் நம்பரை உள்ளீடு செய்ய வேண்டும். அதன்பிறகு உங்களது மொபைல்போனுக்கு ஒரு ஒடிபி நம்பர் வரும். இதனை வைத்து இ-பாஸ் விண்ணப்ப பக்கத்தில் உள்ளே நுழைய வேண்டும்.
அதன்பிறகு, சாலை, ரயில், விமானம் என எவ்வழியாக தமிழகத்திற்குள் வருகிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும். சாலை வழிப் பயணம் என்றால், எத்தனை பேர் செல்கிறீர்கள் என்ற விபரத்தையும், கார், வேன், பேருந்து என வாகன வகை விபரத்தையும் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், என்ன காரணத்திற்காக தமிழகத்திற்குள் வருகிறீர்கள் என்ற காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். திருமணம், அரசு ஒப்பந்தப் பணிகள், மருத்துவம், சுற்றுலா அல்லது இறுதிச் சடங்களில் பங்கேற்க செல்வது உள்ளிட்டவற்றில் தகுந்த காரணத்தை தெரிவிக்க வேண்டும்.
அத்துடன், விண்ணப்பிப்பவரின் அடையாளச் சான்றும் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். ஏதேனும் ஒரு அடையாளச் சான்றை ஸ்கேன் செய்து அதற்கான இடத்தில் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், சாலை வழியாக வருவோர் தங்களது வாகனத்தின் பதிவு எண் உள்ளிட்டத் தகவல்களையும் தெரிவிக்க வேண்டும். வேறு காரணங்கள் இருந்தால் அதனை தெரிவிப்பதற்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இ-பாஸுக்கு அனுமதி கொடுக்கப்படும். இது எளிய நடைமுறையாகத்தான் இருக்கிறது. இ-பாஸ் இல்லாமல் பயணிக்கும்போது மாநில அல்லது மாவட்ட எல்லைகளில் தடுத்து நிறுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, இ-பாஸ் பெற்றுக் கொண்டு பயணிப்பதே அசகவுரியங்களை தவிர்க்க உதவும்.
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!