Just In
- 41 min ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 2 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 4 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 5 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கியா பிராண்டில் புதிய எம்பிவி காரா?! 2022ல் அறிமுகமாகுகிறது, இதுதான் பெயரா?
2022ல் புதிய நடுத்தர-அளவு எம்பிவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதை கியா நிறுவனம் இப்போதே உறுதிப்படுத்தியுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த 2019ஆம் ஆண்டில் செல்டோஸ் எஸ்யூவியின் மூலம் தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நுழைந்தது. அதன்பின் இந்த நிறுவனத்தில் இருந்து இந்திய சந்தைக்கான முதல் எம்பிவி காராக கார்னிவல் அறிமுகமானது.

இவற்றை தொடர்ந்து போட்டி மிகுந்த காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் சொனெட் மாடலின் மூலம் விரைவாகவே நுழைய திட்டமிட்ட கியா நிறுவனத்திற்கு கொரோனா வைரஸினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் பெரும் தடையாக அமைந்தன.

இதனால் திட்டமிட்டதில் இருந்து சிறிது தாமதமாகி கடந்த 2020 இறுதியில்தான் இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது. இருப்பினும் எதிர்பார்த்தப்படி இந்த கியா காருக்கு நல்லப்படியான வரவேற்பு இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்து வருகிறது.

சொனெட்டிற்கு அடுத்து எந்த கார் வெளிவரும் என கியா கார் பிரியர்கள் காத்திருந்த நிலையில் தற்போது கியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் மறைப்புடன் புதிய நடுத்தர-அளவு எம்பிவி காரின் படம் கொண்டுவரப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வைக்கல் வெப் என்ற இணையத்தள பக்கத்தின் மூலம் கிடைத்துள்ள இது தொடர்பான படத்தில் இந்த புதிய எம்பிவி காரின் வருகை அடுத்த 2022 ஜனவரியில் இருக்கும் என குறிப்பிட்டுள்ள கியா நிறுவனம், இந்த புதிய காருக்கு தற்போதைக்கு கேஒய் என்ற குறியீட்டு பெயரை சூட்டியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள இந்த ஆவண படங்களின் மூலம் பார்க்கும்போது புதிய கேஒய் எம்பிவி காரை வருடத்திற்கு 50 ஆயிரம் யூனிட்கள் தயாரிக்க கியா திட்டமிட்டுள்ளதை அறிய முடிகிறது. அதேநேரம் கேஒய் காரை வருடத்திற்கு 26,000 யூனிட்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இந்த தென் கொரிய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கியா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஆந்திராவில் தொழிற்சாலை உள்ளது. அங்கிருந்துதான் இந்த நிறுவனம் செல்டோஸ், சொனெட் கார்களை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்தும் அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் வருகிறது.

இதில் சொனெட் வருடத்திற்கு 1 லட்ச யூனிட்களும், சொனெட் 70 ஆயிரம் யூனிட்களும் இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டு சந்தைப்படுத்தப்பட்டு வருவதாக இந்த ஆவண படங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா கார்களின் அதே எஸ்பி2 ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில்தான் கியா கேஒய் எம்பிவி காரும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் செல்டோஸில் வழங்கப்படுகின்ற பிரபலமான 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகள் இந்த காரிலும் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இந்தியாவில் கியாவின் கேஒய் எம்பிவி காருக்கு மாருதி சுஸுகி எர்டிகா, மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் டொயோட்டா இன்னோவா போன்றவை போட்டியினை தர தயாராகவுள்ளன.