Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 2 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- Movies அபிராமியை தீர்த்து கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- News பீகாரில் தொகுதி உடன்பாடு ஓவர்.. பாஜகவுக்கு சவால் கொடுக்க பகாக் பிளான் உடன் இறங்கும் இந்தியா கூட்டணி!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
முதல் பேட்டரி காரின் கேபினை பார்த்து பார்த்து செதுக்கி இருக்கும் ஹூண்டாய்!! உலகளவில் விரைவில் அறிமுகமாகிறது!
ஹூண்டாயின் புதிய ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரின் கேபினின் தோற்றம் காரின் உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள படங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
ஐயோனிக் 5 காரை உலகளவில் வருகிற பிப்ரவரி 23ஆம் தேதி அறிமுகப்படுத்த ஹூண்டாய் நிறுவனம் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. ஹூண்டாயின் முதல் பேட்டரி காரான இது எலக்ட்ரிக்-க்ளோபல் மாடுலர் ப்ளாட்ஃபாரத்தை உபயோகப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க பேட்டரி காருக்கான இந்த ப்ளாட்ஃபாரத்தினால் ஐயோனிக் 5 காரின் உட்புற கேபினை மிகவும் விசாலமாக, கஸ்டமைஸ்ட் செய்வதற்கு ஏதுவானதாக எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. தற்போது நமக்கு கிடைத்துள்ள படங்களில் இந்த காரின் கேபின் பெரும்பான்மையாக துணியால் மூடப்பட்டுள்ளது.
மற்ற நடுத்தர அளவு க்ராஸ்ஒவர்களை போல் இல்லாமல் புதிய ஐயோனிக் 5 கார் இ-ஜிஎம் ப்ளாட்ஃபாரத்தால் நீளமான வீல்பேஸ் மற்றும் தட்டையான தரையினை பெற்றிருக்கும். இதனை ஹூண்டாயின் உலகளாவிய வடிவமைப்பு மையத்தின் முதன்மை அதிகாரியும் மூத்த துணை தலைவருமான சாங்யூப் லீ உறுதிப்படுத்தி உள்ளார்.
மேலும் இந்த ப்ளாட்ஃபாரம் மைய கன்சோலை முன்னும் பின்னும் தள்ள அனுமதிக்கும் என்பதால் இந்த எலக்ட்ரிக் காரில் இருந்து வெளியேறுவதும் நுழைவதும் எளிதானதாக இருக்கும். இத்தகைய மைய கன்சோலிற்கு யுனிவர்செல் ஐலேண்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஓட்டுனர் மட்டுமின்றி அனைத்து பயணிகளுக்கும் கால்களுக்கான தலையணை உடன் இருக்கை வழங்கப்பட்டுள்ளது. இதனால் கார் ரீசார்ஜ் ஆகும்போது பயணிகளும் பயணத்திற்கு இடையே சற்று ஓய்வு எடுத்து கொள்ளலாம். அதேபோல் அனைத்து இருக்கைகளையும் முன்னும் பின்னும் தள்ளும் வகையிலேயே ஹூண்டாய் நிறுவனம் வழங்கும்.
ஏற்கனவே கூறப்பட்டதுபோல் கேபினில் இருக்கைகள் அனைத்தும் துணியால் மூடப்பட்டுள்ளன. இதனால் பயன்படுத்த, பயன்படுத்த இருக்கைகளின் நிறம் மாற வாய்ப்புண்டு. அதேநேரம் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களின் மூலம் பெறப்பட்ட மெட்டிரீயல்களினாலும் ஐயோனிக் 5 காரின் கேபின் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு